search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம மக்கள் போராட்டம்
    X

    கண்டன ஆர்ப்பாட்டம்.

    கிராம மக்கள் போராட்டம்

    • ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரியும் ஒருவருக்கு தமிழ் பேசத் தெரியவில்லை இதனால் ஏழை மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
    • தமிழ் பேசத் தெரிந்த மேலாளரை நியமிக்க வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டம்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே பெருந்தரக்குடி ஊராட்சிக்கு ட்பட்ட குளிக்கரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரியும் வேறு மாநிலத்தை சேர்ந்த மேலாளர் ஒருவர் பணி புரிந்து வருகிறார்.

    இவருக்கு தமிழ் பேசத் தெரியவில்லை.

    இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் சிரமம் அடைந்து வந்தனர்.

    இங்கு கிராமப் பகுதி என்பதால் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணம் பெறக்கூடியவர்களும் ஏழை, எளிய மக்களுமே இந்த வங்கியை பயன்படு த்துவதால் அவர்களுக்கு தமிழ் தெரிந்த ஊழியர்கள் இருந்தால்தான் எளிதாக தங்களது சேவையை பெற முடியும் என்ற நிலை உள்ளது.

    இதனால் அந்த மேலா ளரை மாற்றி விட்டு தமிழ் பேசத் தெரிந்த மேலாளரை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி வங்கி முன்பு கிராம மக்கள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்தரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் குளிக்கரை, தியாகராஜபுரம், பெருந்தரக்குடி, தேவர்க ண்டநல்லூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விடுதலை சிறுத்தைகள் மதிமுக உள்ளிட்ட கட்சி மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தெலுங்கு மொழி பேசும் மேலாளரை மாற்றி விட்டு தமிழ் பேசத் தெரிந்த மேலாளரை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கத்தை எழுப்பினர்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆறு மாத காலமாக போராடி வருவதாகவும், இதனை நிறைவேற்றாவிட்டால் அடுத்து வங்கிக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் எனவும் போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    மேலும் எனவே உடனடியாக தமிழ் தெரியாத மேலாளரை மாற்றி விட்டு தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் மேலாளரை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×