என் மலர்
செய்திகள்

பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டதால் சசிகலாவை தனிப்பட்ட முறையில் நீக்க முடியாது: தம்பிதுரை
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டதால், அவரை தனிப்பட்ட முறையில் நீக்க முடியாது என்று அ.தி.மு.க. அம்மா அணியின் மூத்த தலைவரான தம்பிதுரை கூறினார்.
ஆலந்தூர்:
பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. அம்மா அணியின் மூத்த தலைவருமான தம்பிதுரை நேற்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்து எடுத்தது பொதுக்குழு தான். அந்த பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் உள்பட எல்லோரும் கையெழுத்து போட்டு உள்ளனர். அதன்பிறகு தான் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பொதுக்குழு எடுத்த முடிவை தம்பிதுரை, எடப்பாடி, பன்னீர்செல்வம் போன்ற தனிப்பட்ட நபர் எப்படி மாற்ற முடியும்? சசிகலா பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டதால், அவரை தனிப்பட்ட முறையில் நீக்க முடியாது.
எனவே எந்த பிரச்சினை பற்றியும் பேச்சுவார்த்தை நடத்துவது மூலம்தான் தீர்வு காண முடியுமே தவிர, ஏதோ சில கருத்துக்களை மனதில் வைத்து பேசினால் சரி வராது. நேரிடையாக விவாதிக்க வேண்டும். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒற்றுமை உணர்வுடன் செயல்பட காத்திருக்கிறோம். சசிகலாவும், தினகரனும் சிறையில் இருப்பதால் கட்சியையும் ஆட்சியையும் எடப்பாடி பழனிசாமி வழி நடத்திக்கொண்டு இருக்கிறார். எதுவும் முடங்கவில்லை, செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.
இவ்வாறு தம்பிதுரை கூறினார்.
பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. அம்மா அணியின் மூத்த தலைவருமான தம்பிதுரை நேற்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்து எடுத்தது பொதுக்குழு தான். அந்த பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் உள்பட எல்லோரும் கையெழுத்து போட்டு உள்ளனர். அதன்பிறகு தான் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பொதுக்குழு எடுத்த முடிவை தம்பிதுரை, எடப்பாடி, பன்னீர்செல்வம் போன்ற தனிப்பட்ட நபர் எப்படி மாற்ற முடியும்? சசிகலா பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டதால், அவரை தனிப்பட்ட முறையில் நீக்க முடியாது.
எனவே எந்த பிரச்சினை பற்றியும் பேச்சுவார்த்தை நடத்துவது மூலம்தான் தீர்வு காண முடியுமே தவிர, ஏதோ சில கருத்துக்களை மனதில் வைத்து பேசினால் சரி வராது. நேரிடையாக விவாதிக்க வேண்டும். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒற்றுமை உணர்வுடன் செயல்பட காத்திருக்கிறோம். சசிகலாவும், தினகரனும் சிறையில் இருப்பதால் கட்சியையும் ஆட்சியையும் எடப்பாடி பழனிசாமி வழி நடத்திக்கொண்டு இருக்கிறார். எதுவும் முடங்கவில்லை, செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.
இவ்வாறு தம்பிதுரை கூறினார்.
Next Story






