search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    குழந்தையின்மை பிரச்சினை
    X
    குழந்தையின்மை பிரச்சினை

    குழந்தையின்மை பிரச்சினை ஏற்படுவதற்கான காரணங்கள்

    குழந்தை இல்லாத தம்பதிகள் சஞ்சலம் அடைய தேவையில்லை. அடுத்தடுத்து செய்ய வேண்டிய சிகிச்சைகளை விடாமல் செய்தால் கட்டாயமாகக நல்ல பலன் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
    ஒரு பெண் தாய்மையடையும் போதுதான் தன் பிறவியின் முழுமையை உணர்கிறாள். திருமணமான தம்பதியர் வாழ்க்கையை துவக்கும்போது அழகான, ஆரோக்கியமான ஒரு குழந்தை தங்களுக்குள் உருவாக வேண்டும் என்றுதான் மனதிற்குள் வேண்டுகிறார்கள். ஆனால் இப்போதுள்ள சூழலில் பத்தில் மூன்று பேருக்கு குழந்தையின்மை ஏற்படுகிறது. குழந்தையின்மை எனும் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருப்பதற்கு பல காரணங்கள் அதில் முக்கியமானவை.

    1. பெண்ணுக்கு (PCOD) கருமுட்டை பையில் நீர்கோத்து கொள்வது, அதிக நேரம் கைப்பேசி, தொலைக்காட்சி, கணினி போன்றவற்றை பார்த்துக் கொண்டிருப்பதாலும் தூக்கமின்மையாலும் ஒரு காரணம்.

    2. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அதிக சோர்வை, கருமுட்டை வளர்ச்சி தடைபடுதல்.

    3. போதிய உடற்பயிற்சி இல்லாததால் எடை கூடுவது.

    4. உணவு முறைகள் (Junk Foods)

    5. வேலை மிகுதியாலும், தவறான உணவு முறையாலும் ஆண்களுக்கும் உயிரணுவின் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது.

    டாக்டர்! இதற்கு என்ன தீர்வு? என்ற கேள்விக்கு பதில் “உரிய நேரத்தில் சரியான சிகிச்சை முறைகளை” கடைபிடிப்பதுதான் சரிவிகித உணவு முறைகள், உடற்பயிற்சியும் மிக அவசியம். திருமணமாகி ஆறு மாதங்கள் முயற்சி செய்தும், கரு உண்டாக வில்லை என்றால் மகளிர் சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சைக்கும் ஆலோசனைக்கும் செல்ல வேண்டும்.

    பல நவீன சிகிச்சை முறைகள் இப்போது செய்யப்படுகின்றன. கருமுட்டை உருவாக்குதல், கருப்பையின் உள்ளே விந்தணுவை செயற்கையாக உட்செலுத்துதல் (IUI), சிந்தணுவை கருமுட்டையில் நேரடியாக வைத்தல் (ICST) என்பன போல பல வழிகள் உள்ளன.டெஸ்ட் டியூப் பேபி (IVF-ET) என்பது அடுத்த கட்டமாக கருவை உருவாக்கி கருப்பையில் செயற்கையாக வைத்து... செய்வது.

    எனவே குழந்தை இல்லாத தம்பதிகள் சஞ்சலம் அடைய தேவையில்லை. அடுத்தடுத்து செய்ய வேண்டிய சிகிச்சைகளை விடாமல் செய்தால் கட்டாயமாகக நல்ல பலன் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
    Next Story
    ×