என் மலர்
செய்திகள்

2018 ஆட்டோ எக்ஸ்போவில் களமிறங்கும் ஹோன்டா செடான்
இந்திய சந்தையில் அடுத்த தலைமுறை ஹோன்டா அமேஸ் வெளியீடு 2018 ஆட்டோ எக்ஸ்போவில் நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
ஹோன்டா நிறுவனத்தின் அடுத்த தலைமுறை அமேஸ் இந்தியாவில் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழா பிப்ரவரி மாதம் துவங்க இருக்கிறது. அந்த வகையில் ஹோன்டாவின் காம்பாக்ட் செடான் மாட் சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது. ஆட்டோகார் இந்தியா வெளியிட்டுள்ள தகவல்களின் படி அடுத்த தலைமுறை ஹோன்டா அமேஸ் வடிவமைப்பு அந்நிறுவனத்தின் சிட்டி மாடலை தழுவி மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
2018 ஹோன்டா அமேஸ் கடுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்றும் உள்புற கேபின் அதிக இடவசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அமேஸ் கார் சப்-காம்பேக்ட் ரக பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவுற்றிருக்கும் நிலையில் 2,50,000 ஹோன்டா அமேஸ் யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. எனினும் இந்திய சந்தையில் அதிக எஸ்.யு.வி. மற்றும் கிராஸ்ஓவர் மாடல்கள் வெளியீடு காரணமாக அமேஸ் விற்பனை குறைந்திருக்கிறது. அந்த வகையில் புதிய அமேஸ் வெளியீடு சரியான நேரத்தில் அமைந்திருக்கிறது.
அடுத்த தலைமுறை அமேஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படலாம். இவை முறையே 88 பி.எச்.பி. பவர் மற்றும் 100 பி.எச்.பி. பவர் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் கொண்டிருக்கும். 2018 ஹோன்டா அமேஸ் மேம்படுத்தப்பட்ட பிளஷ் இன்டீரியர் மற்றும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
Next Story






