search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பிரசவத்துக்கு பின் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை
    X
    பிரசவத்துக்கு பின் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை

    பிரசவத்துக்கு பின் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை

    பெண்கள் பிரசவத்துக்கு பிறகு கூடுதல் கவனம் எடுத்து உடல்நிலையை கவனித்துகொள்ள வேண்டும்.இதனிடையே உடலில் உண்டாகும் மாற்றங்களில் சிறு வித்தியாசம் இருந்தாலும் நீங்கள் தாமதிக்காமல் உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
    சுகப்பிரசவமாக இருந்தாலும், சிசேரியானாக இருந்தாலும் பிரசவத்துக்குப்பிறகு உடல் நிலையை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப சற்றுகாலம் பிடிக்கும். பலரும் பிரசவம் முடிந்ததும் இனி மருத்துவ சிகிச்சை தேவைப்படாது என்று முடிவெடுத்துவிடுகிறார்கள். நீங்கள் எடுத்துகொள்ளும் சத்தான உணவு, உடல் பராமரிப்பு சரியாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு பழைய நிலைமைக்கு மீண்டு வரும். ஆனால் கர்ப்பக்காலத்தில் ஏற்கனவே பலவீனமான பெண்கள் பிரசவத்துக்கு பிறகு கூடுதல் கவனம் எடுத்து உடல்நிலையை கவனித்துகொள்ள வேண்டும்.இதனிடையே உடலில் உண்டாகும் மாற்றங்களில் சிறு வித்தியாசம் இருந்தாலும் நீங்கள் தாமதிக்காமல் உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

    பிரசவம் முடிந்த பெண்கள் சுகப்பிரசவம் ஆனாலும் சிசேரியனாக இருந்தாலும் உடல் அளவில் சற்று பலவீனமாக இருப்பார்கள். கடுமையான பிரசவ வலியால் உறுப்புகள் அனைத்துமே பலவீனமாக இருக்கும். உடல் சோர்வையும் அதிகப்படியாக உணர்வார்கள்.

    பிரசவம் முடிந்த முதல் மற்றும் இரண்டாம் வாரங்களுக்குள் உடல் நிலை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இந்தகாலங்களில் உடலை வறுத்தாமல் தொற்று பாதிக்காமல் மருத்துவரின் அறிவுரையை பின்பற்றினாலே இன்னும் வேகமாக கூட உடல் இயல்பு நிலைக்கு திரும்பி விடும். ஆனால் கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு தென்படுகிறதா என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

    பிரசவத்துக்கு பின் ரத்தபோக்கு உண்டாகும். ஆனால் சாதாரணமாக இருக்கும். பிரசவநேரத்தில் குழந்தை பிறந்த கையோடு கர்ப்பப்பையில் இருக்கும் கழிவோடு ரத்தபோக்கு வெளியேறும். எனினும் எஞ்சி இருக்கும் உதிரமானது மூன்றிலிருந்து நான்கு வாரங்கள் வரையிலும் இருக்கும். கருப்பையின் சுருங்கி விரியும் தன்மைக்கேற்ப ரத்தபோக்கு இருக்கும். இவை நார்மல் தான் என்பதால் பயப்பட வேண்டியதில்லை.

    அதுவே நீங்கள் வீட்டுக்கு வந்ததும் திடீரென்று அதிக ரத்தபோக்கு, கட்டியாக ரத்தம் வெளியேறுதல், குறைந்த நேரத்தில் தொடர் ரத்தபோக்கு போன்றவற்றை உணர்ந்தால் நீங்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். இல்லையெனில் நீங்கள் மயக்க நிலைக்கு செல்ல நேரிடலாம். உங்கள் இதயத்துடிப்பு சீரற்றதாக மாறி அபாய கட்டத்துக்கும் செல்ல நேரிடலாம். அதனால் ரத்தபோக்கு அதிகமாகும் போது அலட்சியப்படுத்தகூடாது.

    குழந்தை கர்ப்பத்தில் வளர வயிறு உறுப்புகள் சற்று சிரமத்தை சந்திக்க நேரிடலாம். ஆனால் பிரசவித்த சில வாரங்கள் கழித்து நீங்கள் வயிற்றில் வலது புற மேல் பக்கத்தில் வலியை உணர்ந்தால் அது கல்லீரல் குறைபாட்டின் அறிகுறியாகவும், உங்கள் ரத்த உறைவு குறித்த பாதிப்பாகவும் இருக்கலாம். இதனோடு உடல் காய்ச்சலும், தலைவலியும் கூட இதன் அறிகுறிகள் ஆகும். பலரும் குழந்தை வயிற்றில் இருந்ததால் உறுப்புகள் சுருங்குவதால் உண்டாகும் வலி என்று நினைத்துவிடுவார்கள். ஆனால் இவை மோசமான உள்ளுறுப்புகளின் பாதிப்பாகவும் இருக்கலாம் என்பதால் அவை தீவிரமாவதற்குள் மருத்துவரை அணுக வேண்டும்.

    சுகப்பிரசவம் ஆனவர்கள் பிறப்புறுப்பை தொற்றில்லாமல் பராமரிக்க வேண்டும். சிசேரியன் பிரசவமாக் இருந்தாலும் தையல் போட்ட இடத்தில் ரணம் ஆறும் வரை கவனமாக இருக்க வேண்டும். பிறப்புறுப்பில் வலி, நோய்த்தொற்று, அரிப்பு, அந்த இடத்தில் வீக்கம், சிவப்பு, பெண் உறுப்பிலிருந்து துர்நாற்றம், மார்பகங்களில் வலி,பெண் உறுப்பு அடிவயிறு, இடுப்புவலி மூன்று சேர்ந்தாற் போன்ற வலி போன்றவற்றை உணர்ந்தால் தாமதிக்காமல் சிகிச்சை பெற வேண்டும்.

    அதே போன்று தையல் போட்ட இடங்களிலும் ஏதேனும் திரவம் போன்று வெளிவர கண்டாலும் அதையும் அலட்சியப்படுத்தக்கூடாது. தொற்று உண்டான காரணத்தை அறிந்து அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்வதன் மூலம் அதிக பாதிப்பை தடுக்கமுடியும்.

    உடல் வெப்பநிலையை காட்டிலும் 38 டிகிரி சி -க்கு மேல்பட்ட காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். பெண் உறுப்பில் தொற்று இருந்தாலும் அவை உடல் முழுவதும் பரவக்கூடும். மேலும் இந்த காய்ச்சலோடு இதயத்துடிப்பு வேகமாக இருக்கும், மூச்சு வேகமாக விடும் நிலையில் உங்களை தள்ளும். இதனோடு வயிறும், தலைவலி உபாதையும் இருக்கும். தலைவலி இயல்பானதாக இருந்தாலும் அதனோடு குமட்டல், வாந்தி, தலை சுற்றல், கண் பார்வை மங்குதால் போன்றவையும் இருக்கும். இந்த அறிகுறிகள் எல்லாமே உடல் தீவிரமான பாதிப்புக்குள்ளாகியிருப்பதை உணர்த்தக்கூடியதே.

    பிரசவத்துக்கு பிறகு இரண்டு வாரங்கள் கழிந்த பிறகும் நடக்கும் போது, படிகளில் பொறுமையாக இறங்கும் போது இவை எதுவுமே செய்யாமல் கீழே குனிந்து ஒரு பொருளை எடுத்தால் கூட மூச்சு வேகமாக வந்தால் அது நுரையீரல் தொற்று உண்டாவதன் அறிகுறியாக அதை வெளிப்படுத்தும் அறிகுறிகளாக இருக்கலாம்.

    மூச்சு வாங்குதலோடு நெஞ்சுவலியும் உண்டாககூடும். அதோடு இருமும் போது ரத்தம் வெளியேறிவிடும். இவையும் மருத்துவரை சந்திக்க வேண்டிய அபாய அறிகுறிகளாக கொள்ளலாம்.

    இதையெல்லாம் தாண்டி பிரசவக்காலத்துக்கு பிறகு உண்டாகும் மன அழுத்தமும் மருத்துவரை அணுக வேண்டிய கட்டாயத்தையே அளிக்கின்றன. எனினும் இது குறித்து நாம் தனியாக பார்த்திருக்கிறோம். பிரசவம் நல்ல முறையில் நிகழ்ந்தாலும் உடலில் பிரசவநேரத்தில் உண்டான அறிகுறிகள் சில வாரங்கள் கழித்தும் உணர்த்தலாம் என்பதால் பிரசவித்த தாய்மார்கள் அறிகுறிகளை அலட்சியப்படுத்தகூடாது என்பது தான் மருத்துவர்களின் ஆலோசனை. 
    Next Story
    ×