என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிமுகவில் 8200 பேர் விருப்ப மனு தாக்கல்- நாளை நேர்காணல்
Byமாலை மலர்3 March 2021 1:40 PM GMT (Updated: 3 March 2021 1:40 PM GMT)
தேர்தலுக்கு குறைவான நாட்களே இருப்பதால் ஒரே நாளில் நேர்காணலை நடத்தி முடிக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.
சென்னை:
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு வினியோகம் கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. மார்ச் 5ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தலுக்கு மிக குறைவான நாட்களே இருந்த காரணத்தால், மார்ச் 3ம் தேதிக்குள், அதாவது இன்று மாலை 5 மணிக்குள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை 5 மணியுடன் விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்தது. 8200க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
விருப்ப மனுக்களை பெற்ற அதே வேகத்துடன், நேர்காணலையும் விரைவாக நடத்தி முடிக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. அதன்படி நாளை நேர்காணல் நடத்தப்படுகிறது. ஒரே நாளில் நேர்காணலை நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் புதுச்சேரி, கேரள மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட விரும்பி மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணலும் நாளை நடைபெற உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X