search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு பள்ளிகளில் கழிப்பிடத்தை சுத்தம் செய்ய 1000 வாகனங்கள் வருகை - செங்கோட்டையன்
    X

    அரசு பள்ளிகளில் கழிப்பிடத்தை சுத்தம் செய்ய 1000 வாகனங்கள் வருகை - செங்கோட்டையன்

    அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பிடத்தை சுத்தம் செய்ய வரும் செப்டம்பர் மாத இறுதியில் ஜெர்மனி நாட்டில் இருந்து ரோட்டரி சங்கம் சார்பில் 1000 வாகனங்கள் தமிழகம் வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். #MinisterSengottaiyan

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பாரியூர் வெள்ளாள பாளையம் தொடக்கப் பள்ளியில் இன்று ‘‘ஸ்மார்ட் கிளாஸ்’’ வகுப்பு தொடக்க விழா நடந்தது.

    விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை தொடங்கி வைத்தார்.

    அதன் பிறகு அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக கல்வித்துறையில் மாணவ- மாணவிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    வரும் செப்டம்பர் மாத இறுதியில் ஜெர்மனி நாட்டில் இருந்து ரோட்டரி சங்கம் சார்பில் 1000 வாகனங்கள் தமிழகம் வருகிறது.

    இந்த வாகனங்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று அங்குள்ள கழிப்பிடத்தை சுத்தம் செய்யும். முதல் கட்டமாக 20 ஆயிரம் பள்ளி கூடங்களுக்கு இந்த வாகனங்கள் சென்று கழிப்பிட கட்டமைப்பை சுத்தம் செய்யும்.

    கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் முதன் முதலாக இந்த கழிப்பிட வாகனங்கள் இயக்கப்படும். அதன் பிறகு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு சென்று பள்ளிகளில் கழிப்பிடத்தை சுத்தம் செய்யும்.

    அரசு பள்ளிகளில் உள்ள செயல்படாத பெற்றோர்- ஆசிரியர் சங்கம் மாற்றி அமைக்கப்படும்.

    டி.ஆர்.பி. ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு எழுதியவர்களுக்குழு விரைவில் பணி வழங்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan

    Next Story
    ×