search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் எரித்துக்கொலை
    X

    இளம்பெண் எரித்துக்கொலை.

    இளம்பெண் எரித்துக்கொலை

    • கொட்டாம்பட்டி அருகே இளம்பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டார்.
    • பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்று உடலை எரித்திருப்பது தெரியவந்தது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டியில் இருந்து பொட்டப்பட்டிக்கு செல்லும் சாலையில் உள்ள ஒரு தென்னந்ேதாப்பில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் உடல் கருகிய நிலையில் நேற்று பிணமாக கிடந்தார்.

    இதனை அந்த தென்னந்தோப்பின் காவ லாளியான வெற்றிசெல்வம் என்பவர் பார்த்து கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் பத்பநாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    பிணமாக கிடந்த அந்த பெண் சுடிதார் அணிந்திருந்தார். மேலும் அந்த பெண்ணின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயம் இருந்தது. ஆகவே அவரை யாரோ மர்மநபர்கள் தென்னந்தோப்புக்கு கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்று உடலை எரித்திருப்பது தெரியவந்தது.

    அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்ற எந்த விவரமும் தெரியவில்லை. இளம்பெண் கொன்று எரிக்கப்பட்ட தகவல் அறிந்த மதுைர மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    இதைதொடர்ந்து அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கொைல செய்யப்பட்ட பெண் யார்? என்பதை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் பத்மநாபன் மற்றும் போலீசார் அடங்கிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று துப்பு துலக்கி வருகிறார்கள். அந்த பெண்ணை அடையாளம் காண்பதற்காக மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலை யங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட அண்டை மாவட்ட போலீஸ் நிலையங்களிலும் யாரேனும் மாயமாகி இருக்கிறார்களா? என்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×