search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்
    X
    எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்

    பட்ஜெட் உரையை புறக்கணித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

    அ.தி.மு.க.வினர் பேசுவதற்கு வாய்ப்பு வழங்க இயலாது என்று சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியதும் சபாநாயகர் அப்பாவு. ‘இந்த தடவை தமிழக சட்டசபையில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.

    அதன்பிறகு அவர் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

    அப்போது எதிர்கட்சி தலைவர்
    எடப்பாடி பழனிசாமி எழுந்து பேசத் தொடங்கினார். ஆனால் அவருக்கு மைக் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் என்ன பேசுகிறார் என்பது யாருக்கும் கேட்கவில்லை.

    இதற்கிடையே சபாநாயகர் குறுக்கிட்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    அ.தி.மு,க. உறுப்பினர்கள் அனைவரும் அமைதியாக தங்கள் இருக்கையில் அமர வேண்டும். இன்று முதன் முதலாக
    இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. திங்கட்கிழமை விவாதம் நடைபெறும்.

    அன்றைய தினம் உங்களது கருத்துக்களை நீங்கள் தெரிவிக்கலாம் திங்கட்கிழமை நீங்கள் பேசுவதற்கு உரிய வாய்ப்பு தருகிறேன்.

    சபாநாயகர்

    இவ்வாறு சபாநாயகர் கூறினார்.

    ஆனால் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதை ஏற்கவில்லை. தொடர்ந்து அவர் பேசினார். அவர் கையில் இருந்த குறிப்புகளை பார்த்து வாசித்தார்.

    ஆனால் அவருக்கு மைக் இணைப்பு கொடுக்கப்படாததால் அவர் பேச்சு கேட்கவில்லை. இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க எம்.எல். ஏ.க்கள் அனைவரும் எழுந்து கோ‌ஷமிட்டனர்.

    இதனால் சபையில் கூச்சல் நிலவியது. அமளிகாரணமாக அ.தி.மு.கவினர் பேசியது கேட்கவில்லை.

    அ.தி.மு.க.வினர் பேசுவதற்கு வாய்ப்பு வழங்க இயலாது என்று சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் கேட்டுக்கொண்டார்.

    அதன்படி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூச்சல், அமளிக்கு மத்தியில் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

    Next Story
    ×