என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பொய்யான பிரசவ வலி பற்றி அறிய வேண்டியவை..
Byமாலை மலர்30 Oct 2019 6:40 AM GMT (Updated: 30 Oct 2019 6:40 AM GMT)
பெண்களுக்கு 9-வது மாதம் நெருங்க நெருங்க பிரசவ வலி ஏற்படுவது போன்ற உணர்வு அடிக்கடி தோன்றும். இது பொய்யான பிரசவ வலி எனப்படுகிறது.
கர்ப்ப காலத்தில், பெண்கள் தங்களுக்கு ஏற்படும் அனைத்து மாற்றங்களையும், சோதனைகளையும் சாதனைகளாக்கி, முதல் ஆறு மாதங்களைக் கிடக்கின்றனர். பின்னர் தன் குழந்தை பூமியைத் தொடப்போகும் அந்த நொடிக்காக காத்திருக்கத் தொடங்குவாள்.. இந்த காத்திருப்பு தருணத்தில், பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை பற்றி இப்பதிப்பில் படித்தறியலாம்…
பெண்களுக்கு 9வது மாதம் நெருங்க நெருங்க பிரசவ வலி ஏற்படுவது போன்ற உணர்வு அடிக்கடி தோன்றும். இது பொய்யான பிரசவ வலி எனப்படுகிறது. இவ்வலியானது, பெண்கள் அதிகம் வேலை செய்யும் நாட்களில் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இவ்வலி ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் நீடிக்கும்.
பிரசவம் சுகப்பிரசவமாக அமைய, மேலும் விரைவில் நிகழ அதிக வேலை செய்ய வேண்டும் என்று கூறிய அறிவாளியின் பேச்சைக் கேட்டு, நடப்பதால் பெண்கள் இத்தகைய பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது. வேலை செய்ய வேண்டும் ஆனால், அது 6 மாதம் வரை, அதுவும் அளவாக..!
பொய்யான வலி எது மெய்யான வலி எது என்பதை எப்படிக் கண்டறிவது என்ற குழப்பமா? பொய்யான வலி ஏறக்குறைய ஒரு மணி நேரம் வரை ஒரே மாதிரியாக வலிக்கும். ஆனால், மெய்யான வலி நிமிடத்திற்கு நிமிடம் வலி அதிகமாகும்..! இந்த வேறுபாடு கொண்டு, உண்மையான வலியை அறியலாம்.
இம்மாதிரியான பொய்யான வலியை தவிர்க்க, பெண்கள் 9வது மாதத்தில், குறைந்த வேலைகளை செய்வதும், அதிக தண்ணீர் அருந்துவது, அதிக நேரம் நிற்காமல் இருப்பது போன்றவை உதவும்.. இக்காலகட்டத்தில், அதிக திரவ உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
பிரசவம் என்பது ஒரு அழகான, அற்புதமான அனுபவம். கர்ப்பகாலம் என்பது சோதனை கலந்த சாதனையான பயணம். இப்பயணத்தில் தன்னம்பிக்கையுடன், சரியான உணவு, ஊட்டச்சத்துடன் உற்சாகமாக ஈடுபடுங்கள்..!
பெண்களுக்கு 9வது மாதம் நெருங்க நெருங்க பிரசவ வலி ஏற்படுவது போன்ற உணர்வு அடிக்கடி தோன்றும். இது பொய்யான பிரசவ வலி எனப்படுகிறது. இவ்வலியானது, பெண்கள் அதிகம் வேலை செய்யும் நாட்களில் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இவ்வலி ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் நீடிக்கும்.
பிரசவம் சுகப்பிரசவமாக அமைய, மேலும் விரைவில் நிகழ அதிக வேலை செய்ய வேண்டும் என்று கூறிய அறிவாளியின் பேச்சைக் கேட்டு, நடப்பதால் பெண்கள் இத்தகைய பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது. வேலை செய்ய வேண்டும் ஆனால், அது 6 மாதம் வரை, அதுவும் அளவாக..!
பொய்யான வலி எது மெய்யான வலி எது என்பதை எப்படிக் கண்டறிவது என்ற குழப்பமா? பொய்யான வலி ஏறக்குறைய ஒரு மணி நேரம் வரை ஒரே மாதிரியாக வலிக்கும். ஆனால், மெய்யான வலி நிமிடத்திற்கு நிமிடம் வலி அதிகமாகும்..! இந்த வேறுபாடு கொண்டு, உண்மையான வலியை அறியலாம்.
இம்மாதிரியான பொய்யான வலியை தவிர்க்க, பெண்கள் 9வது மாதத்தில், குறைந்த வேலைகளை செய்வதும், அதிக தண்ணீர் அருந்துவது, அதிக நேரம் நிற்காமல் இருப்பது போன்றவை உதவும்.. இக்காலகட்டத்தில், அதிக திரவ உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
பிரசவம் என்பது ஒரு அழகான, அற்புதமான அனுபவம். கர்ப்பகாலம் என்பது சோதனை கலந்த சாதனையான பயணம். இப்பயணத்தில் தன்னம்பிக்கையுடன், சரியான உணவு, ஊட்டச்சத்துடன் உற்சாகமாக ஈடுபடுங்கள்..!
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X