search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்.கே.சுதீஷ் பேசிய காட்சி.
    X
    எல்.கே.சுதீஷ் பேசிய காட்சி.

    வேலூரில் தேமுதிக சட்டமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்- எல்கே சுதீஷ் பங்கேற்பு

    வேலூர் மாநகர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்றார்.
    வேலூர்:

    வேலூர் மாநகர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் கிரீன்சர்க்கிள் அருகே நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஏ.கே.கோபிநாத் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், விவசாய அணி துணைச்செயலாளருமான ஆர்.என்.ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் கே.புருஷோத்தமன் வரவேற்றார்.

    இதில், சிறப்பு அழைப்பாளராக தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், சட்டமன்ற தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், கட்சி தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவது, கிராமங்கள்தோறும் சென்று வாக்குகள் சேகரிப்பது என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், வேலூர் மாநகர் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×