search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து மாத்திரை எடுத்தால் ஏதாவது பிரச்சனை வருமா?
    X
    கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து மாத்திரை எடுத்தால் ஏதாவது பிரச்சனை வருமா?

    கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து மாத்திரை எடுத்தால் ஏதாவது பிரச்சனை வருமா?

    தற்போது இரும்புச்சத்து குறைபாடுள்ள கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இரும்புச்சத்தை அதிகரிக்க எடுத்து கொள்ளும் மாத்திரையால் பெண்களுக்கு பக்கவிளைவுகளை உண்டாக்கிவிட வாய்ப்புண்டு.
    கர்ப்பக்காலத்தில் சத்து குறைபாடு உண்டாகும் பெண்களில் பலரும் இரும்புச்சத்து குறைபாட்டால் தான் பாதிக்கப்படுகிறார்கள். தற்போது இரும்புச்சத்து குறைபாடுள்ள கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனால் ரத்த சோகைக்கு உள்ளாகும் கர்ப்பிணிகளும் அதிகமாகிவருகிறார்கள். இரும்புச்சத்து அதிகரிக்க மாத்திரைகள் உட்கொள்வதையும் தவிர்த்து உணவின் மூலமே பெற்றுவிடலாம். ஏனெனின் வெகு சில பெண்களுக்கு இந்த மாத்திரையால் பக்கவிளைவுகளை உண்டாக்கிவிட வாய்ப்புண்டு. இது குறித்து இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

    இரும்புச்சத்தை பொறுத்தவரை ஆண்களை காட்டிலும் பெண்களுக்கே அதிக அளவு தேவைப்படுகிறது. பூப்படைவது முதல் மெனோபாஸ் காலங்கள் வரை இரத்தப்போக்கு இருப்பதால் உடலில் இரும்புச்சத்து அளவு குறைகிறது.

    பொதுவாக பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு தேவையான இரும்புச்சத்து 9.மி.கிராம் அளவு தேவையாக இருக்கிறது. ஆனால் பெண் கர்ப்பக்காலத்தில் நாள் ஒன்றுக்கு 27 மி.கிராம் அளவு இரும்புச்சத்து எடுத்துகொள்ள வேண்டும் பெரும்பாலும் உணவின் மூலமே 30 மி.கிராம் அளவு இரும்புச்சத்தை பெற்றுவிட வேண்டும். ஆனால் பெண்கள் மசக்கையால் சரியான ஆகாரத்தை எடுக்க தவறும் போது மருத்துவர்கள் இரும்புச்சத்து மாத்திரைகளை பரிந்துரைக்கிறார்கள்.

    கர்ப்பக்காலத்தில் போதுமான இரும்புச்சத்தை கர்ப்பிணிகள் பெறுவதற்கு அவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சுயமாக மாத்திரைகள் பயன்படுத்தக்கூடாது. மாத்திரைகள் பயன்படுத்தும் முறை குறித்து தான்ன் பலன்களும் இருக்கும்.

    உங்கள் உடலில் இருக்கும் இரும்புச்சத்து குறைபாட்டிற்கு ஏற்ப உங்களுக்கு தேவையான அளவு, வேண்டிய நாட்களுக்கு மட்டுமே மருத்துவர் பரிந்துரைப்பார். அவர் கூறிய அளவுக்கு கூறிய நாட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவை குறைந்தால் மீண்டும் இரும்புச்சத்து குறைபாடு உண்டாகிவிடும். அதிகமாக எடுத்தால் கருவுக்கு பாதிப்பை உண்டாக்கிவிடக்கூடும். அப்படி உண்டாக்கும் பாதிப்பு குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும்.

    சத்து மாத்திரைகள் பயன்படுத்தும் போது காலை நேரத்தில் பயன்படுத்த வேண்டும். உணவுக்கு முன்பு அதை எடுத்து கொள்வதன் மூலம் உடல் நாள்முழுக்க உணவின் மூலம் இரும்புச்சத்தை கிரகித்து கொள்ள உதவும். கர்ப்பக்காலத்தில் குழந்தையின் வளர்ச்சியில் உண்டாகும் மலச்சிக்கல் ஒருபுறம் என்றால் இரும்புச்சத்து குறைபாட்டுக்கு எடுக்கும் மாத்திரைகளாலும் மலச்சிக்கல் பிரச்சனை கூடுதலாக இருக்கும். குறிப்பாக மாத்திரைகள் எடுத்துகொண்ட முதல் 15 நாட்களுக்கு மலச்சிக்கல் உண்டாகும். பிறகு உடல் இரும்புச்சத்து ஏற்றுகொள்ள பழகிவிடும்.

    இவை உடலில் வாயுவை அதிகரிக்க செய்யும். இதனால் மலச்சிக்கல் அவதி அதிகமாகும் என்பதாலேயே கர்ப்பிணி பெண்கள் இரும்புச்சத்துள்ள உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அப்படியே இரும்புச்சத்தை உடல் கிரகித்துகொள்ள வைட்டமின் சி உணவையும் சேர்த்து எடுத்துகொள்ளவும் வேண்டும்.

    பொதுவாக சத்து மாத்திரைகள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால் சமயங்களில் அவ்வபோது பக்க விளைவுகளை உண்டாக்கிவிடும். இது சரிசெய்யகூடியதே என்றாலும் மாத்திரைகளை தவிர்த்து உணவு மூலமே எடுத்து கொள்வதே நல்லது. கர்ப்பக்காலத்தில் குழந்தையின் வளர்ச்சியில் உண்டாகும் மலச்சிக்கல் ஒருபுறம் என்றால் இரும்புச்சத்து குறைபாட்டுக்கு எடுக்கும் மாத்திரைகளாலும் மலச்சிக்கல் பிரச்சனை கூடுதலாக இருக்கும். குறிப்பாக மாத்திரைகள் எடுத்துகொண்ட முதல் 15 நாட்களுக்கு மலச்சிக்கல் உண்டாகும். பிறகு உடல் இரும்புச்சத்து ஏற்றுகொள்ள பழகிவிடும்.

    சைவ உணவை காட்டிலும் அசைவ உணவில் தான் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. அதே நேரம் சைவ உணவுகள் எடுத்துகொள்பவர்கள் தினமும் இரண்டு கப் கீரைகள் (முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை,புதினா) போன்றவற்றை அதிகம் எடுத்துகொள்ளலாம். தினமும் இரண்டு பேரீச்சை பழம் மூன்று அத்திப்பழங்கள் எடுத்துகொள்வதன் மூலம் போதுமான அளவு இரும்புச்சத்தை பெற்றுவிடமுடியும்.

    அதிகளவு குறைபாடு கொண்டிருந்தால் நிச்சயம் இரும்புச்சத்து மாத்திரையின் மூலமே குறைபாட்டை சரிசெய்யமுடியும் என்று மருத்துவர் கூறினால் தவிர்க்காமல் எடுத்துகொள்ளுங்கள். ஆனால் அவர் குறிப்பிட்ட அளவுக்கு மேல் எடுக்க வேண்டாம். அதே நேரம் அடுத்த பரிசோதனைக்குக்குள் உணவின் மூலேம் இரும்புச்சத்தை பெற்றுவிடவும் முயற்சி செய்வது நிச்சயம் ஆரோக்கியமானது. 
    Next Story
    ×