search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏழு பேர் அமரக்கூடிய வேகன் ஆர் - இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது
    X

    ஏழு பேர் அமரக்கூடிய வேகன் ஆர் - இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது

    இந்தியாவில் மாருதி சுசுகி நிருவனத்தின் ஏழு பேர் அமரக்கூடிய வேகன் ஆர் மாடலை சோதனை செய்வது, சமீபத்திய ஸ்பை படங்களில் தெரியவந்துள்ளது. #Marutisuzuki #WagonR


    இந்தியாவில் புதிய வகை வேகன் ஆர் மாடல் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய கார் எர்டிகா மாடலின் கீழ் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கார் குறித்து மாருதி சுசுகி எவ்வித தகவலும் வழங்காத நிலையில், புதிய ஏழு பேர் அமரக்கூடிய வேகன் ஆர் இந்தியாவில் வெளியாகுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.  

    புதிய தலைமுறை சுசுகி சோலியோ ஏற்கனவே ஜப்பானில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரில் புதிய ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ மற்றும் புதிய தலைமுறை எர்டிகா மாடல்களில் வழங்கப்பட்ட ஹார்டெக்ட் பிளாட்ஃபார்ம் வழங்கப்பட்டுள்ளது.



    காரின் முன்பக்கம் ஜப்பான் நாட்டு வழக்கப்படி காட்சியளிக்கிறது. சிறிய பொனெட், தடித்த க்ரோம் ஸ்லாட் க்ரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஸ்லைடர் கதவுகள் வழங்கப்பட்டுள்ளது. சோலியோ மாடலில் ஐந்து பேர் பயணம் செய்ய முடியும். உள்புறமும், வெளிப்புறத்தை போன்றே மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

    அதன்படி உள்புறத்தின் மத்தியில் சென்டர் கன்சோலில் மவுன்ட் செய்யப்பட்ட கியர் ஸ்டிக் கொண்டிருக்கி்றது. தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டாப் என்ட் வேரியன்ட்-இல் வழங்கப்படும் என தெரிகிறது. 

    புதிய சோலியா மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 91 பி.எஸ். மற்றும் 118 என்.எம். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை AMT மற்றும் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: Rushlane
    Next Story
    ×