search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புத்தம் புதிய ஆல்டோ இந்திய வெளியீட்டு விவரங்கள்
    X

    புத்தம் புதிய ஆல்டோ இந்திய வெளியீட்டு விவரங்கள்

    மாருதி சுசுகி நிறுவனத்தின் புத்தம் புதிய ஆல்டோ வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.




    மாருதி சுசுகி நிறுவனத்தின் புத்தம் புதிய ஆல்டோ இந்தியாவில் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய தலைமுறை ஆல்டோ ஹேட்ச்பேக் தற்சமயம் விற்பனையாகும் ஆல்டோவிற்கு மாற்றாக அறிமுகமாகிறது. 

    மாருதி சுசுகி ஆல்டோ இந்தியாவில் அறிமுகமானது முதல் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மாடல் இதுவரை சுமார் 35 லட்சத்துக்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.

    புதிய ஆல்டோ ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் போது பாரதிய புதிய வாகன பாதுகாப்பு திட்டத்தின் (BNVSAP) கீழ் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அந்நிறுவனம் தான் தயாரிக்கும் அனைத்து கார்களுக்கும் நட்சத்திர குறியீடுகளை வழங்குகிறது. இவை வாகனத்தின் பாதுகாப்பு அம்சத்தை வைத்து கடுமையான சோதனைகளுக்கு பின் வழங்கப்படுகிறது.



    பாதுகாப்பு அம்சங்கள் தவிர, புதிய கார் பிஎஸ்-IV ரக எமிஷன்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஆல்டோ தற்போதைய மாடலை விட முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் இது ஜப்பானில் விற்பனை செய்யப்படும் மாடலை தழுவி உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் இதன் வடிவமைப்பு கான்செப்ட் ஃபியூச்சர் எஸ் சார்ந்து இருக்கும் என்றும் கூறப்பட்டது.

    மாருதி சுசுகி நிறுவனம் கான்செப்ட் ஃபியூச்சர் எஸ் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய வடிவமைப்பு தவிர இதில் முற்றிலும் புதிய வடிவமைப்பு தவிர, பல்வேறு வசதிகள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி இதில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் பவர் விண்டோஸ், எலெக்ட்ரிக் ORVM உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

    புதிய மாருதி சுசுகி ஆல்டோ மாடலில் 1.0 லிட்டர் இன்ஜின் வழங்கப்படலாம். இந்த இன்ஜின் 1.0-லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் யூனிட் 67 பிஹெச்பி, 91 என்எம் டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×