என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பணியிடத்தில் கோபம் கொள்பவரா நீங்கள்?
Byமாலை மலர்3 Feb 2021 7:25 AM GMT (Updated: 3 Feb 2021 7:25 AM GMT)
ஒரு பெண் தன் கோபத்தை பணியிடத்தில் காட்டும் போது அது தன்னை தற்காத்து கொள்வதற்கும் தன்மானத்தை உயர்த்திக் பிடிப்பதற்காகவும் இருந்தால் அதில் தவறில்லை.
கோபம் கொள்வது தவறில்லை. ஆனால் சரியான இடம் பார்த்து சரியான நபரிடம் சரியான காரணத்துக்காக சரியான அளவுக்கு கோபத்தை காட்ட வேண்டும் என்பர் அரிஸ்டாட்டில். நம் கட்டுப்பாட்டை மீறிய கோபத்தை விட நமது கட்டுக்குள் கோபத்தை வைத்து சீறுவது சரியான அணுகுமுறையாக இருக்கும். சீறினால் தான் பாம்பு இல்லாவிட்டால் அது புழு.
பெண்களுக்கு பணியிடங்களில் பல்வேறு சந்தர்ப்பங்கள் கோபத்தை தூண்டுகின்றன. ஆண்களின் வெறித்தனமான பார்வைகள், சீண்டல்கள் தொடுதல்கள், அவசியமில்லாத கைகுலுக்கல்கள், பெண் என்று இளக்காரமாக பேசுவது, எப்போதும் குறை கூறுவது என ஆண்களின் அத்தனை அட்டூழியங்களையும் சகித்து கொண்டு ஒரு பெண்ணால் எப்படி கோபப்படாமல் இருக்க முடியும்?
பெண்களை சகோதரிகளாகவும், நல்ல தோழியராகவும் மதிக்கும் ஆண்களிடம் அவளுக்கு கோபம் வருவதில்லை. குழந்தைகள், நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் சக பெண்களிடம் அவள் மாறாத அன்பு கொண்டவளாகத்தான் இருக்கிறாள். வீட்டு வேலையும் பணிச்சுமையும் பெண்கள் பொறுமையிழக்க காரணமாக இருந்தாலும் அடிமனத்தில் தன்னை ஒரு போகப்பொருளாகவும், இரண்டாம் தர நபராகவும், திறன் அற்றவளாகவும் ஒருவர் எடை போடும் போது அதை பெண்ணால் பொறுத்து கொள்ளவே முடிவதில்லை. பணியிடத்தில் கோபம் என்பது திமிர் பிடித்தவள் என்ற பட்டத்தையும் வாங்கி கொடுக்கும்.
ஒரு பெண் தன் கோபத்தை பணியிடத்தில் காட்டும் போது அது தன்னை தற்காத்து கொள்வதற்கும் தன்மானத்தை உயர்த்திக் பிடிப்பதற்காகவும் இருந்தால் அதில் தவறில்லை. சில நேரங்களில் பெண்கள் பொறாமையால் ஆட்டிப்படைக்கப்படுவார்கள். அப்போது வரும் கோபம் அவர்களது உடல் நலம், மனநலம் இரண்டையும் பாதித்து விடும்.
நியாயமான கோபத்தை வெளிப்படுத்தாமல் உள்ளுகுள்ளேயே புதைத்து வைப்பதாலேயும் நமக்கு அதிக தீங்குகள் ஏற்படுகின்றன. அப்படி யென்றால் என் தான் செய்வது? நமது கோபத்தை சரியான வகையில் கையாள்வது தான் நன்மை தரும் ஒரேதீர்வு.
கோபத்தின் மோசமான விளைவுகளை தவிர்க்க டிப்ஸ்
* பேசுவதற்கு முன் யோசியுங்கள்.
* கோபத்தை உடனே வெளிப்படுத்தாதீர்கள். சிறிது நேரம் அமைதியாக இருந்து பாருங்கள்.
* உங்களை கோபப்படுத்தியவ்றறில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக சிக்கலை தீர்ப்பதில் மூளையை செலுத்துங்கள்.
* உங்கள் ஆதங்கத்தை பிரச்சனைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு நண்பரிடம் கொட்டி தீர்த்து கொள்ளுங்கள்.
* ஆழ்ந்த சுவாசம் போன்ற தளர்வு நுட்பங்களை பயிற்சி செய்யுங்கள்.
* எந்த ஒரு கோபத்திலும் நியாயம் இருக்க வேண்டும் என்பதே நியதி.
பெண்களுக்கு பணியிடங்களில் பல்வேறு சந்தர்ப்பங்கள் கோபத்தை தூண்டுகின்றன. ஆண்களின் வெறித்தனமான பார்வைகள், சீண்டல்கள் தொடுதல்கள், அவசியமில்லாத கைகுலுக்கல்கள், பெண் என்று இளக்காரமாக பேசுவது, எப்போதும் குறை கூறுவது என ஆண்களின் அத்தனை அட்டூழியங்களையும் சகித்து கொண்டு ஒரு பெண்ணால் எப்படி கோபப்படாமல் இருக்க முடியும்?
பெண்களை சகோதரிகளாகவும், நல்ல தோழியராகவும் மதிக்கும் ஆண்களிடம் அவளுக்கு கோபம் வருவதில்லை. குழந்தைகள், நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் சக பெண்களிடம் அவள் மாறாத அன்பு கொண்டவளாகத்தான் இருக்கிறாள். வீட்டு வேலையும் பணிச்சுமையும் பெண்கள் பொறுமையிழக்க காரணமாக இருந்தாலும் அடிமனத்தில் தன்னை ஒரு போகப்பொருளாகவும், இரண்டாம் தர நபராகவும், திறன் அற்றவளாகவும் ஒருவர் எடை போடும் போது அதை பெண்ணால் பொறுத்து கொள்ளவே முடிவதில்லை. பணியிடத்தில் கோபம் என்பது திமிர் பிடித்தவள் என்ற பட்டத்தையும் வாங்கி கொடுக்கும்.
ஒரு பெண் தன் கோபத்தை பணியிடத்தில் காட்டும் போது அது தன்னை தற்காத்து கொள்வதற்கும் தன்மானத்தை உயர்த்திக் பிடிப்பதற்காகவும் இருந்தால் அதில் தவறில்லை. சில நேரங்களில் பெண்கள் பொறாமையால் ஆட்டிப்படைக்கப்படுவார்கள். அப்போது வரும் கோபம் அவர்களது உடல் நலம், மனநலம் இரண்டையும் பாதித்து விடும்.
நியாயமான கோபத்தை வெளிப்படுத்தாமல் உள்ளுகுள்ளேயே புதைத்து வைப்பதாலேயும் நமக்கு அதிக தீங்குகள் ஏற்படுகின்றன. அப்படி யென்றால் என் தான் செய்வது? நமது கோபத்தை சரியான வகையில் கையாள்வது தான் நன்மை தரும் ஒரேதீர்வு.
கோபத்தின் மோசமான விளைவுகளை தவிர்க்க டிப்ஸ்
* பேசுவதற்கு முன் யோசியுங்கள்.
* கோபத்தை உடனே வெளிப்படுத்தாதீர்கள். சிறிது நேரம் அமைதியாக இருந்து பாருங்கள்.
* உங்களை கோபப்படுத்தியவ்றறில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக சிக்கலை தீர்ப்பதில் மூளையை செலுத்துங்கள்.
* உங்கள் ஆதங்கத்தை பிரச்சனைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு நண்பரிடம் கொட்டி தீர்த்து கொள்ளுங்கள்.
* ஆழ்ந்த சுவாசம் போன்ற தளர்வு நுட்பங்களை பயிற்சி செய்யுங்கள்.
* எந்த ஒரு கோபத்திலும் நியாயம் இருக்க வேண்டும் என்பதே நியதி.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X