என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திமுக கூட்டணியை 200 தொகுதிகளில் வெற்றிபெற செய்யவேண்டும்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Byமாலை மலர்30 March 2021 3:37 PM GMT (Updated: 30 March 2021 3:37 PM GMT)
நாடாளுமன்ற தேர்தலில் எப்படி எழுச்சியோடு வெற்றி பெற வைத்தீர்களோ அதே எழுச்சியோடு இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியை 200 தொகுதிகளில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை ஆதரித்து மொடக்குறிச்சியில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு வாக்குகள் சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.
தற்போது நடக்கும் சட்டமன்ற தேர்தல் கருத்து கணிப்பில் தி.மு.க. 180 தொகுதிகளில் வெற்றி பெரும் என்று கூறுகிறார்கள்.
அது பத்தாது நாடாளுமன்ற தேர்தலில் எப்படி எழுச்சியோடு வெற்றி பெற வைத்தீர்களோ அதே எழுச்சியோடு இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியை 200 தொகுதிகளில் வெற்றி பெற செய்ய வேண்டும். நம்மை எதிர்த்து நிற்கும் கட்சிகளை டெபாசிட் இழக்க வைக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் பலர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X