என் மலர்
செய்திகள்

புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர்: இந்திய வெளியீடு மற்றும் முழு தகவல்கள்
ஜப்பானை சேர்ந்த மிட்சுபிஷி நிறுவனத்தின் புதிய அவுட்லேண்டர் வெளியீடு தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
ஜப்பான் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான மிட்சுபிஷி விரைவில் புதிய அவுட்லேண்டர் மாடல் காரினை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கிராஸ் ஓவர் மாடல் ஏற்கனவே அந்நிறுவன அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி்யுள்ள தகவல்களின் படி மிட்சுபிஷி அவுட்லேண்டர் முன்பதிவு அடுத்த ஆண்டு (2018) ஜனவரி அல்லது பிப்ரவரி மாத வாக்கில் துவங்கி விநியோகம் மே மாத வாக்கில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் பெட்ரோல் மாடல் மட்டுமே வெளியிடப்படும் என்றும் கூடுதலாக டீசல் மாடல் பின்னர் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய கிராஸ்ஓவர் மாடல் 2.4 லிட்டர் நான்கு சிலிண்டர் இன்ஜின் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 169 பி.எச்.பி. பவர் மற்றும் 225 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு சி.வி.டி. கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

புதிய அவுட்லேண்டர் மாடல் மிட்சுபிஷியின் சூப்பர்-ஆல் வீல் கண்ட்ரோல் AWD சிஸ்டம் வழங்கப்படும், இது அனைத்து சக்கரகங்களுக்கும் தேவையான திறனை வழங்கும் என கூறப்படுகிறது. கிராஸ்ஓவர் மாடலில் பல்வேறு டிரைவிங் மோட்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்டீரியர் அம்சங்களை பொருத்த வரை 6.1 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெதர் சீட், டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் 710 வாட் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்த வரை ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப் மற்றும் வைப்பர்களும், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் மாடலில் ஆறு ஏர்பேக், ABS, EBD, டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ஆக்டிவிட்டி ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது. மிட்சுபிஷி அவுட்லேண்டர் இரண்டாம் தலைமுறை மாடல் 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு மோசமான விற்பனை காரணமாக நான்கு ஆண்டுகளில் திரும்ப பெறப்பட்டது.
ஜப்பான் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான மிட்சுபிஷி விரைவில் புதிய அவுட்லேண்டர் மாடல் காரினை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கிராஸ் ஓவர் மாடல் ஏற்கனவே அந்நிறுவன அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி்யுள்ள தகவல்களின் படி மிட்சுபிஷி அவுட்லேண்டர் முன்பதிவு அடுத்த ஆண்டு (2018) ஜனவரி அல்லது பிப்ரவரி மாத வாக்கில் துவங்கி விநியோகம் மே மாத வாக்கில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் பெட்ரோல் மாடல் மட்டுமே வெளியிடப்படும் என்றும் கூடுதலாக டீசல் மாடல் பின்னர் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய கிராஸ்ஓவர் மாடல் 2.4 லிட்டர் நான்கு சிலிண்டர் இன்ஜின் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 169 பி.எச்.பி. பவர் மற்றும் 225 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு சி.வி.டி. கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

புதிய அவுட்லேண்டர் மாடல் மிட்சுபிஷியின் சூப்பர்-ஆல் வீல் கண்ட்ரோல் AWD சிஸ்டம் வழங்கப்படும், இது அனைத்து சக்கரகங்களுக்கும் தேவையான திறனை வழங்கும் என கூறப்படுகிறது. கிராஸ்ஓவர் மாடலில் பல்வேறு டிரைவிங் மோட்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்டீரியர் அம்சங்களை பொருத்த வரை 6.1 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெதர் சீட், டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் 710 வாட் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்த வரை ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப் மற்றும் வைப்பர்களும், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் மாடலில் ஆறு ஏர்பேக், ABS, EBD, டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ஆக்டிவிட்டி ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது. மிட்சுபிஷி அவுட்லேண்டர் இரண்டாம் தலைமுறை மாடல் 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு மோசமான விற்பனை காரணமாக நான்கு ஆண்டுகளில் திரும்ப பெறப்பட்டது.
Next Story






