என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தாய்ப்பாலூட்டும் போது சாப்பிடக் கூடாத உணவுகள்..
Byமாலை மலர்26 Oct 2019 5:17 AM GMT (Updated: 26 Oct 2019 5:17 AM GMT)
நீங்கள் தாய்ப்பாலூட்டும் போது காரமான உணவுகளை கூட உட்கொள்ளலாம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொண்டு, குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாத்திடுங்கள்.
உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு என்பது அத்தியாவசியமான ஒன்று. அதிலும் கர்ப்பகாலத்தில் தாய் உண்ணும் உணவுகளே குழந்தையை சென்றடைகிறது. பிரசவத்தின் பின்னும் தாய்ப்பாலூட்டுவதால் தாயின் நிலையை பொறுத்தே குழந்தையின் உடல்நிலை அமையும். சில உணவு வகைகள் குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். இதனால் நீங்கள் சிலவற்றை தவிர்க்க வேண்டும். இங்கு தாய்ப்பாலூட்டும் போது தவிர்க்க வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.
1 தேநீரில் காபின் எனும் பொருள் உள்ளது. சில கோப்பை தேநீர் அருந்துவது உங்களை புத்துணர்வாகவும், புதிய ஆற்றலை பெற்றிருப்பது போலவும் உணர செய்யலாம். ஆனால் அவை இப்போது உங்கள் உறக்கத்திற்கு கேடு விளைவிப்பவையாக இருக்கும். எனவே நீங்கள் குடிக்கும் தேநீரின் அளவை படிப்படியாய் குறைத்து கொள்ளுங்கள்.
2. நீங்கள் காபி பிரியராக இருந்தால், இது உங்களுக்கு வருத்தமளிக்க கூடியது. காபியில் இருக்கும் காபின் உங்களது தாய்ப்பாலில் சேரும். இது உங்கள் குழந்தையின் சிறிய உடலால் செரிக்கவும் வெளியேற்றவும் முடியாததால், குழந்தையின் உடலிலேயே தங்கி விடும். இது ஓய்வில்லாமை, எரிச்சல் மற்றும் வாயு தொல்லை போன்றவற்றை ஏற்படுத்தும். காபியின் அளவை குறைத்திடுங்கள், முடிந்தவரை காபியை தவிர்த்திடுங்கள்.
3 இது குழந்தையின் உடலில் பல அலர்ஜி மற்றும் உணர்திறன் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. எனவே நீங்கள் சாப்பிட்டவுடன் பரிசோதித்து பாருங்கள். குழந்தையிடம் மாற்றங்களை கண்டால் உடனடியாக தவிர்ப்பது நலம்.
4 ப்ரோக்கோலி உங்களுக்கு நன்மை பயக்க கூடிய ஒன்று தான். ஏதாவது ஒரு சமயத்தில், செரிக்க நேரம் எடுத்துக் கொண்டால் உங்களுக்கும் குழந்தைக்கும் வாயு தொல்லையை ஏற்படுத்தி விடும்.
5 செர்ரி பழங்களில் இயற்கையாகவே மெழுகு பொருள் இருக்கும். இது மலச்சிக்கலுடன் கூடிய வாயு தொல்லையை குழந்தைக்கு ஏற்படுத்தும்.
6 வேர்க்கடலை சில குழந்தைகளுக்கு உணர்திறன் மற்றும் ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தும். இருப்பினும் இதில் அதிக அளவில் புரதச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதில் பாதிக்கு பாதி வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையும் செயல்படுவது சிறந்தது.
7 தாய்ப்பாலை அதிகரிக்க மூலிகைகளும், கீரைகளும் உதவும் என்றாலும், மிளகுக்கீரையும் வோக்கோசுவும் (ஒரு வகை கொத்தமல்லி) அதில் சேராத ஒன்று. அவை தாய்ப்பால் சுரப்பை குறைகின்றன. குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் போது இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
நீங்கள் உண்ணும் உணவு உங்கள் குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தினால் தவிர்த்திடுங்கள். இல்லையேல் நீங்கள் அதை தொடர்ந்து உண்ணலாம். நீங்கள் தாய்ப்பாலூட்டும் போது காரமான உணவுகளை கூட உட்கொள்ளலாம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொண்டு, குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாத்திடுங்கள்.
1 தேநீரில் காபின் எனும் பொருள் உள்ளது. சில கோப்பை தேநீர் அருந்துவது உங்களை புத்துணர்வாகவும், புதிய ஆற்றலை பெற்றிருப்பது போலவும் உணர செய்யலாம். ஆனால் அவை இப்போது உங்கள் உறக்கத்திற்கு கேடு விளைவிப்பவையாக இருக்கும். எனவே நீங்கள் குடிக்கும் தேநீரின் அளவை படிப்படியாய் குறைத்து கொள்ளுங்கள்.
2. நீங்கள் காபி பிரியராக இருந்தால், இது உங்களுக்கு வருத்தமளிக்க கூடியது. காபியில் இருக்கும் காபின் உங்களது தாய்ப்பாலில் சேரும். இது உங்கள் குழந்தையின் சிறிய உடலால் செரிக்கவும் வெளியேற்றவும் முடியாததால், குழந்தையின் உடலிலேயே தங்கி விடும். இது ஓய்வில்லாமை, எரிச்சல் மற்றும் வாயு தொல்லை போன்றவற்றை ஏற்படுத்தும். காபியின் அளவை குறைத்திடுங்கள், முடிந்தவரை காபியை தவிர்த்திடுங்கள்.
3 இது குழந்தையின் உடலில் பல அலர்ஜி மற்றும் உணர்திறன் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. எனவே நீங்கள் சாப்பிட்டவுடன் பரிசோதித்து பாருங்கள். குழந்தையிடம் மாற்றங்களை கண்டால் உடனடியாக தவிர்ப்பது நலம்.
4 ப்ரோக்கோலி உங்களுக்கு நன்மை பயக்க கூடிய ஒன்று தான். ஏதாவது ஒரு சமயத்தில், செரிக்க நேரம் எடுத்துக் கொண்டால் உங்களுக்கும் குழந்தைக்கும் வாயு தொல்லையை ஏற்படுத்தி விடும்.
5 செர்ரி பழங்களில் இயற்கையாகவே மெழுகு பொருள் இருக்கும். இது மலச்சிக்கலுடன் கூடிய வாயு தொல்லையை குழந்தைக்கு ஏற்படுத்தும்.
6 வேர்க்கடலை சில குழந்தைகளுக்கு உணர்திறன் மற்றும் ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தும். இருப்பினும் இதில் அதிக அளவில் புரதச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதில் பாதிக்கு பாதி வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையும் செயல்படுவது சிறந்தது.
7 தாய்ப்பாலை அதிகரிக்க மூலிகைகளும், கீரைகளும் உதவும் என்றாலும், மிளகுக்கீரையும் வோக்கோசுவும் (ஒரு வகை கொத்தமல்லி) அதில் சேராத ஒன்று. அவை தாய்ப்பால் சுரப்பை குறைகின்றன. குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் போது இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
நீங்கள் உண்ணும் உணவு உங்கள் குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தினால் தவிர்த்திடுங்கள். இல்லையேல் நீங்கள் அதை தொடர்ந்து உண்ணலாம். நீங்கள் தாய்ப்பாலூட்டும் போது காரமான உணவுகளை கூட உட்கொள்ளலாம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொண்டு, குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாத்திடுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X