search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. நடத்திய மாதிரி சட்டமன்ற கூட்டம் - தூத்துக்குடி சம்பவத்திற்கு கண்டனம்
    X

    தி.மு.க. நடத்திய மாதிரி சட்டமன்ற கூட்டம் - தூத்துக்குடி சம்பவத்திற்கு கண்டனம்

    சென்னையில் இன்று தி.மு.க. நடத்திய மாதிரி சடடமன்ற கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. #DMKSampleAssembly
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணையில் உள்ள குளறுபடிகள் இருப்பதாக தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தி.மு.க. சட்டமன்ற கூட்டத் தொடரை புறக்கணிக்கும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். மேலும், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.



    அதன்படி, அண்ணா அறிவாலயத்தில் இன்று மாதிரி சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். எம்எல்ஏ கருணாசும் பங்கேற்றார். திமுக கொறடா சக்கரபாணி அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார். எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டார்.

    கூட்டம் தொடங்கியதும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக பேசப்பட்டது. #DMKSampleAssembly
    Next Story
    ×