search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கர்ப்ப காலத்தில் வரும் தலைவலி
    X
    கர்ப்ப காலத்தில் வரும் தலைவலி

    கர்ப்ப காலத்தில் வரும் தலைவலியும்... காரணமும்... தீர்வும்...

    கர்ப்பமாக இருக்கும் போது, உடலில் நிறைய வலிகள் ஏற்படும். அவற்றில் ஒன்று தான் தலைவலி. இப்போது இந்த தலைவலி ஏற்படுவதற்கு காரணத்தையும், அதனை எப்படி குணப்படுத்துவது என்பதையும் குறிப்பிட்டுள்ளோம்.
    கர்ப்பமாக இருக்கும் போது, உடலில் நிறைய வலிகள் ஏற்படும். அவற்றில் ஒன்று தான் தலைவலி. கர்ப்ப காலத்தில் வரும் தலைவலிகள் மிகவும் தீவிரமாக இல்லாவிட்டாலும், அது மிகவும் தொந்தரவு கொடுப்பவையாகவே இருக்கும். அதிலும் வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால், நிச்சயம் இந்த பிரச்சனைக்கு ஆளாக நேரிடும்.

    இந்த நேரத்தில் கண்ட மாத்திரைகளைப் போட்டு, தலை வலிகளை போக்க நினைக்கக்கூடாது. ஏனெனில் சில மாத்திரைகளால், கருவிற்கு கேடு உண்டாகவும் நேரிடலாம். ஆகவே அப்போது இயற்கை முறையில் சரிசெய்ய முயல்வதே புத்திசாலித்தனம். இப்போது இந்த தலைவலி ஏற்படுவதற்கு காரணத்தையும், அதனை எப்படி குணப்படுத்துவது என்பதையும் குறிப்பிட்டுள்ளோம்.

    அதிகப்படியான வேலைப்பளுவினால் சிலருக்கு தலைவலி ஏற்படும். அதிலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் உண்டாகும் பிரச்சனைகளை சந்திக்கும் போது ஏற்படும் டென்சனால், தலைவலி அதிகரிக்கும். எனவே இத்தகையவற்றை குணப்படுத்துவதற்கு சிறந்த வழியென்றால் மனதை அமைதிப்படுத்தும் செயல்களான யோகா மற்றும் தியானம் போன்றவற்றை செய்வது தான்.

    கர்ப்பத்தின் போது ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். அவ்வாறு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும், சிலருக்கு தலைவலி உண்டாகும். இத்தகைய தலைவலிக்கு சிறந்த நிவாரணம் என்றால், நல்ல சுத்தமான காற்றை சுவாசிப்பது மற்றும் மனதை புத்துணர்ச்சியூட்டும் சாக்லெட்டை சாப்பிடுவது தான்.

    கர்ப்பமாக இருக்கும் போது, சரியாக சாப்பிட முடியாமலும், வேலை செய்ய முடியாமலும் இருக்கும். அவ்வாறு இருந்தால், உடலுக்கு வேண்டிய சக்தியானது கிடைக்காது. இதனால் மதிய வேளையில் ஒருவித தலைவலி ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது என்றும், அந்த நேரத்தில் ஏதேனும் ஜூஸ் குடிக்க வேண்டும் என்றும் அர்த்தம்.

    கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றத்தின் காரணமாக தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். சரியான தூக்கம் இல்லாத காரணத்தால் தலைவலி வரும். அதற்கு மாலை நேரத்தில் 1 மணி நேரம் யோகா அல்லது உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சியை மேற்கொண்டால் இந்த பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.

    கர்ப்பமாக இருக்கும் போது, அதிகப்படியான இரைச்சலின் காரணமாகவும் தலைவலி ஏற்படும். இதற்கு ஒரே வலி சப்தமில்லாத இடத்தில் இருப்பது தான். மேலும் இத்தகையவற்றால் தலைவலிக்கு ஆளாகுபவர்கள், டிவியை பார்க்காமல், லைட்டுகளை அணைத்துவிட்டு, நிம்மதியான ஒரு குட்டித் தூக்கம் போடுவது தான்.
    Next Story
    ×