search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலானி பற்றிய உண்மைகளை வெளியிடுவேன் - காந்தியின் சகோதரர் மிரட்டல்
    X

    நிலானி பற்றிய உண்மைகளை வெளியிடுவேன் - காந்தியின் சகோதரர் மிரட்டல்

    காந்தி லலித் குமார் தற்கொலைக்கு தான் காரணமில்லை என்று கூறும் நடிகை நிலானி தற்கொலைக்கு முயன்ற நிலையில், காந்தி பற்றி தவறான தகவலை பரப்பினால் நிலானியின் உண்மை முகத்தை வெளியிடுவேன் என்று கூறியுள்ளார். #Nilani
    சென்னை மதுரவாயலை அடுத்த அஷ்டலட்சுமி நகரில் வசித்து வருபவர் டி.வி. நடிகை நிலானி. இவர் வளசரவாக்கத்தை சேர்ந்த காந்தி லலித்குமார் என்பவரை காதலித்து வந்தார்.

    இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொல்லை கொடுப்பதாக காதலன் மீது மயிலாப்பூர் போலீசில் நிலானி புகார் கொடுத்தார். இதனால் மனம் உடைந்த காந்தி லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    அவர் இறப்பதற்கு முன்பு நிலானியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக நிலானி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் செய்தார். அதில், “தனக்கும் காந்தி லலித்குமார் தற்கொலைக்கும் சம்பந்தம் இல்லை. அவருடன் ஒன்றாக சுற்றியது உண்மை.

    ஆனால் நாங்கள் திருமணம் செய்தது கொள்ளவில்லை. அவரது நடவடிக்கை சரியில்லாததால் அவரை விட்டு விலகி சென்று விட்டேன்” என்று கூறி இருந்தார்.



    இந்த நிலையில் நடிகை நிலானி நேற்று மதியம் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் பேட்டி அளிக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்ததால் தொலைக்காட்சி நிருபர்கள் அங்கு குவிந்திருந்தனர்.

    அப்போது அவரது 2 குழந்தைகளும் கீழே இறங்கி ஓடி வந்து அம்மா கொசு மருந்து குடித்துவிட்டதாக கதறினார்கள். உடனே அங்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அதில் ஏற்றி அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காந்தி லலித்குமாரின் தற்கொலைக்கு நடிகை நிலானிதான் காரணம், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காந்தி உறவினர்கள் வற்புறுத்தி வந்தனர். இதனால் அவர் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றார்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நிலானியை பார்த்துக் கொள்ள யாரும் வரவில்லை. இதனால் அவரது 2 குழந்தைகளும் ஆதரவின்றி தவிக்கிறார்கள்.

    முன்னதாக ‘லலித் குமாரின் தற்கொலைக்கு தாம் காரணமில்லை என விளக்கமளித்த நிலானி அவருக்கு ஆண்மை இல்லை’ என்று குற்றம் சாட்டினார். நிலானியின் குற்றச்சாட்டுக்கு திருவண்ணாமலையில் வசிக்கும் லலித்குமார் அண்ணன் ரகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து, ரகு கூறியதாவது:-

    என் தம்பி காந்தி லலித்குமாரும், நடிகை நிலானியும் 3 ஆண்டுகளாக ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். திருமணமாகாத என் தம்பி, நிலானிக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்தார். நிலானியின் 2 குழந்தைகளையும் தன்னுடைய குழந்தைகள் போல் கவனித்து வந்தார்.

    லலித்குமாரை பற்றி அவதூறு பரப்புவதை நிலானி நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவருடன் பழகியவர்கள் யார், யார்? என் தம்பியிடம் எவ்வளவு பணம் பறித்தார் என்பதற்கான, முக்கிய ஆதாரங்களை வெளியிடுவேன்.

    நிலானியின் குழந்தைகள் நலன் கருதி, ஆதாரங்களை வெளியிட வேண்டாம் என நினைக்கிறேன். மீண்டும் அவதூறு பரப்பினால் நிலானி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Nilani #GandhiLalithKumar #Raghu

    Next Story
    ×