search icon
என் மலர்tooltip icon

    கர்நாடகா தேர்தல்

    ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் வழங்கினார் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை
    X

    ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் வழங்கினார் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை

    • கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது.
    • இதனால் ஆளுநரிடம் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை ராஜினாமா கடிதம் வழங்கினார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 10-ம் தேதி நிறைவடைந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதன் முடிவில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, 137 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது. பா.ஜ.க. 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றியது. இதனால் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது.

    இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பசவராஜ் பொம்மை, ராஜ்பவனில் ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டை இன்று நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தினை வழங்கினார்.

    அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநரிடம் எனது ராஜினாமா கடிதம் வழங்கினேன். அது ஏற்கப்பட்டு விட்டது என தெரிவித்தார்.

    ஆளுநரை சந்திக்கும் முன் அவர் கூறுகையில், பா.ஜ.க.வின் இந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இந்தத் தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு தேசிய கட்சியாக ஒவ்வொரு விஷயங்களைப் பற்றியும் நாங்கள் ஆய்வு செய்வோம். எங்களுடைய அனைத்து தவறுகளையும் நாங்கள் ஆய்வுசெய்து பாராளுமன்ற தேர்தலில் மீண்டெழுந்து வருவோம் என கூறியுள்ளார்.

    Next Story
    ×