என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
ஊரடங்கு காலத்தில் குடும்பத்துடன் நெருக்கத்தை அதிகரிக்க இதை செய்யுங்க...
Byமாலை மலர்16 July 2020 6:41 AM GMT (Updated: 16 July 2020 6:41 AM GMT)
குடும்பத்துடன் நேரம் ஒதுக்கவே முடியவில்லை என புலம்பியவர்களுக்கு இது நல்ல சந்தர்ப்பம். லாக்டவுனில் குடும்பத்துடன் நெருக்கத்தை அதிகரித்து மகிழ்ச்சியாக இருக்க இந்த விஷயங்களை செய்யுங்கள்.
குடும்பத்துடன் நேரம் ஒதுக்கவே முடியவில்லை என புலம்பியவர்களுக்கு இது நல்ல சந்தர்ப்பம். லாக்டவுனில் குடும்பத்துடன் நெருக்கத்தை அதிகரித்து மகிழ்ச்சியாக இருக்க இந்த விஷயங்களை செய்யுங்கள்.
குடும்பத்துடன் சேர்ந்து சமையல் செய்யுங்கள். இதற்கு ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டு சமைப்பதால் கஷ்டமும் தெரியாது. மகிழ்ந்து சமைக்கலாம். தினமும் மனைவி சமைக்கும் போது என்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
மூலைக்கு மூலை செல்போன் வைத்துக்கொண்டு அமர்வதை விட இண்டோர் கேம்ஸ் விளையாடலாம். பாரம்பரிய விளையாட்டுகளான தாயம், பல்லாங்குழி என பல விளையாட்டுகள் இருக்கின்றன. பாரம்பரிய விளையாட்டுக்களை பற்றி தெரியாத இந்த கால குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாம்.
வீட்டிலேயே இருப்பதால் உடலுக்கு அசைவு கொடுக்கும் விதமாக கேளிக்கையாக நடனம் ஆடுவது, காமெடி என குடும்பத்தோடு இணைந்து செய்யலாம். ஜிம்முக்கு போக முடியாதவர்கள் வீட்டிலேயே குடும்பத்துடன் உடற்பயிற்சி, யோகா என்றும் செய்யலாம்.
பராமரிப்பு : வீட்டை சுத்தம் செய்து பராமரிப்பது, வீட்டு வேலைகளை பகிர்ந்துகொள்வது, தோட்டம் இருந்தால் செடிகளை பராமரித்துக்கொள்வது போன்ற விஷயங்களை செய்யலாம். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வீட்டிலேயே பயிரிடலாம்.
இந்த தருணங்களிலெல்லாம், இதன் நினைவுகளை புகைப்படங்களாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இவற்றை எப்போது திறந்து பார்த்தாலும் லாக்டவுன் முடிந்தாலும் இப்படியே எப்போதும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
குடும்பத்துடன் சேர்ந்து சமையல் செய்யுங்கள். இதற்கு ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டு சமைப்பதால் கஷ்டமும் தெரியாது. மகிழ்ந்து சமைக்கலாம். தினமும் மனைவி சமைக்கும் போது என்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
மூலைக்கு மூலை செல்போன் வைத்துக்கொண்டு அமர்வதை விட இண்டோர் கேம்ஸ் விளையாடலாம். பாரம்பரிய விளையாட்டுகளான தாயம், பல்லாங்குழி என பல விளையாட்டுகள் இருக்கின்றன. பாரம்பரிய விளையாட்டுக்களை பற்றி தெரியாத இந்த கால குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாம்.
வீட்டிலேயே இருப்பதால் உடலுக்கு அசைவு கொடுக்கும் விதமாக கேளிக்கையாக நடனம் ஆடுவது, காமெடி என குடும்பத்தோடு இணைந்து செய்யலாம். ஜிம்முக்கு போக முடியாதவர்கள் வீட்டிலேயே குடும்பத்துடன் உடற்பயிற்சி, யோகா என்றும் செய்யலாம்.
பராமரிப்பு : வீட்டை சுத்தம் செய்து பராமரிப்பது, வீட்டு வேலைகளை பகிர்ந்துகொள்வது, தோட்டம் இருந்தால் செடிகளை பராமரித்துக்கொள்வது போன்ற விஷயங்களை செய்யலாம். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வீட்டிலேயே பயிரிடலாம்.
இந்த தருணங்களிலெல்லாம், இதன் நினைவுகளை புகைப்படங்களாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இவற்றை எப்போது திறந்து பார்த்தாலும் லாக்டவுன் முடிந்தாலும் இப்படியே எப்போதும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X