என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூரில் தேமுதிக சட்டமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்- எல்கே சுதீஷ் பங்கேற்பு
Byமாலை மலர்2 March 2021 4:37 PM GMT (Updated: 2 March 2021 4:37 PM GMT)
வேலூர் மாநகர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்றார்.
வேலூர்:
வேலூர் மாநகர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் கிரீன்சர்க்கிள் அருகே நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஏ.கே.கோபிநாத் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், விவசாய அணி துணைச்செயலாளருமான ஆர்.என்.ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் கே.புருஷோத்தமன் வரவேற்றார்.
இதில், சிறப்பு அழைப்பாளராக தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், சட்டமன்ற தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், கட்சி தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவது, கிராமங்கள்தோறும் சென்று வாக்குகள் சேகரிப்பது என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், வேலூர் மாநகர் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X