என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.எல்.ஏ.க்கள் யாரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள்: செங்கோட்டையன்
    X

    எம்.எல்.ஏ.க்கள் யாரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள்: செங்கோட்டையன்

    தங்கள் கோரிக்கைகளுக்காக ராஜினாமா செய்யப்போவதாக அ.தி.மு.க.. எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர் கூறிய நிலையில், யாரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
    ஈரோடு:

    திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி யூனியனில் வளர்ச்சி பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். அப்போது நிருபர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாதபட்சத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதில் உறுதியாக இருப்பதாக கூறினார்.

    அருகில் இருந்த ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ., மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவில்லை என்றால் நானும் ராஜினாமா செய்ய தயார். மாவட்டத்தில் உள்ள மற்ற எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய வலியுறுத்துவேன் என்றார்.

    இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் வாழப்பாடியாரை தவிர, எம்.எல்.ஏ.க்கள் யாரும் தங்கள் கோரிக்கைக்காக ராஜினாமா செய்ததில்லை. அவ்வாறு ராஜினாமா செய்யவும் மாட்டார்கள். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து முதல்-அமைச்சர் பழனிச்சாமி பதிலளிப்பார். அ.திமு.க.வினர் அனைவரும் ஒரே அணியில் தான் உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×