என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
Byமாலை மலர்14 Jun 2019 7:47 AM GMT (Updated: 14 Jun 2019 7:47 AM GMT)
சமூக வலைதளங்கள் மூலம் நடக்கும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உங்கள் தகவல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.
சமூக வலைதளங்கள் மூலம் நடக்கும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். முடிந்தவரை உங்கள் தகவல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.
பிரச்னைகள் முதலில் வருவது தெரியாத நபர்கள் மூலமாகத்தான். அதனால் தெரியாத நபர்கள் உங்களை அணுகினால் அவர்களுக்கு பதிலளிக்காதீர்கள். அதேபோல் உங்கள் அக்கவுண்ட் தகவல்களையும் எல்லோர்க்கும் பகிருவதுபோல் வைக்காதீர்கள்.
உங்களுக்கு நெருக்கமான உறவு, நண்பர்களிடம் கடவுச் சொல்லை ஷேர் செய்யாதீர்கள். காதலர்களுக்குள்ளும் கடவுச் சொல்லைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பொதுவான உறவு மற்றும் நண்பர்களுக்கு எளிதில் கண்டுபிடிக்கும் வகையிலும் கடவுச் சொல்லை உருவாக்காதீர்கள். அதேபோல் எதிலும் கடவுச் சொல்லை ஷேர் செய்யாதீர்கள். கணினியிலும் பயன்படுத்தியவுடன் லாக் அவுட் ( log out ) செய்துவிட்டு செல்லுங்கள். அலுவலகங்களில் கடவுச் சொல்லை உங்கள் கணினியிலேயே சேவ் (save ) செய்து வைக்காதீர்கள்.
உங்களின் தனிப்பட்ட விஷயங்களை பதிவு செய்கிறீர்கள் எனில் அதில் கவனமாக செயல்படுங்கள். அவற்றை அனைவரும் காணுமாறு இல்லாமல் நீங்கள் மட்டும் அல்லது நண்பர்கள் மட்டும் பார்க்கக் கூடிய வகையில் ஆப்ஷன்களை செட் செய்து வையுங்கள். உங்களின் தகவல் திருட்டைத் தடுக்க அதுதான் சிறந்த பாதுகாப்பு.
நீங்கள் எந்த விஷயத்தை ஷேர் செய்வதாக இருந்தாலும் பல முறை யோசித்து , படித்துப் பார்த்துவிட்டு ஷேர் செய்யுங்கள். ஏனெனில் அது மற்றவர்களுக்கு உங்களைப் பற்றி அபிப்ராயத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.
கணினியில் வேலை முடிந்து விட்டதெனில் உடனே லாக் அவுட் செய்து விடுங்கள். பக்கத்தில் எங்கேயாவது செல்வதாக இருந்தாலும் ஃபேஸ்புக், ட்விட்டர்களை லாக் அவுட் செய்துவிட்டுச் செல்லுங்கள்.
பிரச்னைகள் முதலில் வருவது தெரியாத நபர்கள் மூலமாகத்தான். அதனால் தெரியாத நபர்கள் உங்களை அணுகினால் அவர்களுக்கு பதிலளிக்காதீர்கள். அதேபோல் உங்கள் அக்கவுண்ட் தகவல்களையும் எல்லோர்க்கும் பகிருவதுபோல் வைக்காதீர்கள்.
உங்களுக்கு நெருக்கமான உறவு, நண்பர்களிடம் கடவுச் சொல்லை ஷேர் செய்யாதீர்கள். காதலர்களுக்குள்ளும் கடவுச் சொல்லைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பொதுவான உறவு மற்றும் நண்பர்களுக்கு எளிதில் கண்டுபிடிக்கும் வகையிலும் கடவுச் சொல்லை உருவாக்காதீர்கள். அதேபோல் எதிலும் கடவுச் சொல்லை ஷேர் செய்யாதீர்கள். கணினியிலும் பயன்படுத்தியவுடன் லாக் அவுட் ( log out ) செய்துவிட்டு செல்லுங்கள். அலுவலகங்களில் கடவுச் சொல்லை உங்கள் கணினியிலேயே சேவ் (save ) செய்து வைக்காதீர்கள்.
உங்களின் தனிப்பட்ட விஷயங்களை பதிவு செய்கிறீர்கள் எனில் அதில் கவனமாக செயல்படுங்கள். அவற்றை அனைவரும் காணுமாறு இல்லாமல் நீங்கள் மட்டும் அல்லது நண்பர்கள் மட்டும் பார்க்கக் கூடிய வகையில் ஆப்ஷன்களை செட் செய்து வையுங்கள். உங்களின் தகவல் திருட்டைத் தடுக்க அதுதான் சிறந்த பாதுகாப்பு.
நீங்கள் எந்த விஷயத்தை ஷேர் செய்வதாக இருந்தாலும் பல முறை யோசித்து , படித்துப் பார்த்துவிட்டு ஷேர் செய்யுங்கள். ஏனெனில் அது மற்றவர்களுக்கு உங்களைப் பற்றி அபிப்ராயத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.
கணினியில் வேலை முடிந்து விட்டதெனில் உடனே லாக் அவுட் செய்து விடுங்கள். பக்கத்தில் எங்கேயாவது செல்வதாக இருந்தாலும் ஃபேஸ்புக், ட்விட்டர்களை லாக் அவுட் செய்துவிட்டுச் செல்லுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X