search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சானிட்டரி நாப்கின்
    X
    சானிட்டரி நாப்கின்

    நாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்

    துணி பயன்படுத்திய காலத்தில் பெண்களுக்கு கருப்பை பிரச்சனை வந்ததா? அல்லது நாப்கின் பயன்படுத்தும் இந்த காலத்தில் பெண்களுக்கு கருப்பை பிரச்சனை வந்ததா?
    Sanitary Napkin ஐ நீங்கள் பிறப்பு உறுப்பு பகுதியில் வைக்கும் போது அதில் ஒளிந்துள்ள பூதம் DIOXIN என்னும் கொடிய நச்சு அழகாக கருப்பை வாய் வழியே உள் நுழைந்து, கருப்பை, கருக்குழாய், கருமுட்டைப் பை அடைந்து உடல் முழுக்க ஒவ்வொரு உறுப்பாக பரவி பெண்களை பதம் பார்க்கிறது. மேலும் இது மூத்திரக்குழாய் மற்றும் மலவாய் வழியே உடல் முழுக்க பரவி பெண்கள் உடலை ஆக்கிரமிக்கிறது.

    உங்கள் உடலில் நுழைந்த dioxin 7 முதல் 11 ஆண்டுகள் வரை தங்கியிருந்து உங்கள் உடலை நாசமாக்கும்.

    * ஹார்மோன்களுடன் விளையாடத் துவங்கும் (Hormonal Imbalance)
    * சினை முட்டை வளர்ச்சியை தடுக்கிறது
    * இனப்பெருக்க உறுப்பின் சமச்சீரற்ற வளர்ச்சி
    * சினைப்பையில் நீர்கட்டிகள் (PCOS)
    * கருப்பை Fibroid கட்டிகள் (PCOD)
    * கருக்குழாயில் கட்டிகள் (felopian tube block)
    * கருப்பை வாய் புற்றுநோய் (Cervical cancer)
    * தைராய்டு (Thyroid)
    * கல்லீரல் வேலையில் மாறுபாடு
    * ஒவ்வாமை, தோல் கருத்து போதல், அரிப்பு
    * வெள்ளைப்படுதல்
    * தோல் நோய்கள்
    * Toxic Shock Syndrome (திடீர் மரணம்)
    * நீரிழிவு (DIABETS)
    * மன அழுத்தம் (Depression)
    * கரு முட்டைப்பை புற்றுநோய் (ovarian cancer)
    * குழந்தையின்மை (Fertility problems)
    * மார்பக புற்றுநோய் (breast cancer)
    * கரு வளர்ச்சி சிதைவு (Interfer with baby embryonic development)

    இன்னும் இன்னும், உலக அறிவியலாளர்களால் கண்டறியப்பட்ட பல பேராபத்துக்கள் இதில் உள்ளது. நம் நாட்டில் பெண்கள் என்ன புகைப்பிடிக்கிறார்களா? அல்லது மதுப் பழக்கத்திற்குத்தான் அடிமையாகி உள்ளார்களா? எதுவுமே இல்லை. பிறகு ஏன் இவர்களுக்கு புற்றுநோய் (Cancer) வர வேண்டும்???

    இதை பற்றி எதுவும் தெரியாமல் இன்னும் பல பெண்கள் கடைகளில் கிடைக்கும் நச்சு ரசாயன Sanitary Napkin களை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது 100 ல் 99 பெண்களுக்கு கருப்பை பிரச்சனை உள்ளது.

    பெண்களே ஒவ்வொரு முறை நாம் நாப்கினை பயன்படுத்தும் போது, அடுத்த தலைமுறைக்கு கொள்ளி வைக்கிறோம் என்பது நினைவிற்கு வரட்டும்.

    Next Story
    ×