search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தத்தெடுக்க விதிமுறைகள் தளருமா?
    X
    தத்தெடுக்க விதிமுறைகள் தளருமா?

    குழந்தைக்கான தேடல்... தத்தெடுக்க விதிமுறைகள் தளருமா?

    இன்றைய தினம் குழந்தைகள் இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கை பெருகிய வண்ணம் உள்ளது. தமிழகத்தில் குழந்தைகள் வேண்டி cara.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    குழந்தை தத்தெடுப்பு என்பது பெருமளவில் சட்டத்திற்கு வெளியே தான் அதிகம் நடக்கிறது. முன்பெல்லாம் அரசு மருத்துவமனையில் நர்ஸ் அல்லது ஆயா வேலை செய்பவர்களை குழந்தையில்லா தம்பதியினர் அணுகி ''யாராவது குழந்தை வேண்டாம் என்று போட்டு விட்டு போய்விட்டால் தயவு செய்து அதை எங்களுக்கு கொடுங்கள். புண்ணியமாக போகும்” என்று வேண்டுகோள் வைப்பதுண்டு.

    நர்ஸ் மற்றும் ஆயாக்களும் குழந்தையை காப்பாற்றும் நல்லெண்ணத்துடனும், குழந்தை இல்லாதவர்களுக்கு உதவும் நோக்கத்துடனும் பணத்தையோ, பொருளையோ எதிர்பார்க்காமல் பெற்றவளால் அனாதையாக கைவிடப்பட்ட குழந்தையை அவர்களிடம் கொடுப்பதுண்டு. இதில் சிலர் பணத்திற்காக ஆசைப்பட்டு செயல்படுவதும் நடக்கிறது.

    தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மகளிர் சுய உதவி குழுக்கள் தங்கள் குழுவிலுள்ள இளம் பெண்கள் காதலிலோ, குடும்பத்தாலோ பாதிக்கப்பட்டு கர்ப்பம் தரித்த நிலையில் தற்கொலை முயற்சியில் இறங்கும் போது தடுத்து காப்பாற்றி குழந்தையை பெற்றெடுக்க உதவி செய்து, அந்த குழந்தையை குழந்தையில்லா தம்பதிகளுக்கு கொடுக்கும் மனிதாபிமான காரியங்கள் பிறர் கவனத்திற்கு வராமல் அங்குமிங்குமாக நடக்கின்றன என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    நர்ஸ் அமுதவள்ளியின் வக்கீல் ஜெயராஜ் கூறுகையில் ‘எங்களுக்கு வேண்டாத யாரோ போனில் பேசி சதி செய்து இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனர். குழந்தையை கொடுத்தவர்களோ, வாங்கியவர்களோ யாரும் இதுபற்றி புகார் கொடுக்கவில்லை. எனவே இந்த வழக்கு நிச்சயம் நிற்காது. இது பொய்யான புகார்’ என்றார்.

    இன்றைய தினம் குழந்தைகள் இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கை பெருகிய வண்ணம் உள்ளது. தமிழகத்தில் குழந்தைகள் வேண்டி cara.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை மட்டும் 2,893 ஆகும். ஆனால், அரசின் குழந்தை காப்பகத்தில் 298 குழந்தைகள் தான் வளர்ப்பில் உள்ளனர். அதாவது தேவைக்கும், இருப்புக்குமான இடைவெளி மிக அதிகம். விவரமறிந்து இணையதளத்தில் பதிவு செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை எவ்வளவோ...!

    குழந்தை வேண்டுவோர் இணையதளத்தில் பதிவு செய்து வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. அதில் அவர்களுக்கு தன்னிச்சையாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பே இல்லை. வரிசைப்படி வரும்போது அவரவருக்கு எந்த குழந்தை அமைகிறதோ, அந்த குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள வேண்டியது தான்!

    தத்தெடுப்பு முறை குறித்து மக்களிடம் கேட்டபோது ‘தத்தெடுப்பு வழிமுறைகள் கடினமாக உள்ளது. அனைவராலும் பூர்த்தி செய்ய கூடியதாக இல்லை. ஆகவே தான் தவறுகள் நடக்கின்றன” என ஆதங்கத்துடன் கூறினார்கள். மேலும் செயற்கை கருத்தரிப்பு மையங்களில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டணம் செலுத்தி குழந்தை பெற்றுக் கொள்வதை விடவும் நோகாமல் குழந்தையை விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்பதும் குழந்தைகள் விற்பனைக்கு ஒரு காரணமாகும்!

    குழந்தைகள் விற்பனையை பொறுத்தவரை, வாங்குபவர்களும் வெளிப்படுத்துவதில்லை, கொடுப்பவர்களும் வெளியே தெரியப்படுத்துவதில்லை. பரஸ்பரம் அவரவர்களின் தேவைகளை ஏதாவது ஒரு வகையில் நிறைவேற்றி, போய்க்கொண்டே இருக்கிறார்கள் என்பதே யதார்த்தமாக உள்ளது. ‘குழந்தை தத்தெடுப்பு விவகாரங்களில் கடந்த காலங்களில் அனாதை இல்லங்களில் நிறைய முறைகேடுகள் நடந்துவிட்டன. அதை களைவதற்குத் தான் மத்திய அரசு ‘இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்து முறைப்படுத்தி உள்ளது. இதில் யாரும் தவறு செய்யவே முடியாது’ என்கிறார்கள் சமூக பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.

    தமிழகத்தில் 1992-ம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொட்டில் குழந்தை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொட்டில் குழந்தைகள் திட்டம் முதலில் பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் நாட்கள் செல்ல, செல்ல அந்த திட்டத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட 1992-ம் ஆண்டு தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் 150 குழந்தைகள் வந்து சேர்ந்தன.

    இது வரை இந்த திட்டத்தின் மூலமாக மொத்தம் 5,239 குழந்தைகள் கிடைத்துள்ளன. முதல் 7 ஆண்டுகளில் மட்டுமே இத்திட்டத்தில் 3,279 குழந்தைகள் வந்தன. ஆனால், 1999 முதல் 2019 வரையிலான 20 ஆண்டுகளில் 1,963 குழந்தைகள் மட்டுமே வந்துள்ளன. ஏன் தொட்டில் குழந்தைகள் திட்டத்திற்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டது?

    இந்த மாதிரி குழந்தைகளை யாராவது கண்டால், 1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். இது கட்டணமில்லா தொலைபேசி எண்ணாகும். இந்த எண்ணில் பேசினால் மறுபுறத்தில் பேசுபவர் தெளிவாக விசாரித்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டு அரசு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைப்பார்.

    இந்த குழந்தைகள் 18 வயது வரை அரசால் பேணி வளர்க்கப்படுவார்கள். இந்த குழந்தைகளை தத்து எடுக்க விரும்புபவர்கள் நேரடியாக இந்த மையங்களுக்கு சென்று இந்த குழந்தைகளை பார்வையிட்டு தத்து எடுக்க வாய்ப்பில்லை. இணையதளத்தின் வழியாகத்தான் விண்ணப்பித்து காத்திருக்க வேண்டும்.

    தத்து எடுப்பதற்கான வழிமுறைகள்

    குழந்தைகளை தத்தெடுப்பதற்கான அரசாங்கத்தின் வழிமுறைகள் பின்வருமாறு:-


    • குழந்தை தேவைப்படுபவர் யாராக இருந்தாலும் இணையத்தின் வழியே மட்டுமே விண்ணப்பித்து பெற முடியும்.
    • தம்பதியின் திருமண சான்றிதழ் தேவை.
    • தம்பதியினர் இருவரின் வயது சான்றிதழ் தேவை.
    • தம்பதியரில் யாருக்கேணும் 45 வயதுக்கு மேல் ஆகியிருக்கு மானால் தத்தெடுக்கும் தகுதியில்லை.
    • இனி தங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழ் வழங்க வேண்டும்.
    • வருமான சான்றிதழ் தேவை.
    • சொத்து கண்டிப்பாக இருக்க வேண்டும்.
    • 3 பேர் சிபாரிசு செய்ய வேண்டும்.
    • தாய், தந்தைக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிட்டால் அதன் பிறகு ''குழந்தையை பொறுப்பெடுத்து வளர்க்க நாங்கள் தயார்” என வேறு ஒரு தம்பதி வாக்குறுதி தர வேண்டும். வாக்குறுதி கொடுக்கும் தம்பதியினருக்கும் சொத்து இருக்க வேண்டும்.
    • இதில் ஏதேனும் ஒன்றை தர முடியாவிட்டாலும் அவர்களுக்கு குழந்தை கிடைக்க வாய்ப்பில்லை.
    Next Story
    ×