search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தாய்ப்பால்
    X
    தாய்ப்பால்

    தசைகளை வளர்க்கும் தாய்ப்பால்

    பச்சிளம் குழந்தைகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் மட்டும்தான் இருக்கிறது.
    பச்சிளம் குழந்தைகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் மட்டும்தான் இருக்கிறது. அதனால்தான் பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்காவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அந்த பருவத்தில் தாய்ப்பால் மட்டும்தான் உணவாக கருதப்படும். குழந்தைகளின் தசை உருவாக்கத்திற்கு தாய்ப்பால் உதவும். ஆனால் தாய் பால் புகட்டுவதற்கு வாய்பில்லாத சந்தர்ப்பங்களில் புட்டிப்பால் அல்லது பால் பவுடரில் இருந்து பால் தயாரித்து வழங்குவார்கள். குழந்தைகளுக்கு கொதிக்க வைத்த நீரில் பால் பவுடரை கலந்து கொடுப்பது பாதுகாப்பானதா? அதனால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுமா? என்பது குறித்து பார்ப்போம்.

    குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்குவகிப்பதில் தாய்ப்பாலுக்கு மாற்றாக வேறு எதுவும் இருக்க முடியாது. இருப்பினும் தாய்ப்பால் கொடுக்க முடியாத பட்சத்தில் பவுடர் பால் கொடுக்கலாம். திரவநிலையில் இருக்கும் பாலை ஆவியாக்குவதன் மூலம் செயற்கையாக பால் பவுடர் தயாரிக்கப்படுகிறது. இதில் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவை யான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கலந்திருக்கும். மேலும் குழந்தைகளை நோய்த்தொற்று மற்றும் ரத்தசோகையில் இருந்து பாதுகாக்கவும் உதவும்.

    பொதுவாகவே குழந்தைக்கான ஊட்டச்சத்து தாய் சாப்பிடும் உணவை பொறுத்து அமையும். சத்தான உணவுகளை சாப்பிடுவது குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். குழந்தைகளுக்கு பவுடர் பால் கொடுக்கும் பட்சத்தில் தாய், உணவுக்கட்டுப்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்காது.

    வெளி இடங்களுக்கு செல்லும்போது தாய்ப்பால் கொடுப்பதற்கு சிரமப்படும் பட்சத்தில் பவுடர் பாலை தயக்கமின்றி கொடுக்க முடியும்.

    தாய் மிகக் கடுமையான ஒரு சில நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி இருந் தால் தாய்ப்பால் கொடுக்கும்போது தாயிடம் இருந்து குழந்தைக்கு நோய் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் டவுடர் பால் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.

    தாய்க்கு மார்பகத்தில் காயமோ, வலியோ இருந்து கொண்டிருந்தால் தாய்ப்பால் கொடுப்பதற்கு சிரமப்பட வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் பவுடர் பால் கொடுக்கலாம்.

    பவுடர் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு சில பக்கவிளைவுகள் ஏற்படும். தாய்ப்பாலில் ஆண்டிபாடிகள் உள்ளன. அவை குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும். பல்வேறு தொற்றுகளில் இருந்து குழந்தைக்கு பாதுகாப்பு வழங்கும். ஆனால் டவுடர் பாலில் ஆண்டிபாடிகள் இல்லை. அவை குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தாது.

    பவுடர் பால் செயற்கையாக தயாரிக்கப்படுவதால் குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகாமல் போகலாம். செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் ஆகலாம். சில சமயங்களில் பால் குடித்த உடனே குழந்தை வாந்தி எடுக்கும். அதற்கு பவுடர் பால் ஒத்துக்கொள்ளாததுதான் காரணமாகும்.

    பவுடர் பாலை கலக்கும்போது கவனமாக செயல்பட வேண்டும். பவுடர் தூளின் அளவுக்கு ஏற்ப சரியான அளவில் சூடுநீர் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாது. தாய்ப்பால் இயற்கையாகவே தாயின் உடலில் உற்பத்தி செய்யப்படுவதால் சரிவிகிதத்தில் ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கும். ஒருபோதும் தாய்ப்பாலுக்கு ஈடாக மற்றொன்றை கருதமுடியாது. தாய்ப்பால் சுரப்பு தடைபடும் பட்சத்தில் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற்று குழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்க வேண்டும். 
    Next Story
    ×