search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கோபத்தை காட்டும் ‘கண்ணாடி’
    X
    கோபத்தை காட்டும் ‘கண்ணாடி’

    கோபத்தை காட்டும் ‘கண்ணாடி’

    கோபத்தின் உச்சம், பிறர் மனதை காயப்படுத்தும் வார்த்தை பிரயோகமாகவே இருக்கும். கோபத்தில் வார்த்தைகளை கொட்டுவதற்கு முன்பு மூன்று முறை சிந்தியுங்கள். அந்த வழக்கம் மனதை நிதானப்படுத்த துணை நிற்கும்.
    கோபம், எதிர்மறை உணர்வுகளை தூண்டிவிட்டு நிம்மதியை குலைத்துவிடும். கோபத்தால் உறவுகளை இழந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஏராளம். கோபத்தை கட்டுப்படுத்த முடியுமா? -முடியும்! எப்படி?

    வாக்குவாதம் செய்யும்போதும், கோபம் கொள்ளும்போதும் சுவாசத்தில் தடுமாற்றம் உண்டாகும். சீராக சுவாசிக்க முடியாது. அந்த சமயத்தில் மூச்சை ஆழமாக உள் இழுத்து மெதுவாக வெளியேற்ற வேண்டும். அது உடலையும், மனதையும் அமைதிப்படுத்த உதவும். அதன் மூலம் கோபம் குறையும். தினமும் யோகாசனம் செய்வதை வழக்கமாக்கிக்கொள்வதும் கோபத்தை தணிக்க உதவும்.

    உணர்வுகளை மென்மையாக்கும் ஆற்றல் இசைக்கு உண்டு. கோபத்தை உருவாக்கும் சூழலில் மனதை அமைதிப்படுத்துவதற்கு பிடித்தமான இசை மீது கவனத்தை செலுத்தலாம். இசைக் கருவிகளை இசைக்கவும் செய்யலாம். அது மனநிலையை சீராக வைத்துக்கொள்வதற்கு துணைபுரியும்.

    மன அமைதிக்கு வித்திடும் மந்திர சொற்கள் புழக்கத்தில் இருக்கின்றன. கடினமான சூழ்நிலையில் அவற்றை உச்சரிக்கும்பொது நேர்மறையான ஆற்றலும், தைரியமும் உண்டாகும். கோபமாக இருக்கும் சமயத்தில், ‘எல்லாம் சரியாகிவிடும்’, ‘எல்லாம் நல்லபடியாகவே நடக்கிறது’ என்பது போன்ற சொற்களை உச்சரித்து மனதை அமைதிப்படுத்த வேண்டும்.

    நாம் கோபம் கொள்ளும்போது சமயத்தில் மனம் இறுக்கமாக இருக்கும். அந்த சந்தர்ப்பத்தில் நகைச்சுவை உணர்வு நம்மை இயல்பாக்கும். அது கடினமான காரியம் என்றாலும் நகைச்சுவை சினிமா காட்சிகள், வீடியோக்களை பார்ப்பது மனதை இலகுவாக்கும். வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய மகிழ்ச்சியான தருணங்கள், விஷயங்களை நினைவு கூர்வதற்கு சில நிமிடங்களை ஒதுக்குங்கள். அதுவும் மனதை இயல்பாக்கும்.

    மனதை அமைதிப்படுத்தவும், கோபத்தை குறைப்பதற்கும் நடைப்பயிற்சி உதவும். கை, கால்களுக்கு இயக்கம் கொடுப்பது மனதுக்கும், உடலுக்கும் இதமளிக்கும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடவும் செய்யலாம். சிறிது தூரம் சைக்கிளிலோ, மோட்டார் சைக்கிளிலோ சென்று வரலாம். அவை மனதை கட்டுக்குள் கொண்டுவர உதவும்.

    கோபத்தின் உச்சம், பிறர் மனதை காயப்படுத்தும் வார்த்தை பிரயோகமாகவே இருக்கும். அத்தகைய வார்த்தைகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆறாத ரணத்தை ஏற்படுத்திவிடும். கோபத்தில் வார்த்தைகளை கொட்டுவதற்கு முன்பு மூன்று முறை சிந்தியுங்கள். அந்த வழக்கம் மனதை நிதானப்படுத்த துணை நிற்கும்.

    கோபமாக இருக்கும் சமயத்தில் கண்ணாடியில் உங்கள் முகத்தின் பிரதிபலிப்பு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். உங்கள் முகமே உங்களுக்கு வெறுப்பை தரும். அதனால் கோபத்தை குறையுங்கள்.
    Next Story
    ×