search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராதிகா சரத்குமார்
    X
    ராதிகா சரத்குமார்

    தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்காக மக்கள் மவுன புரட்சி செய்ய உள்ளனர்- ராதிகா சரத்குமார் பேட்டி

    எங்கள் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது, மக்கள் மவுனபுரட்சி செய்ய உள்ளனர். அரசியல் மாற்றம் நிகழ வேண்டும் என்றுதான் நானும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து நேற்று இரவு ராதிகா சரத்குமார் பிரசாரம் செய்தார்.

    இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை ராதிகா சரத்குமார் சாமி தரிசனம் செய்தார்.

    எங்கள் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது, மக்கள் மவுனபுரட்சி செய்ய உள்ளனர். அரசியல் மாற்றம் நிகழ வேண்டும் என்றுதான் நானும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன்.

    தமிழகத்தில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி ஒரு சரியான தலைமை இல்லாமல் செயல்படுகிறது. ஜெயலலிதாவுக்கு பிறகு அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும், கூட்டணி வைத்துள்ளதும் நிறைய பேருக்கு பிடிக்கவில்லை.

    கடந்த 10 ஆண்டுகளில் கலைத்துறையினருக்கு அ.தி.மு.க. ஆட்சி ஏதும் செய்யவில்லை. வருமான வரி சோதனை என்பது எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான்.

    கடந்த முறை எங்களது இல்லத்திலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த வருமான வரித் துறையினரின் சோதனையை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். தகவலின் அடிப்படையில்தான் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

    தி.மு.க.வினர் நல்லவர்கள் போல் போர்வையை போர்த்திக்கொண்டு இருக்கிறார்கள். தங்கள் கட்சியினரை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் தன்மை தி.மு.க. தலைமைக்கு கிடையாது. தி.மு.க. நகைச்சுவை பேச்சாளர்கள் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர்கள் என அனைவருமே பெண்களை தரக்குறைவாக பேசுவது வருத்தம் அளிக்கிறது.இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

    இது போன்றவர்கள் ஆட்சிக்கு வருவது நம்ப முடியாததாக இருக்கிறது. ஜெயலலிதா இருந்தபோது பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது. தமிழகத்தில் பா.ஜ.க. மீது மக்களுக்கு பெரிய அளவில் பற்றோ பிடிப்போ இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×