search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணவருடன் தகராறு இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை
    X

    கணவருடன் தகராறு இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை

    • கார்த்திக்( வயது 30) விவசாயி. இவரது மனைவி வேண்டாமலை(24). இவர்களுக்கு 2 ஆண் குழந்தை உள்ளது.
    • ஆண் குழந்தைக்கு முதல் பிறந்தநாள் வருவதால் அன்று பிரியாணி சமைத்து அனைவருக்கும் கொடுக்கும்படி கார்த்திக்கிடம் கேட்டுள்ளார்.

    கள்ளக்கறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்( வயது 30) விவசாயி. இவரது மனைவி வேண்டாமலை(24). இவர்களுக்கு 2 ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வேண்டாமலை அவரது 2 -வது ஆண் குழந்தைக்கு முதல் பிறந்தநாள் வருவதால் அன்று பிரியாணி சமைத்து அனைவருக்கும் கொடுக்கும்படி கார்த்திக்கிடம் கேட்டுள்ளார். அதற்கு கார்த்திக் குடும்ப சூழ்நிலை சரியில்லை என்றும் இந்த வருடம் செய்ய வேண்டாம் என்றும் கூறி மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த கார்த்திக்கின் மனைவி வேண்டாமலை வீட்டில் விவசாய நிலத்திற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது. மயக்க நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ள அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வேண்டாமலையின் தந்தை லோகநாதன் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×