என் மலர்
பெண்கள் மருத்துவம்
பெரியவர்களாகி புரிய வேண்டியதெல்லாம் குழந்தைப் பருவத்திலேயே புரிந்து கொள்ளுமளவுக்கு முதிர்ச்சியடைகின்றனர். இதன் காரணமாக உணர்வுரீதியில் உடலும் தூண்டப்பட்டு சிறு வயதிலேயே பருவமெய்துகின்றனர்.
குறும்புத்தனம் மாறாத 9 வயதுக் குழந்தை பெரிய மனுஷியாகி குத்த வைக்கிறாள். அவளுக்கு இதையெல்லாம் எப்படிப் புரிய வைப்பது என்று திணறிப்போகின்றனர் அவளது பெற்றோர். வேலைக்குச் செல்லும் பெண்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் 30 வயதுக்கும் மேல்தான் திருமணம் குறித்தே யோசிக்கின்றனர். பருவமெய்தும் வயது குறைவது போல் மெனோபாஸ் எனும் மாதவிடாய் நின்று போகும் வயதும் குறைந்து வருகிறது. இப்படியான கால மாற்றம் மருத்துவ ரீதியாக ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதுதானா? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பெண் குழந்தைகள் சராசரியாக 14 வயதில்தான் பருவமெய்தினார்கள். இப்போதோ 9 வயதில் கூட பருவமெய்தி விடுகிறார்கள். மிகக் குறைந்த வயதில் பெண் குழந்தைகள் பருவமெய்தினால் தலைப்பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி எனும் சுரப்பி, சிறுநீரகத்துக்கு அருகே இருக்கும் அட்ரினல் எனும் சுரப்பி மற்றும் சினை முட்டை உருவாகும் இடம் ஆகியவற்றில் ஏதேனும் கட்டி இருக்கிறதா? என்று சோதிப்போம்.
முன்பு போல் தற்போது குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில்லை, உட்கார்ந்தபடியேதான் இருக்கிறார்கள். இன்றைய உணவுப் பழக்கமும் இயற்கைக்கு புறம்பானதாக இருக்கிறது. அவர்கள் உண்ணும் உணவில் தேவையான சத்துகள் இருப்பதில்லை. பெரும்பாலும் கொழுப்புச்சத்து, உப்பு, சர்க்கரை ஆகியவையே அதிகளவில் இருக்கின்றன. இதனால் ஊளைச்சதையாக உடல் வளர்ந்து விடுகிறது. குறிப்பிட்ட எடையை எட்டியதும் பருவமெய்துவதென உடலுக்கு ஒரு கணக்கு இருக்கிறது.

குறைந்த வயதில் பருவம் எய்திய பெண் குழந்தைகளுக்கு சினைப்பையில் நீர்க்கட்டி என்கிற pco இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். சினைப்பையில் நீர்க்கட்டி ஏற்படும்போது மாதவிடாய் பிரச்சனை, கரு உண்டாவதில் தாமதம், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பாதிப்புகள் ஏற்படலாம்.
இயற்கையான முறையில் வளர்க்கப்படும் மாட்டின் பால்தான் சத்தைக் கொடுக்கும். ஹார்மோன் கலப்புக்கு ஆளான பாலைக் குடிக்கும்போது ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படத்தான் செய்யும். காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக் கொண்டு இறைச்சியை அளவாக உட்கொண்டாலே இது போன்ற பிரச்னைகளை தடுக்க முடியும்.
குறைந்த வயதில் பருவமெய்துவதற்கு உளவியல் ரீதியான காரணங்களும் இருக்கின்றன. பிட்யூட்டரி சுரப்பிக்கு மேலே இருக்கும் hypothalamus தான் உணர்வையும், உடலையும் இணைக்கிறது. அதில் சுரக்கும் ஹார்மோன்தான் உணர்வை பிரதிபலிக்கிறது.
பெரியவர்களாகி புரிய வேண்டியதெல்லாம் குழந்தைப் பருவத்திலேயே புரிந்து கொள்ளுமளவுக்கு முதிர்ச்சியடைகின்றனர். வளர்ச்சி இல்லாத முதிர்ச்சி அது. இதன் காரணமாக உணர்வுரீதியில் உடலும் தூண்டப்படுகிறது. அவர்கள் சிறு வயதிலேயே பருவமெய்துகின்றனர். பெற்றோர்கள் குழந்தைகளை நல்ல முறையில் வழி நடத்த வேண்டும்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பெண் குழந்தைகள் சராசரியாக 14 வயதில்தான் பருவமெய்தினார்கள். இப்போதோ 9 வயதில் கூட பருவமெய்தி விடுகிறார்கள். மிகக் குறைந்த வயதில் பெண் குழந்தைகள் பருவமெய்தினால் தலைப்பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி எனும் சுரப்பி, சிறுநீரகத்துக்கு அருகே இருக்கும் அட்ரினல் எனும் சுரப்பி மற்றும் சினை முட்டை உருவாகும் இடம் ஆகியவற்றில் ஏதேனும் கட்டி இருக்கிறதா? என்று சோதிப்போம்.
முன்பு போல் தற்போது குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில்லை, உட்கார்ந்தபடியேதான் இருக்கிறார்கள். இன்றைய உணவுப் பழக்கமும் இயற்கைக்கு புறம்பானதாக இருக்கிறது. அவர்கள் உண்ணும் உணவில் தேவையான சத்துகள் இருப்பதில்லை. பெரும்பாலும் கொழுப்புச்சத்து, உப்பு, சர்க்கரை ஆகியவையே அதிகளவில் இருக்கின்றன. இதனால் ஊளைச்சதையாக உடல் வளர்ந்து விடுகிறது. குறிப்பிட்ட எடையை எட்டியதும் பருவமெய்துவதென உடலுக்கு ஒரு கணக்கு இருக்கிறது.

குறைந்த வயதில் பருவம் எய்திய பெண் குழந்தைகளுக்கு சினைப்பையில் நீர்க்கட்டி என்கிற pco இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். சினைப்பையில் நீர்க்கட்டி ஏற்படும்போது மாதவிடாய் பிரச்சனை, கரு உண்டாவதில் தாமதம், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பாதிப்புகள் ஏற்படலாம்.
இயற்கையான முறையில் வளர்க்கப்படும் மாட்டின் பால்தான் சத்தைக் கொடுக்கும். ஹார்மோன் கலப்புக்கு ஆளான பாலைக் குடிக்கும்போது ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படத்தான் செய்யும். காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக் கொண்டு இறைச்சியை அளவாக உட்கொண்டாலே இது போன்ற பிரச்னைகளை தடுக்க முடியும்.
குறைந்த வயதில் பருவமெய்துவதற்கு உளவியல் ரீதியான காரணங்களும் இருக்கின்றன. பிட்யூட்டரி சுரப்பிக்கு மேலே இருக்கும் hypothalamus தான் உணர்வையும், உடலையும் இணைக்கிறது. அதில் சுரக்கும் ஹார்மோன்தான் உணர்வை பிரதிபலிக்கிறது.
பெரியவர்களாகி புரிய வேண்டியதெல்லாம் குழந்தைப் பருவத்திலேயே புரிந்து கொள்ளுமளவுக்கு முதிர்ச்சியடைகின்றனர். வளர்ச்சி இல்லாத முதிர்ச்சி அது. இதன் காரணமாக உணர்வுரீதியில் உடலும் தூண்டப்படுகிறது. அவர்கள் சிறு வயதிலேயே பருவமெய்துகின்றனர். பெற்றோர்கள் குழந்தைகளை நல்ல முறையில் வழி நடத்த வேண்டும்.
நவீன காலமாற்றங்களுக்கு ஏற்ப பெண்களின் உடல்நிலை குறித்து எவ்வித கவனம் இருந்தால் வாழ்வில் ஒளிமயம் மலரும் என்று விரிவாக பார்ப்போம்.
பெண்கள் இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். பல பொறுப்புகளை பெண்கள், ஒரே நேரத்தில் கையாளும் சூழல் இன்று நிலவி வருகிறது. மேலும் சமூக சூழலிலும், வாழ்க்கை நடைமுறையிலும் நாம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறோம். முன்னேற்றமும், மாற்றமும் ஒன்று சேரும்போது பெண்களின் உடல் நலத்தில் பல்வேறு சிக்கல்கள் உருவெடுக்கின்றன. இவ்வாறான நவீன காலமாற்றங்களுக்கு ஏற்ப பெண்களின் உடல்நிலை குறித்து எவ்வித கவனம் இருந்தால் வாழ்வில் ஒளிமயம் மலரும் என்று பார்ப்போம்.
இன்றைய சூழலும் கர்ப்பகாலமும் :
ஒரு பெண் தாயாய் உருவெடுக்கும் காலம் 40 வாரங்கள் அடங்கிய கர்ப்பகாலமாகும். கர்ப்பகாலத்தில் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள், சத்து மாத்திரைகள் உட்கொள்வது பற்றி பல ஆண்டுகளாக விழிப்புணர்வு பெற்று வருகிறோம். ஆயினும், இன்று புதிய யுக்திகளை கவனிக்க வேண்டியவைகளை பற்றி இதில் காண்போம். இன்று சந்திக்கும் கர்ப்பகால சிக்கல்களில் சில, அதிகரிக்கும் கருச்சிதைவு, கர்ப்பகால சர்க்கரை நோய், கர்ப்பகால ரத்த அழுத்த நோய் மற்றும் அதிகரிக்கும் சிசேரியன் முறை பிரசவம் போன்றவைகளின் காரணங்களையும் அவற்றை, எவ்வாறு தவிர்க்கலாம் என்பது பற்றியும் பார்ப்போம்.
கருச்சிதைவு :
கருத்தரித்த நாள் முதல் 2 மாதங்களுக்குள் மிக அதிக கருச்சிதைவுகள் ஏற்படுகின்றன. இதற்கு மரபணுக்கோளாறுகளுடன் உருவாகும் கரு(தரமில்லாத விதை), ஹார்மோன் கோளாறுகள், மன அழுத்தம், தைராய்டு, சர்க்கரை நோய் ஆகியவை முக்கிய காரணமாக அமைகின்றன.
தவிர்ப்பது எப்படி?
கர்ப்பம் தரிக்கும் முன்பே தகுந்த மருத்துவ ஆலோசனைகள் பெற்று, தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். போலிக் ஆஸிட் மாத்திரைகளை கருத்தரிக்கும் முன்பு இருந்தே உட்கொண்டு வந்தால் ஆரோக்கியமான கரு உருவாகும்.
மாதவிடாய் தள்ளிய உடன் மருத்துவ ஆலோசனை பெறுவது சிறந்தது. பெரும்பாலும் 45 அல்லது 60 நாட்கள் கழித்து முதல் பரிசோதனையை மேற்கொள்கின்றனர். சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்தஉடன் மருத்துவரின் ஆலோசனைகளை பெற வேண்டும். தேவையான நேரத்தில் ஸ்கேன் மற்றும் ரத்த பரிசோதனைகளை செய்வது அவசியம்.
இதனால் ஆரம்பத்திலேயே கருவின் ஆரோக்கியத்தை உறுதி செய்து அதற்கு தக்கவாறு பாதுகாக்கலாம். மேலும் சத்துமாத்திரைகள் உட்கொள்ளுவதன் மூலம் கருச்சிதைவு ஏற்படும் என்றும், குழந்தையின் நிறத்தில் மாற்றம் ஏற்படும் என்றும், குழந்தை அதிக எடையுடன் பிறக்கும் என்றும் தவறான எண்ணங்கள் இன்று மக்களிடையே வளர்ந்து வருகிறது. இது முற்றிலும் தவறு. நமது உணவு பழக்கவழக்கங்கள் சரியில்லாத இச்சூழலில் சத்து மாத்திரைகள் மிக அவசியமான தேவையாகும்.

சர்க்கரை நோய்-ரத்த அழுத்தம் :
பரம்பரை சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், அதிக உடல் பருமன், 30 வயது முதல் 35 வயதுக்கு மேல் கர்ப்பம் தரித்தல், நீண்ட நாள் குழந்தை இன்மை பிரச்சினைக்குப்பின் கருத்தரித்தல் இதுபோன்ற பிரச்சினைகள் உள்ளோருக்கு சர்க்கரை வியாதி மற்றும் ரத்த அழுத்தம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மேற்கூறிய காரணி உள்ளவர்கள் கருத்தரிக்கும் முன்பே தமது ரத்தத்தில் சர்க்கரை அளவை அறிந்து கொள்ள வேண்டும்.
கருத்தரிப்பதற்கு முன் உடல் எடையினை சீராக்கி கொண்ட பின்னரே கருத்தரிக்க வேண்டும். உணவு பழக்கவழக்கங்களில் மருத்துவ ஆலோசனை பெற்று, கருவுரும் முன்னும், பின்னும் முறையான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு சர்க்கரை நோய் வந்துவிட்டால் குழந்தைக்கு பாதிப்பு வராமல் இருக்க அடிக்கடி மருத்துவரின் ஆலோசனைகளையும், முறையான பரிசோதனைகளையும் மேற்கொண்டு சிரமங்களை தவிர்க்கலாம்.
உயிர்க்கொல்லி :
முறையான பரிசோதனைகள், மாத்திரைகள் மூலம் ரத்த அழுத்தத்தினால் ஏற்படக்கூடிய தாய்-சேய் உடல் நலப்பாதிப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
சிசேரியன் முறை பிரசவம் :
சுகப்பிரசவம் எண்ணிக்கை குறைந்து சிசேரியன் முறை பிரசவங்களின் எண்ணிக்கை இன்றைய சூழலில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தாய் மற்றும் சேயினை காப்பாற்ற வேண்டிய சூழலில் சிசேரியன் முறை பிரசவம் மேற்கொள்ளப்படுகிறது.
பிரசவத்தின்போது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படுதல், குழந்தை அதிக எடையுடன் பிறத்தல், தாயின் உயிருக்கு ஆபத்தாகும் ரத்த அழுத்தம், கர்ப்பகாலத்தில் ரத்தப்போக்கு போன்ற சூழ்நிலைகளில் சிசேரியன் முறை பிரசவம் அவசியமாகிறது. இதுத்தவிர வேறுகாரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் சிசேரியன் முறை பிரசவங்களை எப்படி தவிர்க்கலாம் என்று காண்போம்.
நவீன தொழில்நுட்ப காரணத்தினால் உடற்பயிற்சி குறைந்து வருகிறது. உடற்பயிற்சிக்கு இணையான அன்றாட வீட்டு வேலைகளை எந்திரங்களே செய்து வருகின்றன. இதனால் அடி வயிறு, இடுப்பு மற்றும் கால் பகுதிகளில் உள்ள தசைகளின் பலம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக பிரசவ நேரத்தில் குழந்தையின் தலை திரும்பி பிரசவ பாதையில் பொருந்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.
மகப்பேறு காலங்களில் முக்கியமாக பிரசவவலி மற்றும் அந்த நேரத்தில் ஏற்படும் சிரமங்களை எவ்வாறு சந்திப்பது என்பதனை கர்ப்பிணி பெண் மற்றும் கணவர், அவரது குடும்பத்தினர் கர்ப்பகாலத்திலேயே டாக்டர் வழக்கும் அறிவுரைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி மேற்கொள்வது அவசியம்.
நல்ல உடல் ஆரோக்கியம், தேவையான உடற்பயிற்சி, போதிய மனவலிமை இவை மூன்றும் ஒருசேர இருந்தால் சுக பிரசவத்திற்கு அதிக வாய்ப்புகள் அமையும். குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் மற்றும் கருத்தடை பற்றிய ஆலோசனைகளை பெண்கள் முழுமையாக டாக்டரிடம் பெற்று தெளிவுபெற்ற பின்னரே வீடு திரும்ப வேண்டும். முறையான கருத்தடை முறைகளை பயன்படுத்துவதன் மூலம் தேவையில்லாத, இடைவெளியில்லாத கர்ப்பம், கருக்கலைப்பு ஆகியவற்றை தவிர்த்து பெண் தன் உடல் நலத்தை பாதுகாக்க முடியும்.
தாய்மையின் மேன்மையை போற்றுவோம்!
தாய்-சேய் நலத்தினை கவனமுடன் காப்போம்!
பெண் சிசுவின் பிறப்பை ஆதரிப்போம்!
சமுதாயத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து அதற்கு முதுகெலும்பாய்த்திகழும் பெண்களின் மேன்மையை பாதுகாத்து ஆரோக்கியமான சமுதாயத்திற்கு வழிவகுப்போம்.
இன்றைய சூழலும் கர்ப்பகாலமும் :
ஒரு பெண் தாயாய் உருவெடுக்கும் காலம் 40 வாரங்கள் அடங்கிய கர்ப்பகாலமாகும். கர்ப்பகாலத்தில் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள், சத்து மாத்திரைகள் உட்கொள்வது பற்றி பல ஆண்டுகளாக விழிப்புணர்வு பெற்று வருகிறோம். ஆயினும், இன்று புதிய யுக்திகளை கவனிக்க வேண்டியவைகளை பற்றி இதில் காண்போம். இன்று சந்திக்கும் கர்ப்பகால சிக்கல்களில் சில, அதிகரிக்கும் கருச்சிதைவு, கர்ப்பகால சர்க்கரை நோய், கர்ப்பகால ரத்த அழுத்த நோய் மற்றும் அதிகரிக்கும் சிசேரியன் முறை பிரசவம் போன்றவைகளின் காரணங்களையும் அவற்றை, எவ்வாறு தவிர்க்கலாம் என்பது பற்றியும் பார்ப்போம்.
கருச்சிதைவு :
கருத்தரித்த நாள் முதல் 2 மாதங்களுக்குள் மிக அதிக கருச்சிதைவுகள் ஏற்படுகின்றன. இதற்கு மரபணுக்கோளாறுகளுடன் உருவாகும் கரு(தரமில்லாத விதை), ஹார்மோன் கோளாறுகள், மன அழுத்தம், தைராய்டு, சர்க்கரை நோய் ஆகியவை முக்கிய காரணமாக அமைகின்றன.
தவிர்ப்பது எப்படி?
கர்ப்பம் தரிக்கும் முன்பே தகுந்த மருத்துவ ஆலோசனைகள் பெற்று, தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். போலிக் ஆஸிட் மாத்திரைகளை கருத்தரிக்கும் முன்பு இருந்தே உட்கொண்டு வந்தால் ஆரோக்கியமான கரு உருவாகும்.
மாதவிடாய் தள்ளிய உடன் மருத்துவ ஆலோசனை பெறுவது சிறந்தது. பெரும்பாலும் 45 அல்லது 60 நாட்கள் கழித்து முதல் பரிசோதனையை மேற்கொள்கின்றனர். சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்தஉடன் மருத்துவரின் ஆலோசனைகளை பெற வேண்டும். தேவையான நேரத்தில் ஸ்கேன் மற்றும் ரத்த பரிசோதனைகளை செய்வது அவசியம்.
இதனால் ஆரம்பத்திலேயே கருவின் ஆரோக்கியத்தை உறுதி செய்து அதற்கு தக்கவாறு பாதுகாக்கலாம். மேலும் சத்துமாத்திரைகள் உட்கொள்ளுவதன் மூலம் கருச்சிதைவு ஏற்படும் என்றும், குழந்தையின் நிறத்தில் மாற்றம் ஏற்படும் என்றும், குழந்தை அதிக எடையுடன் பிறக்கும் என்றும் தவறான எண்ணங்கள் இன்று மக்களிடையே வளர்ந்து வருகிறது. இது முற்றிலும் தவறு. நமது உணவு பழக்கவழக்கங்கள் சரியில்லாத இச்சூழலில் சத்து மாத்திரைகள் மிக அவசியமான தேவையாகும்.

சர்க்கரை நோய்-ரத்த அழுத்தம் :
பரம்பரை சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், அதிக உடல் பருமன், 30 வயது முதல் 35 வயதுக்கு மேல் கர்ப்பம் தரித்தல், நீண்ட நாள் குழந்தை இன்மை பிரச்சினைக்குப்பின் கருத்தரித்தல் இதுபோன்ற பிரச்சினைகள் உள்ளோருக்கு சர்க்கரை வியாதி மற்றும் ரத்த அழுத்தம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மேற்கூறிய காரணி உள்ளவர்கள் கருத்தரிக்கும் முன்பே தமது ரத்தத்தில் சர்க்கரை அளவை அறிந்து கொள்ள வேண்டும்.
கருத்தரிப்பதற்கு முன் உடல் எடையினை சீராக்கி கொண்ட பின்னரே கருத்தரிக்க வேண்டும். உணவு பழக்கவழக்கங்களில் மருத்துவ ஆலோசனை பெற்று, கருவுரும் முன்னும், பின்னும் முறையான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு சர்க்கரை நோய் வந்துவிட்டால் குழந்தைக்கு பாதிப்பு வராமல் இருக்க அடிக்கடி மருத்துவரின் ஆலோசனைகளையும், முறையான பரிசோதனைகளையும் மேற்கொண்டு சிரமங்களை தவிர்க்கலாம்.
உயிர்க்கொல்லி :
முறையான பரிசோதனைகள், மாத்திரைகள் மூலம் ரத்த அழுத்தத்தினால் ஏற்படக்கூடிய தாய்-சேய் உடல் நலப்பாதிப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
சிசேரியன் முறை பிரசவம் :
சுகப்பிரசவம் எண்ணிக்கை குறைந்து சிசேரியன் முறை பிரசவங்களின் எண்ணிக்கை இன்றைய சூழலில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தாய் மற்றும் சேயினை காப்பாற்ற வேண்டிய சூழலில் சிசேரியன் முறை பிரசவம் மேற்கொள்ளப்படுகிறது.
பிரசவத்தின்போது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படுதல், குழந்தை அதிக எடையுடன் பிறத்தல், தாயின் உயிருக்கு ஆபத்தாகும் ரத்த அழுத்தம், கர்ப்பகாலத்தில் ரத்தப்போக்கு போன்ற சூழ்நிலைகளில் சிசேரியன் முறை பிரசவம் அவசியமாகிறது. இதுத்தவிர வேறுகாரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் சிசேரியன் முறை பிரசவங்களை எப்படி தவிர்க்கலாம் என்று காண்போம்.
நவீன தொழில்நுட்ப காரணத்தினால் உடற்பயிற்சி குறைந்து வருகிறது. உடற்பயிற்சிக்கு இணையான அன்றாட வீட்டு வேலைகளை எந்திரங்களே செய்து வருகின்றன. இதனால் அடி வயிறு, இடுப்பு மற்றும் கால் பகுதிகளில் உள்ள தசைகளின் பலம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக பிரசவ நேரத்தில் குழந்தையின் தலை திரும்பி பிரசவ பாதையில் பொருந்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.
மகப்பேறு காலங்களில் முக்கியமாக பிரசவவலி மற்றும் அந்த நேரத்தில் ஏற்படும் சிரமங்களை எவ்வாறு சந்திப்பது என்பதனை கர்ப்பிணி பெண் மற்றும் கணவர், அவரது குடும்பத்தினர் கர்ப்பகாலத்திலேயே டாக்டர் வழக்கும் அறிவுரைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி மேற்கொள்வது அவசியம்.
நல்ல உடல் ஆரோக்கியம், தேவையான உடற்பயிற்சி, போதிய மனவலிமை இவை மூன்றும் ஒருசேர இருந்தால் சுக பிரசவத்திற்கு அதிக வாய்ப்புகள் அமையும். குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் மற்றும் கருத்தடை பற்றிய ஆலோசனைகளை பெண்கள் முழுமையாக டாக்டரிடம் பெற்று தெளிவுபெற்ற பின்னரே வீடு திரும்ப வேண்டும். முறையான கருத்தடை முறைகளை பயன்படுத்துவதன் மூலம் தேவையில்லாத, இடைவெளியில்லாத கர்ப்பம், கருக்கலைப்பு ஆகியவற்றை தவிர்த்து பெண் தன் உடல் நலத்தை பாதுகாக்க முடியும்.
தாய்மையின் மேன்மையை போற்றுவோம்!
தாய்-சேய் நலத்தினை கவனமுடன் காப்போம்!
பெண் சிசுவின் பிறப்பை ஆதரிப்போம்!
சமுதாயத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து அதற்கு முதுகெலும்பாய்த்திகழும் பெண்களின் மேன்மையை பாதுகாத்து ஆரோக்கியமான சமுதாயத்திற்கு வழிவகுப்போம்.
பெண்களே தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பாக, சில விஷயங்களை கண்டிப்பாக செய்துவிட்டோமா என சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
அலுவலக வேலை, வீட்டு வேலை என எல்லாவற்றையும் முடித்துவிட்டு, அலுப்பில் அப்படியே தூங்கச் சென்றுவிடுகிறீர்களா? அப்படியானால் இன்று முதல் உங்களுக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பாக, சில விஷயங்களை செய்துவிட்டோமா என சரிபார்த்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு, அடுத்த நாள் வேலைகளைப் பற்றி யோசித்துக் கொண்டே தூங்கச் செல்லலாம்.
தினமும் தூங்கச் செல்லும் முன்பாக, முகத்தில் உள்ள மேக்கப்பை நிச்சயம் கலைத்துவிட்டுத் தான் தூங்க வேண்டும்.
அதேபோல் நீங்கள் கான்டக்ட் லென்ஸ் பயன்படுத்துபவராக இருந்தால், அதை இரவில் கட்டாயம் நீக்கிவிட்டு, கண்களைக் கழுவி விட்டு தான் தூங்க வேண்டும். நீண்ட நேரங்களுக்கு லென்ஸ் அணிந்திருத்தல் கூடாது.

இந்தியர்களாக இருந்தால், தங்கத் தோடு, மூக்குத்தி, மோதிரம், தங்க செயின்கள், வளையல் ஆகியவற்றை அணிந்திருப்பார்கள். அவற்றைத் தூங்கச் செல்வதற்கு முன்பாக கழட்டி வைத்துவிடுவது நல்லது. சின்ன அணிகலனாக இருந்தாலும் சில சமயங்களில் எங்காவது குத்தி, பெரும் ஆபத்தைக் கூட விளைவிக்கும்.
தூங்கும் போது மேக்கப்பை கலைத்துவிட்டாலும், தலை அலங்காரங்களைப் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. ஆனால் கட்டாயம் தூங்கச் செல்லும்போது, தலையில் உள்ள ஹேர் -பின் ஆகியவற்றை எடுத்துவிட்டுத்தான் தூங்கச் செல்ல வேண்டும். இல்லையென்றால் அவை தலையில் எங்காவது குத்திவிடும்.
பெரும்பாலான பெண்கள் தூங்கச் செல்லும் முன் உடை மாற்றிவிடுகிறார்கள். ஆனால் தங்களுடைய உள்ளாடைகளைப் பற்றிக் கண்டு கொள்வதே கிடையாது. ஆனால் அது முற்றிலும் தவறான விஷயம். தூங்கச் செல்லும்போது, இறுக்கமான உடைகளை அணிந்திருத்தல் கூடாது. உள்ளாடைகளை நீக்கிவிட்டு தூங்கச் செல்வது சிறந்தது.
தினமும் தூங்கச் செல்லும் முன்பாக, முகத்தில் உள்ள மேக்கப்பை நிச்சயம் கலைத்துவிட்டுத் தான் தூங்க வேண்டும்.
அதேபோல் நீங்கள் கான்டக்ட் லென்ஸ் பயன்படுத்துபவராக இருந்தால், அதை இரவில் கட்டாயம் நீக்கிவிட்டு, கண்களைக் கழுவி விட்டு தான் தூங்க வேண்டும். நீண்ட நேரங்களுக்கு லென்ஸ் அணிந்திருத்தல் கூடாது.

இந்தியர்களாக இருந்தால், தங்கத் தோடு, மூக்குத்தி, மோதிரம், தங்க செயின்கள், வளையல் ஆகியவற்றை அணிந்திருப்பார்கள். அவற்றைத் தூங்கச் செல்வதற்கு முன்பாக கழட்டி வைத்துவிடுவது நல்லது. சின்ன அணிகலனாக இருந்தாலும் சில சமயங்களில் எங்காவது குத்தி, பெரும் ஆபத்தைக் கூட விளைவிக்கும்.
தூங்கும் போது மேக்கப்பை கலைத்துவிட்டாலும், தலை அலங்காரங்களைப் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. ஆனால் கட்டாயம் தூங்கச் செல்லும்போது, தலையில் உள்ள ஹேர் -பின் ஆகியவற்றை எடுத்துவிட்டுத்தான் தூங்கச் செல்ல வேண்டும். இல்லையென்றால் அவை தலையில் எங்காவது குத்திவிடும்.
பெரும்பாலான பெண்கள் தூங்கச் செல்லும் முன் உடை மாற்றிவிடுகிறார்கள். ஆனால் தங்களுடைய உள்ளாடைகளைப் பற்றிக் கண்டு கொள்வதே கிடையாது. ஆனால் அது முற்றிலும் தவறான விஷயம். தூங்கச் செல்லும்போது, இறுக்கமான உடைகளை அணிந்திருத்தல் கூடாது. உள்ளாடைகளை நீக்கிவிட்டு தூங்கச் செல்வது சிறந்தது.
வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு ஆரம்பத்திலேயே சில உணவுப்பொருட்களின் மூலமாகவே அதிகமாகாமல் குணப்படுத்த முடியும். அந்த உணவுகள் என்னவென்று பார்க்கலாம்.
எல்லா பெண்களுக்குமே வெள்ளைப்படுதல் குறித்த அனுபவம் நிச்சயம் இருக்கும். எல்லோருக்குமே வெள்ளைப்படுதல் உண்டாகும். அது இயல்பான ஒன்று தான். ஆனால், அதன் அளவு அதிகரிக்கும்போது தான் உடலில் பல பிரச்சனைகள் உண்டாகின்றன. அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், பிரச்சனைகள் அதிகமாகி, மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உண்டாகும். ஆனால் அதற்கு அவசியமில்லாமல் ஆரம்பத்திலேயே சில உணவுப்பொருட்களின் மூலமாகவே, வெள்ளைப்படுதல் அதிகமாகாமல் குணப்படுத்த முடியும்.
வெந்தயம் பிஎச் அளவை அதிகரிக்கச் செய்யும். ஒரு ஸ்பூன் வெந்தயத்தைத் தண்ணீர் ஊற்றி இரவு முழுக்க ஊறவைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அந்த தண்ணீரை வடிகட்டி, ஒரு ஸ்பூன் தேன் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
தினமும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், அதிக அளவிலான வெள்ளைப்படுதல் சரியாகும். ஜீரணக் கோளாறுகளும் உங்களை நெருங்கவே முடியாது.

ஒரு ஸ்பூன் இஞ்சிப் பொடியை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு, கொதிக்க வேண்டும். அது ஒரு டம்ளராக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்னர் வடிகட்டி குடித்தால், வெள்ளைப்படுதல் பிரச்சனையை மிக விரைவாகத் தீர்க்க முடியும்.
பத்து கெய்யா இலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை நன்கு கொதித்தபின் வடிகட்டி, குளிர வைக்கவும். அந்த தண்ணீரைக் கொண்டு, பிறப்புறுப்பைக் கழுவினாலும் வெள்ளைப்படுதல் குறையும்.
தினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் குடித்து வருவது கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதோடு, ஒரு கைப்பிடியளவு மாதுளை இலைகளை அரைத்து இரண்டு கிளாஸ் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொண்டு, அதனுடன் மிளகுப்பொடியைச் சேர்த்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வரவும்.
4 வெண்டைக்காயை எடுத்துக் கொண்டு, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். அதை வடிகட்டி, குடித்து வர வெள்ளைப்படுதல் நிற்கும். வெண்டைக்காய் வேக வைத்த தண்ணீர் மிகவும் வழவழப்பாக இருக்குமாதலால், சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
வெந்தயம் பிஎச் அளவை அதிகரிக்கச் செய்யும். ஒரு ஸ்பூன் வெந்தயத்தைத் தண்ணீர் ஊற்றி இரவு முழுக்க ஊறவைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அந்த தண்ணீரை வடிகட்டி, ஒரு ஸ்பூன் தேன் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
தினமும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், அதிக அளவிலான வெள்ளைப்படுதல் சரியாகும். ஜீரணக் கோளாறுகளும் உங்களை நெருங்கவே முடியாது.

ஒரு ஸ்பூன் இஞ்சிப் பொடியை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு, கொதிக்க வேண்டும். அது ஒரு டம்ளராக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்னர் வடிகட்டி குடித்தால், வெள்ளைப்படுதல் பிரச்சனையை மிக விரைவாகத் தீர்க்க முடியும்.
பத்து கெய்யா இலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை நன்கு கொதித்தபின் வடிகட்டி, குளிர வைக்கவும். அந்த தண்ணீரைக் கொண்டு, பிறப்புறுப்பைக் கழுவினாலும் வெள்ளைப்படுதல் குறையும்.
தினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் குடித்து வருவது கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதோடு, ஒரு கைப்பிடியளவு மாதுளை இலைகளை அரைத்து இரண்டு கிளாஸ் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொண்டு, அதனுடன் மிளகுப்பொடியைச் சேர்த்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வரவும்.
4 வெண்டைக்காயை எடுத்துக் கொண்டு, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். அதை வடிகட்டி, குடித்து வர வெள்ளைப்படுதல் நிற்கும். வெண்டைக்காய் வேக வைத்த தண்ணீர் மிகவும் வழவழப்பாக இருக்குமாதலால், சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
பிரசவத்திற்று பிறகு உடல் எடையை உடனே குறைக்கவேண்டும் என்ற எண்ணத்தில், கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
பிரசவத்திற்கு பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுள் உடல் எடை அதிகரிப்பு முக்கியமானது. அதிலும் ஒருசில பெண்களுக்கு வழக்கத்தை விட உடல் எடை கிடுகிடுவென உயர்ந்து விடும். எடை அதிகரித்துவிட்டால், அதிரடியாக அதை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடக்கூடாது. போதுமான அளவு சத்துணவுகளை சாப்பிட்டு மிதமான முறையில் எடைக்குறைப்பில் ஈடுபடவேண்டும். உடல் எடையை உடனே குறைக்கவேண்டும் என்ற எண்ணத்தில், கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
கர்ப்பிணி பெண்கள் உடல் எடை குறைப்பிற்கு செய்ய வேண்டியவை:
* கர்ப்பக் காலத்தில் கடைப்பிடித்த உணவு பழக்கவழக்கங்களில் அத்தியாவசியமானவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அதிக அளவு தண்ணீர் பருகுவது அவசியம். அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.
* கீரை வகைகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். மீன் உணவுகளையும் விரும்பி சாப்பிட வேண்டும். அவற்றில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் பிரசவத்திற்கு பிறகு அதிகரித்த உடல் எடையை குறைப்பதற்கு உதவும். பிரசவத்திற்கு பிறகு தாய்மார்களுக்கு தேவையான வேறுசில சத்துக்களும் அதில் இருக்கின்றன.

* தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், உடல் எடை குறைப்பிற்கும் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். குறிப்பாக பால், தயிர் போன்றவற்றை அதிகம் பருக வேண்டும். அதில் இருக்கும் கால்சியம் எலும்புகளை வலுவாக்கும். உடல் எடையையும் குறைக்கும்.
* பெரும்பாலான பெண்களை முதுகுவலி பிரச்சினை வாட்டி வதைக்கும். கால்சியம் சத்து குறைபாடே அதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
* புரோட்டின் சத்துக்கள் நிறைந்த உணவுகளும் உடல் எடை குறைப்பிற்கு வழி வகுக்கும். பீன்ஸ், கோழி இறைச்சி போன்றவற்றில் கொழுப்பு சத்து குறைவாக இருப்பதோடு புரோட்டின் அதிகமாக இருக்கும். அவை உடலுக்கு போதுமான சக்தியை கொடுத்து எடை குறைப்பை துரிதப்படுத்தும்.
* எலுமிச்சை உடல் எடையை குறைப்பதோடு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் துணைபுரியும். வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து அதனுடன் தேன் சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் குடித்தால் உடலில் தங்கியுள்ள கொழுப்பு கரையும். அது எடை குறைப்புக்கு முன்னோட்டமாக அமையும்.
* உணவு அளவை குறைத்து அதற்கு ஈடாக காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டும். யோகாசனம் மற்றும் எளிமையான உடற்பயிற்சிகளை அன்றாடம் செய்வதையும் வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் உடல் எடை குறைப்பிற்கு செய்ய வேண்டியவை:
* கர்ப்பக் காலத்தில் கடைப்பிடித்த உணவு பழக்கவழக்கங்களில் அத்தியாவசியமானவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அதிக அளவு தண்ணீர் பருகுவது அவசியம். அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.
* கீரை வகைகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். மீன் உணவுகளையும் விரும்பி சாப்பிட வேண்டும். அவற்றில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் பிரசவத்திற்கு பிறகு அதிகரித்த உடல் எடையை குறைப்பதற்கு உதவும். பிரசவத்திற்கு பிறகு தாய்மார்களுக்கு தேவையான வேறுசில சத்துக்களும் அதில் இருக்கின்றன.

* தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், உடல் எடை குறைப்பிற்கும் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். குறிப்பாக பால், தயிர் போன்றவற்றை அதிகம் பருக வேண்டும். அதில் இருக்கும் கால்சியம் எலும்புகளை வலுவாக்கும். உடல் எடையையும் குறைக்கும்.
* பெரும்பாலான பெண்களை முதுகுவலி பிரச்சினை வாட்டி வதைக்கும். கால்சியம் சத்து குறைபாடே அதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
* புரோட்டின் சத்துக்கள் நிறைந்த உணவுகளும் உடல் எடை குறைப்பிற்கு வழி வகுக்கும். பீன்ஸ், கோழி இறைச்சி போன்றவற்றில் கொழுப்பு சத்து குறைவாக இருப்பதோடு புரோட்டின் அதிகமாக இருக்கும். அவை உடலுக்கு போதுமான சக்தியை கொடுத்து எடை குறைப்பை துரிதப்படுத்தும்.
* எலுமிச்சை உடல் எடையை குறைப்பதோடு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் துணைபுரியும். வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து அதனுடன் தேன் சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் குடித்தால் உடலில் தங்கியுள்ள கொழுப்பு கரையும். அது எடை குறைப்புக்கு முன்னோட்டமாக அமையும்.
* உணவு அளவை குறைத்து அதற்கு ஈடாக காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டும். யோகாசனம் மற்றும் எளிமையான உடற்பயிற்சிகளை அன்றாடம் செய்வதையும் வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
குண்டு பூசணிக்காய் போல தோற்றம் தர யாருக்குமே விருப்பமிருக்காது. அதிலும் பெண்கள் ‘ஸ்லிம்’ அழகுக்கு மிகவும் ஆசைப்படுவார்கள். இதற்கு பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
குண்டு பூசணிக்காய் போல தோற்றம் தர யாருக்குமே விருப்பமிருக்காது. அதிலும் பெண்கள் ‘ஸ்லிம்’ அழகுக்கு மிகவும் ஆசைப்படுவார்கள்.
ஆனால் சில பொருட்கள் கொழுப்பு நிறைந்தவை, அவற்றைச் சாப்பிட்டால் உடல் எடை போட்டுவிடும் என்று ஒதுக்கிவிடுகிறோம்.
கொழுப்பு நிறைந்ததாகக் கருதப்படும் அந்த உணவுகளைப் பயன்படுத்தியும் ‘ஸ்லிம்’மான தோற்றத்தைப் பேண முடியும் என்று நாம் அறிவோமா?
ஆம், கொழுப்பு உணவுகளில் உள்ள பல கொழுப்பு அமிலங்களால் பாதகமான விளைவுகள் ஏற்பட்டாலும், நன்மை பயக்கக்கூடிய சில கொழுப்பு அமிலங்களும் இருக்கவே செய்கின்றன.
எனவே, பின்வரும் உணவுகளை உட்கொண்டும் ‘ஸ்லிம்’ அழகைக் காக்கலாம்.

அவகேடோ ஒரு பூரிதமற்ற கொழுப்பு அமில உணவாக உள்ளது. இதில் உள்ள ஒலியீக் அமிலம், அளவுக்கு மீறிய பசி தூண்டுதலை கட்டுப்படுத்துகின்றது. தவிர, உடலில் உள்ள அதிக கொழுப்புச் சத்தை எரிக்க உதவும் புரதம், நார்ச்சத்து ஆகியவை அதிகளவில் உள்ளன.
அதிக அளவில் கொழுப்பு அமிலம் நிறைந்த உணவாக தேங்காய் உள்ளது. இது லாரிக் அமிலத்தை அதிகளவில் உற்பத்தி செய்யக்கூடியது. இந்த அமிலம் உடலில் கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துவதுடன், அடிவயிறு பருப்பதையும் தடுக்கிறது.
இடை பருமனாவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு இருப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது. அதாவது, உடல் பருமனைத் தூண்டும் கொழுப்புகளை உறிஞ்சுவதைத் தடுக்கும் கலவைகள் பாதாம் பருப்பில் இருக்கிறதாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் யோகர்ட்டுக்கும் இடமுண்டு. இதில் புரோபயாடிக் பாக்டீரியாக்களும் நிறைந்திருப்பதால் அவை அடிவயிற்றுப் பருமனைத் தடுக்கின்றன.
ஆனால் சில பொருட்கள் கொழுப்பு நிறைந்தவை, அவற்றைச் சாப்பிட்டால் உடல் எடை போட்டுவிடும் என்று ஒதுக்கிவிடுகிறோம்.
கொழுப்பு நிறைந்ததாகக் கருதப்படும் அந்த உணவுகளைப் பயன்படுத்தியும் ‘ஸ்லிம்’மான தோற்றத்தைப் பேண முடியும் என்று நாம் அறிவோமா?
ஆம், கொழுப்பு உணவுகளில் உள்ள பல கொழுப்பு அமிலங்களால் பாதகமான விளைவுகள் ஏற்பட்டாலும், நன்மை பயக்கக்கூடிய சில கொழுப்பு அமிலங்களும் இருக்கவே செய்கின்றன.
எனவே, பின்வரும் உணவுகளை உட்கொண்டும் ‘ஸ்லிம்’ அழகைக் காக்கலாம்.

அவகேடோ ஒரு பூரிதமற்ற கொழுப்பு அமில உணவாக உள்ளது. இதில் உள்ள ஒலியீக் அமிலம், அளவுக்கு மீறிய பசி தூண்டுதலை கட்டுப்படுத்துகின்றது. தவிர, உடலில் உள்ள அதிக கொழுப்புச் சத்தை எரிக்க உதவும் புரதம், நார்ச்சத்து ஆகியவை அதிகளவில் உள்ளன.
அதிக அளவில் கொழுப்பு அமிலம் நிறைந்த உணவாக தேங்காய் உள்ளது. இது லாரிக் அமிலத்தை அதிகளவில் உற்பத்தி செய்யக்கூடியது. இந்த அமிலம் உடலில் கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துவதுடன், அடிவயிறு பருப்பதையும் தடுக்கிறது.
இடை பருமனாவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு இருப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது. அதாவது, உடல் பருமனைத் தூண்டும் கொழுப்புகளை உறிஞ்சுவதைத் தடுக்கும் கலவைகள் பாதாம் பருப்பில் இருக்கிறதாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் யோகர்ட்டுக்கும் இடமுண்டு. இதில் புரோபயாடிக் பாக்டீரியாக்களும் நிறைந்திருப்பதால் அவை அடிவயிற்றுப் பருமனைத் தடுக்கின்றன.
சில பெண்களுக்கு பிரசவத்தில் இரட்டைக்குழந்தைகள் பிறக்கும். அவ்வாறு பிறப்பதற்கான காரணங்கள் என்னவென்று விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
சின்ன வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அச்சு அசலாக ஒரே மாதிரி பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை ‘யூனியோவலர்ட் ட்வின்ஸ்’ என்று அழைக்கிறார்கள். பெலோப்பியன் குழாயில் இருக்கும் கரு முட்டையோடு, ஆணின் உயிரணு சேர்ந்து கருவான உடனே அந்தக் கரு எதிர்பாராத விதமாக இரண்டாக உடைந்துவிடும். உடைந்த கருவின் இரண்டு பகுதிகளும் தனித்தனி கருவாக செல் பிரிந்து வளர்ந்து கொண்டு போய், ஒவ்வொன்றும் ஒவ்வொரு குழந்தையாக உருவெடுக்கிறது.
ஒரே கரு இரண்டாக உடைந்து உருவாவதால் இரட்டைக் குழந்தைகள் என்றாலும் நிறம், உயரம், ரத்த வகை என எல்லாமே ஒரே மாதிரியாகவே இருக்கும். இந்தக் கரு சில சமயம் இரண்டாக உடையும் போது சரியாக பிரியாமல், லேசாக ஒட்டியபடியே நின்றுவிடும். இப்படியாக ஒட்டிப்பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை ‘சயாமிஸ் ட்வின்ஸ்’ என்கிறார்கள்.
இன்னொரு வகையான இரட்டைப் பிறவியும் இருக்கிறது. அதில் ஒன்று ஆணாகவும், மற்றொன்று பெண்ணாகவும் பிறக்கும். ஒன்று சிவப்பாகவும், மற்றொன்று சம்பந்தமே இல்லாத அளவுக்கு கருப்பாகவும் பிறக்கும். இப்படி ஒன்றுக்கொன்று கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை ‘பைனோவளர் ட்வின்ஸ்’ என்று அழைக்கிறார்கள். இரட்டையர்களை கணக்கெடுத்துப் பார்த்தால் ஒரே மாதிரியாக பிறக்கும் இரட்டையர்களை விட, சம்பந்தமே இல்லாமல் பிறக்கும் இரட்டையர்களே உலகில் அதிகம்.

இந்த வகை இரட்டைக் குழந்தைகள் உருவாவதற்கு காரணம், பொதுவாக பெண்ணின் சினைப் பையில் ஒரு கரு முட்டை மட்டுமே வெடித்து வெளிவரும். சில சமயங்களில் வெகு அபூர்வமாக இரண்டு கரு முட்டைகள் வெடித்து வெளியே வரும். அவைகள் ஆணின் உயிரணுவோடு தனித்தனியாக சேர்ந்து இரண்டு கருவாகி ஒரே சமயத்தில் பிறப்பதுதான் வெவ்வேறு நிறம், வெவ்வேறு சாயலில் இருக்கும். அதைவிடுத்து கர்ப்பிணிப் பெண்கள் இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டால், இரட்டைக் குழந்தை பிறக்கும் என்பதெல்லாம் கட்டுக்கதை.
இதெல்லாம் சரி, ஒரே பிரசவத்தில் நான்கு, ஐந்து குழந்தைகள் பிறக்கின்றனவே, இதற்கு என்ன காரணம் என்று கேட்டால், எல்லாமே நவீன மருந்துகள் தரும் விபரீதம் தான் என்கிறார்கள் மருத்துவர்கள். குழந்தை பிறப்புக்காக கருமுட்டையை வெடிக்கச் செய்யும் ஊசிகளை போடும்போது, ஒரு கருமுட்டைக்கு பதிலாக நான்கைந்து கருமுட்டைகளை வெடிக்கச் செய்து விடுகிறது. சில சமயங்களில் அந்த மருந்தின் வீரியம் ஒரே சமயத்தில் 7-க்கும் மேற்பட்ட முட்டைகளாகக் கூட வெடிக்கச் செய்துவிடுகிறது.
இதுவரை ஒரே பிரசவத்தில் அதிகபட்சமாக 8 குழந்தைகள் பிறந்துள்ளன. அந்த பெண்ணின் பெயர் நாடிய சுலேமன். இவர் 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகளை பெற்றெடுத்து சாதனை செய்துள்ளார்.
ஒரே கரு இரண்டாக உடைந்து உருவாவதால் இரட்டைக் குழந்தைகள் என்றாலும் நிறம், உயரம், ரத்த வகை என எல்லாமே ஒரே மாதிரியாகவே இருக்கும். இந்தக் கரு சில சமயம் இரண்டாக உடையும் போது சரியாக பிரியாமல், லேசாக ஒட்டியபடியே நின்றுவிடும். இப்படியாக ஒட்டிப்பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை ‘சயாமிஸ் ட்வின்ஸ்’ என்கிறார்கள்.
இன்னொரு வகையான இரட்டைப் பிறவியும் இருக்கிறது. அதில் ஒன்று ஆணாகவும், மற்றொன்று பெண்ணாகவும் பிறக்கும். ஒன்று சிவப்பாகவும், மற்றொன்று சம்பந்தமே இல்லாத அளவுக்கு கருப்பாகவும் பிறக்கும். இப்படி ஒன்றுக்கொன்று கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை ‘பைனோவளர் ட்வின்ஸ்’ என்று அழைக்கிறார்கள். இரட்டையர்களை கணக்கெடுத்துப் பார்த்தால் ஒரே மாதிரியாக பிறக்கும் இரட்டையர்களை விட, சம்பந்தமே இல்லாமல் பிறக்கும் இரட்டையர்களே உலகில் அதிகம்.

இந்த வகை இரட்டைக் குழந்தைகள் உருவாவதற்கு காரணம், பொதுவாக பெண்ணின் சினைப் பையில் ஒரு கரு முட்டை மட்டுமே வெடித்து வெளிவரும். சில சமயங்களில் வெகு அபூர்வமாக இரண்டு கரு முட்டைகள் வெடித்து வெளியே வரும். அவைகள் ஆணின் உயிரணுவோடு தனித்தனியாக சேர்ந்து இரண்டு கருவாகி ஒரே சமயத்தில் பிறப்பதுதான் வெவ்வேறு நிறம், வெவ்வேறு சாயலில் இருக்கும். அதைவிடுத்து கர்ப்பிணிப் பெண்கள் இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டால், இரட்டைக் குழந்தை பிறக்கும் என்பதெல்லாம் கட்டுக்கதை.
இதெல்லாம் சரி, ஒரே பிரசவத்தில் நான்கு, ஐந்து குழந்தைகள் பிறக்கின்றனவே, இதற்கு என்ன காரணம் என்று கேட்டால், எல்லாமே நவீன மருந்துகள் தரும் விபரீதம் தான் என்கிறார்கள் மருத்துவர்கள். குழந்தை பிறப்புக்காக கருமுட்டையை வெடிக்கச் செய்யும் ஊசிகளை போடும்போது, ஒரு கருமுட்டைக்கு பதிலாக நான்கைந்து கருமுட்டைகளை வெடிக்கச் செய்து விடுகிறது. சில சமயங்களில் அந்த மருந்தின் வீரியம் ஒரே சமயத்தில் 7-க்கும் மேற்பட்ட முட்டைகளாகக் கூட வெடிக்கச் செய்துவிடுகிறது.
இதுவரை ஒரே பிரசவத்தில் அதிகபட்சமாக 8 குழந்தைகள் பிறந்துள்ளன. அந்த பெண்ணின் பெயர் நாடிய சுலேமன். இவர் 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகளை பெற்றெடுத்து சாதனை செய்துள்ளார்.
30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள்.
இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம் நமக்கு தாம்பத்திய உணர்வு குறையத் தொடங்கிவிட்டதே என்பதுதான். ஆனால் அப்படி ஒரு கவலை தேவையில்லை என்று உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
35 வயதைத் தாண்டிய பல பெண்களின் மனதில் இனி நம்மால் செக்ஸில் முன்பு போல ஈடுபட முடியாதா, உச்ச நிலையை அடைய முடியாதா என்ற எண்ணம் பரவலாக தோன்றுகிறதாம். மேலும் 30 வயதைத் தாண்டி விட்டாலே செக்ஸ் உணர்வுகள் குறையத் தொடங்கிவிடும் என்ற பரவலான கருத்தும் அவர்களிடம் நிலவி வருகிறதாம். இதற்குக் காரணம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், பெண்களுக்கு ஏற்படும் மாற்றம் தான் என்கின்றனர் நிபுணர்கள்.
தாம்பத்ய உறவின்போது உச்சநிலை எனப்படும் கிளைமேக்ஸ் சரியாக இல்லையெனில் திருப்தி என்பது ஏற்படாது. கிளைமேக்ஸ் பிரச்சினை பிறப்புறுப்பின் வலியினாலும், வறட்சியினாலும் ஏற்படும். மேலும் 35 வயதிற்குமேல் பெண்களுக்கு உடல் பருமன், நீரிழிவு போன்றவை இருந்தாலும் உச்சநிலையை உணர்வரில் பிரச்சினை ஏற்படும்.

நீரிழிவினால் பெண்களுக்கு நரம்பியல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். மேலும் முதுகெலும்பில் பிரச்சினை என்றாலும் அவர்களால் இயல்பான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடமுடியாது. அதேபோல் ஹார்மோன்கள் சரிவர சுரக்கவில்லை என்றாலும் பெண்கள் தங்களின் உச்ச நிலையை உணர்வதில் சிக்கல்கள் எழுகின்றன என்கின்றனர் நிபுணர்கள்.
30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். 20 வயதுகளில் எப்படி செக்ஸை அனுபவித்தீர்களோ அதேபோல 30 வயதைத் தாண்டிய பின்னரும்கூட அனுபவிக்கலாம். அதற்கு ஒரே முக்கிய தேவை உங்களது மனதை ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்வது மட்டுமே. உண்மையில் 30வயதுக்கு மேல் தான் செக்ஸ் வாழ்க்கையில் நிம்மதியாக, பரிபூரணமாக, முழுமையான இன்பத்துடன் ஈடுபட முடியும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.
அதேசமயம், சில பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் உறவில் ஆர்வம் குறைவது இயல்பு தான். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் இது வித்தியாசப்படும். பொதுவான காரணம் என்று எதுவும் கிடையாது. உச்ச நிலையை அடைவதில் 35 வயதைத் தாண்டிய பெண்களுக்கு என்றில்லை, 20களில் இருக்கும் பெண்களுக்கும் கூட பிரச்சினை வருவதுண்டு.

எனவே ஆர்கசம் என்பது எல்லோருக்கும் உள்ள பொதுவான பிரச்சினைதான். அது, தாம்பத்ய உறவில் ஈடுபடும்போது நமது மனநிலை, உடல் நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தது. எனவே கிளைமேக்ஸ் பிரச்சனை உள்ள பெண்கள், உரிய தெரபிஸ்டுகளை அணுகி ஆலோசனை கேட்கலாம். ஆர்கசத்தை அடைவதற்கு பல மருத்துவ ரீதியான, மனோரீதியான வழிமுறைகள் உள்ளன. அதைக் கையாளலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
மேலும் 30 வயதைத் தாண்டிய, விவாகரத்து செய்த அல்லது கணவரை இழந்த பல பெண்களுக்கும் கிளைமேக்ஸ் வரும். செக்ஸ் உணர்வும் அதிகமாக இருக்கும். இதை நினைத்து பல பெண்கள் கவலைப்படுவார்கள். நாம் தவறு செய்கிறோமோ என்ற எண்ணமும் அவர்களிடம் எழலாம். ஆனால் இது நிச்சயம் தவறான ஒன்றில்லை. இது இயல்பான ஒன்றுதான். பெண்களின் உடலியல் அப்படி. எனவே நாம் செக்ஸ்குறித்து சிந்திப்பது தவறு என்று இந்தப் பெண்கள் நினைக்கத் தேவையில்லை. இதுபோன்ற பெண்கள் தங்களது மனதை ஒருமுகப்படுத்த பல வழிகள் உள்ளன. அவற்றில் ஈடுபடலாம்.
எனவே 30 வயதுக்குமேல் செக்ஸ்உணர்வும், உச்சநிலையும் அற்றுப் போய்விடும் என்ற கவலையும், கிளைமேக்ஸ் அதிகமாக இருக்கிறதே என்ற கவலையும் தேவையில்லை. இவை இயல்பானவைதான். அதற்கான செயல் முறைகளை கையாண்டு அவற்றை வெற்றிகரமாக சமாளிக்க அவர்கள் தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் மூளைக்கும், மனதிற்கும் முக்கிய பங்குண்டு. எனவே சரியான வழியில் உணர்வுகளை திசைதிருப்பினால் நம்மால் இயல்பான செக்ஸ் வாழ்க்கையை வாழ முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
35 வயதைத் தாண்டிய பல பெண்களின் மனதில் இனி நம்மால் செக்ஸில் முன்பு போல ஈடுபட முடியாதா, உச்ச நிலையை அடைய முடியாதா என்ற எண்ணம் பரவலாக தோன்றுகிறதாம். மேலும் 30 வயதைத் தாண்டி விட்டாலே செக்ஸ் உணர்வுகள் குறையத் தொடங்கிவிடும் என்ற பரவலான கருத்தும் அவர்களிடம் நிலவி வருகிறதாம். இதற்குக் காரணம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், பெண்களுக்கு ஏற்படும் மாற்றம் தான் என்கின்றனர் நிபுணர்கள்.
தாம்பத்ய உறவின்போது உச்சநிலை எனப்படும் கிளைமேக்ஸ் சரியாக இல்லையெனில் திருப்தி என்பது ஏற்படாது. கிளைமேக்ஸ் பிரச்சினை பிறப்புறுப்பின் வலியினாலும், வறட்சியினாலும் ஏற்படும். மேலும் 35 வயதிற்குமேல் பெண்களுக்கு உடல் பருமன், நீரிழிவு போன்றவை இருந்தாலும் உச்சநிலையை உணர்வரில் பிரச்சினை ஏற்படும்.

நீரிழிவினால் பெண்களுக்கு நரம்பியல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். மேலும் முதுகெலும்பில் பிரச்சினை என்றாலும் அவர்களால் இயல்பான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடமுடியாது. அதேபோல் ஹார்மோன்கள் சரிவர சுரக்கவில்லை என்றாலும் பெண்கள் தங்களின் உச்ச நிலையை உணர்வதில் சிக்கல்கள் எழுகின்றன என்கின்றனர் நிபுணர்கள்.
30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். 20 வயதுகளில் எப்படி செக்ஸை அனுபவித்தீர்களோ அதேபோல 30 வயதைத் தாண்டிய பின்னரும்கூட அனுபவிக்கலாம். அதற்கு ஒரே முக்கிய தேவை உங்களது மனதை ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்வது மட்டுமே. உண்மையில் 30வயதுக்கு மேல் தான் செக்ஸ் வாழ்க்கையில் நிம்மதியாக, பரிபூரணமாக, முழுமையான இன்பத்துடன் ஈடுபட முடியும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.
அதேசமயம், சில பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் உறவில் ஆர்வம் குறைவது இயல்பு தான். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் இது வித்தியாசப்படும். பொதுவான காரணம் என்று எதுவும் கிடையாது. உச்ச நிலையை அடைவதில் 35 வயதைத் தாண்டிய பெண்களுக்கு என்றில்லை, 20களில் இருக்கும் பெண்களுக்கும் கூட பிரச்சினை வருவதுண்டு.

எனவே ஆர்கசம் என்பது எல்லோருக்கும் உள்ள பொதுவான பிரச்சினைதான். அது, தாம்பத்ய உறவில் ஈடுபடும்போது நமது மனநிலை, உடல் நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தது. எனவே கிளைமேக்ஸ் பிரச்சனை உள்ள பெண்கள், உரிய தெரபிஸ்டுகளை அணுகி ஆலோசனை கேட்கலாம். ஆர்கசத்தை அடைவதற்கு பல மருத்துவ ரீதியான, மனோரீதியான வழிமுறைகள் உள்ளன. அதைக் கையாளலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
மேலும் 30 வயதைத் தாண்டிய, விவாகரத்து செய்த அல்லது கணவரை இழந்த பல பெண்களுக்கும் கிளைமேக்ஸ் வரும். செக்ஸ் உணர்வும் அதிகமாக இருக்கும். இதை நினைத்து பல பெண்கள் கவலைப்படுவார்கள். நாம் தவறு செய்கிறோமோ என்ற எண்ணமும் அவர்களிடம் எழலாம். ஆனால் இது நிச்சயம் தவறான ஒன்றில்லை. இது இயல்பான ஒன்றுதான். பெண்களின் உடலியல் அப்படி. எனவே நாம் செக்ஸ்குறித்து சிந்திப்பது தவறு என்று இந்தப் பெண்கள் நினைக்கத் தேவையில்லை. இதுபோன்ற பெண்கள் தங்களது மனதை ஒருமுகப்படுத்த பல வழிகள் உள்ளன. அவற்றில் ஈடுபடலாம்.
எனவே 30 வயதுக்குமேல் செக்ஸ்உணர்வும், உச்சநிலையும் அற்றுப் போய்விடும் என்ற கவலையும், கிளைமேக்ஸ் அதிகமாக இருக்கிறதே என்ற கவலையும் தேவையில்லை. இவை இயல்பானவைதான். அதற்கான செயல் முறைகளை கையாண்டு அவற்றை வெற்றிகரமாக சமாளிக்க அவர்கள் தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் மூளைக்கும், மனதிற்கும் முக்கிய பங்குண்டு. எனவே சரியான வழியில் உணர்வுகளை திசைதிருப்பினால் நம்மால் இயல்பான செக்ஸ் வாழ்க்கையை வாழ முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
பெண்கள் அனைவரும் 30 வயது அடைந்ததும் தங்களது உடலின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொண்டு சில முக்கிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
வீட்டு பிரச்சனையில் இருந்து அலுவலக பிரச்சனை வரை அனைத்தையும் தனியாகவே சமாளித்து வெற்றி காண்பவர்கள் பெண்கள். ஆனால், அவர்கள் தங்களது உடலின் மீது மட்டும் அக்கரை எடுத்துக்கொள்வதே இல்லை. ஒவ்வொரு பெண்ணும் பூப்பெய்திய காலம் முதல் நிறைய ஹார்மோன் மாற்றங்களை சந்தித்து வருகின்றனர்.
அதுவும் குறிப்பாக கர்ப்பக் காலத்தில் அவர்கள் நிறைய வலியைப் பொறுத்துக் கொண்டாலும் அதில் சந்தோஷம் தான் அடைகின்றனர். பின்னர், மாதவிலக்கு நின்ற பிறகும் பல பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர்.
பெண்கள் அனைவரும் 30 வயது அடைந்ததும் தங்களது உடலின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். அப்படி எடுத்துக் கொண்டால் நிறைய நோய்களை சுலபமாக தடுத்துவிடலாம்.
இதனால் எதிர் காலத்தில் எந்த கடுமையான நோயும் ஏற்படாமல் நலமுடன் வாழலாம். அப்படி பெண்கள் நிச்சயம் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய மருத்துவ பரிசோதனைகளைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.
பெண்கள் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளில் ஒன்று தான் இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பது. அப்படி உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் நீங்கள் கண்டிப்பாக மின் ஒலி இதய வரைவு எனும் யகோகார்டியோகிராம் செய்து உங்களது இருதய ஆரோக்கியத்தைப் பரிசோதித்துப் பார்ப்பது அவசியம். ஏனெனில், உயர் இரத்த அழுத்தம் இருந்தால் இருதய பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
பரிசோதனை போன் டென்ஸிட்டி எனும் எலும்பு அடர்த்திக்கு வைட்டமின் டீ மிக அவசியம். வைட்டமின் டீ சத்து குறைவாக இருந்தால் அவர்களின் எலும்பு பலவீனமாக இருக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்பட வாய்ப்புகள் அவர்களுக்கு அதிகம் இருக்கும். எனவே, எலும்பு அடர்த்தி பரிசோதனை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

இன்றைய காலக்கட்டத்தில் பெண்களில் பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த தைராய்டு. இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஹைபர் தைராய்டு, மற்றொன்று ஹைபோ தைராய்டு. கை கால்களில் வலி, மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் போன்றவை ஹைபோ மற்றும் ஹைபர் தைராய்டின் அறிகுறிகளாகும். எனவே, 30 வயதை கடந்த பெண்கள் அனைவரும் தைராய்டு பரிசோதனை செய்தே ஆக வேண்டும்.
இன்றைய காலக்கட்டத்தில் நீரிழிவு நோய் பொதுவான நோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பாக குண்டாக இருக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 30 வயதை அடைந்த பெண்கள் நிச்சயம் இந்த பரிசோதனையை மேற்கோள்வது அவசியம். இல்லையென்றால், இது கர்ப்பக் காலத்தில் ஏதாவது பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்.
பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயைத் தடுக்க மேமொகிராம் பரிசோதனை தான் உதவுகிறது.
சாதாரணமாக இதனை 40 வயதிற்கு மேல் தான் பரிசோதிக்கக் கூறுவார்கள். ஆனால், அதற்கு முன்பே ஏதேனும் அறிகுறி தோன்றினால் 30 வயதிலேயே செய்துக் கொள்வதன் மூலம் ஆபத்து ஏற்படாமல் தடுக்கலாம் அல்லவா…
எல்லாப் பெண்களும் 30 வயதிற்கு மேல் நிச்சயம் இந்த பேப் ஸ்மியர் சோதனை செய்தே ஆக வேண்டும். இந்த பரிசோதனை செய்துக் கொள்வதால் கர்ப்பப்பை வாய் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.
பெண்களுக்கு பொதுவாக ஏற்படக்கூடிய புற்றுநோய்களில் ஒன்று தான் இந்த கர்ப்பப்பை வாய் புற்று நோய். எனவே, இதனை மறக்காமல் பரிசோதித்துப் பாருங்கள்
பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான நோய்களில் ஒன்று தான் இந்த இரத்த சோகை. குறிப்பாக கர்ப்பக் காலத்தில் இந்த பிரச்சனை ஏற்படக்கூடும். எனவே, 30 வயதை அடைந்ததும் இரத்த சோகை உள்ளதா என்று ஒரு இரத்த பரிசோதனை செய்துப் பார்த்துவிடுங்கள்.
அதுவும் குறிப்பாக கர்ப்பக் காலத்தில் அவர்கள் நிறைய வலியைப் பொறுத்துக் கொண்டாலும் அதில் சந்தோஷம் தான் அடைகின்றனர். பின்னர், மாதவிலக்கு நின்ற பிறகும் பல பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர்.
பெண்கள் அனைவரும் 30 வயது அடைந்ததும் தங்களது உடலின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். அப்படி எடுத்துக் கொண்டால் நிறைய நோய்களை சுலபமாக தடுத்துவிடலாம்.
இதனால் எதிர் காலத்தில் எந்த கடுமையான நோயும் ஏற்படாமல் நலமுடன் வாழலாம். அப்படி பெண்கள் நிச்சயம் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய மருத்துவ பரிசோதனைகளைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.
பெண்கள் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளில் ஒன்று தான் இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பது. அப்படி உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் நீங்கள் கண்டிப்பாக மின் ஒலி இதய வரைவு எனும் யகோகார்டியோகிராம் செய்து உங்களது இருதய ஆரோக்கியத்தைப் பரிசோதித்துப் பார்ப்பது அவசியம். ஏனெனில், உயர் இரத்த அழுத்தம் இருந்தால் இருதய பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
பரிசோதனை போன் டென்ஸிட்டி எனும் எலும்பு அடர்த்திக்கு வைட்டமின் டீ மிக அவசியம். வைட்டமின் டீ சத்து குறைவாக இருந்தால் அவர்களின் எலும்பு பலவீனமாக இருக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்பட வாய்ப்புகள் அவர்களுக்கு அதிகம் இருக்கும். எனவே, எலும்பு அடர்த்தி பரிசோதனை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

இன்றைய காலக்கட்டத்தில் பெண்களில் பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த தைராய்டு. இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஹைபர் தைராய்டு, மற்றொன்று ஹைபோ தைராய்டு. கை கால்களில் வலி, மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் போன்றவை ஹைபோ மற்றும் ஹைபர் தைராய்டின் அறிகுறிகளாகும். எனவே, 30 வயதை கடந்த பெண்கள் அனைவரும் தைராய்டு பரிசோதனை செய்தே ஆக வேண்டும்.
இன்றைய காலக்கட்டத்தில் நீரிழிவு நோய் பொதுவான நோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பாக குண்டாக இருக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 30 வயதை அடைந்த பெண்கள் நிச்சயம் இந்த பரிசோதனையை மேற்கோள்வது அவசியம். இல்லையென்றால், இது கர்ப்பக் காலத்தில் ஏதாவது பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்.
பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயைத் தடுக்க மேமொகிராம் பரிசோதனை தான் உதவுகிறது.
சாதாரணமாக இதனை 40 வயதிற்கு மேல் தான் பரிசோதிக்கக் கூறுவார்கள். ஆனால், அதற்கு முன்பே ஏதேனும் அறிகுறி தோன்றினால் 30 வயதிலேயே செய்துக் கொள்வதன் மூலம் ஆபத்து ஏற்படாமல் தடுக்கலாம் அல்லவா…
எல்லாப் பெண்களும் 30 வயதிற்கு மேல் நிச்சயம் இந்த பேப் ஸ்மியர் சோதனை செய்தே ஆக வேண்டும். இந்த பரிசோதனை செய்துக் கொள்வதால் கர்ப்பப்பை வாய் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.
பெண்களுக்கு பொதுவாக ஏற்படக்கூடிய புற்றுநோய்களில் ஒன்று தான் இந்த கர்ப்பப்பை வாய் புற்று நோய். எனவே, இதனை மறக்காமல் பரிசோதித்துப் பாருங்கள்
பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான நோய்களில் ஒன்று தான் இந்த இரத்த சோகை. குறிப்பாக கர்ப்பக் காலத்தில் இந்த பிரச்சனை ஏற்படக்கூடும். எனவே, 30 வயதை அடைந்ததும் இரத்த சோகை உள்ளதா என்று ஒரு இரத்த பரிசோதனை செய்துப் பார்த்துவிடுங்கள்.
பெண்களே கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அறிகுறிகள் தென்பட்டால் அது நுரையீரல் புற்றுநோயாக இருக்க அதிக வாய்ப்புள்ளது என்பதை உறுதிபடுத்தும் அறிகுறிகளாகும்.
பெண்களுக்கு வரும் நுரையீரல் புற்றுநோய் ஆண்களுக்கு வருவதை விட சற்று மாறுபட்டது. பெண்களுக்கு வரும் புற்றுநோயானது நுரையீரலுக்கு வெளிபுறத்தில் ஏற்படும். எனவே இதை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகக் கடினம். மேலும் இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், நுரையீரலின் வெளிபுறத்தில் இது உருவாவதால் மற்ற பாகங்களான எலும்பு, கல்லீரல் போன்றவற்றிற்கு எளிதில் பரவக்கூடும்.
எனவே, பெண்கள் அவர்களது உடலில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களையும் அலட்சியப்படுத்தாமல் கவனிக்க வேண்டும். இங்கு பெண்களுக்கான நுரையீரல் புற்றுநோயின் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை படித்து தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
நுரையீரல் புற்றுநோயின் பொதுவான அறிகுறி என்றால் அது உடல் சோர்வு. பொதுவாக உடல் சோர்வு என்பது அதிகப்படியான வேலை பளு மற்றும் அதிக அலைச்சலால் ஏற்படக்கூடும். ஆனால், காரணமே இல்லாமல் சோர்வு ஏற்படுகிறது என்றால் அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அப்படி ஏற்பட்டால் அதனை உடனே கவனியுங்கள்.
நுரையீரலின் மேல் பகுதியில் புற்றுநோய் கட்டி இருந்தால் அது கண்டிப்பாக நரம்புகளை பாதிக்கும். அதனால் தான் முதுகு மற்றும் தோள்பட்டையில் பகுதிகளில் வலி ஏற்படுகின்றது.

நுரையீரலின் மேல் பகுதியில் கட்டி வளர்ந்தால் நம் சுவாச சுழற்சியில் தடை ஏற்படும். இதனால் கூடத் தொடர்ச்சியான இருமல் ஏற்படும், கவனித்துக் கொள்ளுங்கள்.
நுரையீரல் புற்றுநோய் பொதுவாக நெஞ்சு வலியில் இருந்து தான் ஆரம்பிக்கும். ஏனெனில், இந்த புற்றுநோய் கட்டிகள் மார்புப் பகுதியிலுள்ள இரத்தக் குழாய்கள் மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் நெஞ்சு வலி ஏற்படக்கூடும்.
நுரையீரல் புற்றுநோயின் மற்றொரு அறிகுறி தான் இந்த கரகரப்பான குரல். எப்பொழுது நுரையீரலின் மேல் பகுதியில் கட்டி உருவாகிறதோ அது குரலில் ஒரு கரகரப்பு தன்மையை ஏற்படுத்தும். மேலும் இது மூச்சு விடும் போது கூட கடுமையான சத்தத்தை ஏற்படுத்தும்.
நுரையீரலின் மேல் பகுதியில் கட்டி ஏற்படுவதால் அது நுரையீரலில் அடைப்பை ஏற்படுத்தும். அதனால் நுரையீரலில் சளி அதிக அளவில் தேங்கும். மேலும், இது புற்றுநோய் கட்டியில் இருந்து இரத்தக் கசிவை ஏற்படுத்தும். அந்த இரத்தம் எச்சில் வழியாக வெளியேறக்கூடும்.
இவையெல்லாம் தான் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாகும். எனவே, இப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்தால் இதனை அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவ பரிசோதனை செய்துப் பார்த்துவிடுங்கள். நம் உடல் ஆரோக்கியத்தை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.
எனவே, பெண்கள் அவர்களது உடலில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களையும் அலட்சியப்படுத்தாமல் கவனிக்க வேண்டும். இங்கு பெண்களுக்கான நுரையீரல் புற்றுநோயின் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை படித்து தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
நுரையீரல் புற்றுநோயின் பொதுவான அறிகுறி என்றால் அது உடல் சோர்வு. பொதுவாக உடல் சோர்வு என்பது அதிகப்படியான வேலை பளு மற்றும் அதிக அலைச்சலால் ஏற்படக்கூடும். ஆனால், காரணமே இல்லாமல் சோர்வு ஏற்படுகிறது என்றால் அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அப்படி ஏற்பட்டால் அதனை உடனே கவனியுங்கள்.
நுரையீரலின் மேல் பகுதியில் புற்றுநோய் கட்டி இருந்தால் அது கண்டிப்பாக நரம்புகளை பாதிக்கும். அதனால் தான் முதுகு மற்றும் தோள்பட்டையில் பகுதிகளில் வலி ஏற்படுகின்றது.

நுரையீரலின் மேல் பகுதியில் கட்டி வளர்ந்தால் நம் சுவாச சுழற்சியில் தடை ஏற்படும். இதனால் கூடத் தொடர்ச்சியான இருமல் ஏற்படும், கவனித்துக் கொள்ளுங்கள்.
நுரையீரல் புற்றுநோய் பொதுவாக நெஞ்சு வலியில் இருந்து தான் ஆரம்பிக்கும். ஏனெனில், இந்த புற்றுநோய் கட்டிகள் மார்புப் பகுதியிலுள்ள இரத்தக் குழாய்கள் மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் நெஞ்சு வலி ஏற்படக்கூடும்.
நுரையீரல் புற்றுநோயின் மற்றொரு அறிகுறி தான் இந்த கரகரப்பான குரல். எப்பொழுது நுரையீரலின் மேல் பகுதியில் கட்டி உருவாகிறதோ அது குரலில் ஒரு கரகரப்பு தன்மையை ஏற்படுத்தும். மேலும் இது மூச்சு விடும் போது கூட கடுமையான சத்தத்தை ஏற்படுத்தும்.
நுரையீரலின் மேல் பகுதியில் கட்டி ஏற்படுவதால் அது நுரையீரலில் அடைப்பை ஏற்படுத்தும். அதனால் நுரையீரலில் சளி அதிக அளவில் தேங்கும். மேலும், இது புற்றுநோய் கட்டியில் இருந்து இரத்தக் கசிவை ஏற்படுத்தும். அந்த இரத்தம் எச்சில் வழியாக வெளியேறக்கூடும்.
இவையெல்லாம் தான் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாகும். எனவே, இப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்தால் இதனை அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவ பரிசோதனை செய்துப் பார்த்துவிடுங்கள். நம் உடல் ஆரோக்கியத்தை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது, அதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் தெரிய வருவதில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெண்களுக்கு மாரடைப்பு வராது என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கும் மாரடைப்பு வரும். ஆனால் அறிகுறி எளிதில் தெரிவதில்லை. பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது, அதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் தெரிய வருவதில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது பெரும்பாலான நேரங்களில் தெரிவதில்லை என்றும் வாஷிங்டனில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வு கூறுகிறது. மிகத் தீவிரமாக மாரடைப்பு ஏற்படும்பட்சத்தில், அது மாரடைப்புதான் என்று தெரிந்தால் மட்டுமே அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ள முடியும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
நோயாளிகளின் அறிகுறிகளை வைத்தே டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள் என்பதால், பெண்களுக்கு மாரடைப்புக்கான சிகிச்சை தெரிய வராமல் போய் விடுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. முதுகின் மேல்புறம் வலி, வாந்தி, சுவாசிப்பதில் ஏற்படும் சிரமம், மூக்கடைப்பு, அஜீரணம் போன்றவை பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதன் அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக மாரடப்பு விகிதம் பெண்களுக்கு குறைவு என்ற போதிலும், அவை ஏற்படும் அறிகுறிகள் தெரியாத போது, சிகிச்சை எடுத்துக் கொள்ள இயலாமல் போவதால், திடீர் மரணம் ஏற்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது. மாரடைப்பு ஏற்படும் பெண்களுக்கு, அதற்கான அறிகுறிகள் வெகுநேரம் முன்பாகவே வந்திருக்கக்கூடும்.
எனவே மாரடைப்பு என்று தெரிய வந்தவுடன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் தீவிர சிகிச்சை அளிக்கக்கூடிய ஆம்புலன்ஸில் செல்வதே சிறந்தது என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. அப்போது தான் உயிரைக் காப்பாற்ற முடியும்.
பெண்களைப் பொருத்தவரை அவர்களுக்கும், சிகிச்சை அளிப்பவர்களுக்கும் மாரடைப்பு என்று அறிந்து கொள்வதற்கே தாமதம் ஆவதாலேயே சில நேரங்களில் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது பெரும்பாலான நேரங்களில் தெரிவதில்லை என்றும் வாஷிங்டனில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வு கூறுகிறது. மிகத் தீவிரமாக மாரடைப்பு ஏற்படும்பட்சத்தில், அது மாரடைப்புதான் என்று தெரிந்தால் மட்டுமே அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ள முடியும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
நோயாளிகளின் அறிகுறிகளை வைத்தே டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள் என்பதால், பெண்களுக்கு மாரடைப்புக்கான சிகிச்சை தெரிய வராமல் போய் விடுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. முதுகின் மேல்புறம் வலி, வாந்தி, சுவாசிப்பதில் ஏற்படும் சிரமம், மூக்கடைப்பு, அஜீரணம் போன்றவை பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதன் அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக மாரடப்பு விகிதம் பெண்களுக்கு குறைவு என்ற போதிலும், அவை ஏற்படும் அறிகுறிகள் தெரியாத போது, சிகிச்சை எடுத்துக் கொள்ள இயலாமல் போவதால், திடீர் மரணம் ஏற்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது. மாரடைப்பு ஏற்படும் பெண்களுக்கு, அதற்கான அறிகுறிகள் வெகுநேரம் முன்பாகவே வந்திருக்கக்கூடும்.
எனவே மாரடைப்பு என்று தெரிய வந்தவுடன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் தீவிர சிகிச்சை அளிக்கக்கூடிய ஆம்புலன்ஸில் செல்வதே சிறந்தது என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. அப்போது தான் உயிரைக் காப்பாற்ற முடியும்.
பெண்களைப் பொருத்தவரை அவர்களுக்கும், சிகிச்சை அளிப்பவர்களுக்கும் மாரடைப்பு என்று அறிந்து கொள்வதற்கே தாமதம் ஆவதாலேயே சில நேரங்களில் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலியில்லாமல், காத்திருக்கத் தயாரில்லாமல் மருத்துவமனைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பதால் சிசேரியன் செய்ய அவர்களே முன் வருகிறார்கள்.
இந்த நல் உலகுக்கு ஒரு புது உயிரைக் கூட்டி வருகிற தலைமுறை உருவாக்கத்தின் ஆதாரமே பிரசவம்தான். தனக்கென ஓர் உயிரை ஈன்றெடுக்கையில் ஏற்படும் வலி கூட சுகமான வலிதான். இரு தலைமுறைகளுக்கு முன் பெரும்பாலும் வீட்டிலேயேதான் குழந்தை பெற்றுக் கொண்டனர்.
குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கை மற்றும் கருத்தடைச்சாதனங்கள் இல்லாத அக்காலத்தில், 10 குழந்தைகளுக்கும் மேல் பெற்ற போதிலும், 80 வயது தாண்டி ஆரோக்கியமாக வாழும் பலர் இன்னமும் இருக்கிறார்கள். இதற்கு அடுத்த தலைமுறையினர்தான் பிரசவத்துக்கு மருத்துவமனைகளை நாடிச் சென்றனர். அவற்றில் பெரும்பான்மை சுகப்பிரசவம்தான். இந்தத் தலைமுறையில்தான் சுகப்பிரசவம் என்பதே அரிதாகி, சிசேரியன் நம் வாழ்வோடு இரண்டறக் கலந்து விட்டது.
‘வலியின்றி குழந்தை பெற உகந்த வழி சிசேரியன்தான்’ எனும் கருத்து பல கர்ப்பிணிகள் மனதில் பரப்பப்படுகிறது. ‘இயற்கைக்கு மாறான எதுவுமே நல்லதல்ல’ என்கிற விதியின் அடிப்படையில் பார்க்கும்போது சிசேரியன் என்பது தேவையைப் பொறுத்து மட்டுமே அமைய வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் பெரும்பாலும் சிசேரியனே என்றும், இதற்குப் பின் காசு பிடுங்கும் நோக்கம் இருப்பதாகவும் காலம் காலமாக குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.
சிசேரியனுக்கு மருத்துவர்கள் மட்டும் காரணமல்ல... பல கர்ப்பிணிகளின் விருப்பத்தின் அடிப்படையிலேயேதான் சிசேரியன் மேற்கொள்ளப்படுகிறது. மற்றபடி சிக்கலான சூழ்நிலையின் போது மட்டுமே சிசேரியன் செய்யப்படுகிறது என்பது மருத்துவத் தரப்பு வாதம். பிரசவத்தின் போது நிகழும் மரணத்தைத் தவிர்ப்பதற்காகவே சிசேரியன் எனும் மருத்துவ முறை கண்டறியப்பட்டது. இன்றோ ‘பிரசவமே சிசேரியன்தான்’ என்கிற நிலை இருப்பது ஏன்?
“சிசேரியனை இங்கு எந்த மருத்துவரும் திணிப்பதில்லை. 35 வயது கடந்தவர்கள், சோதனைக்குழாய் மூலம் கர்ப்பம் தரித்தவர்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளவர்கள் போன்ற ‘ஹை ரிஸ்க்’ கர்ப்பிணிகளுக்கு குழந்தை பெறுவதில் சிக்கல் நேரும்போது சிசேரியன் அவசியம். குறைந்த வயதுடைய, எவ்வித உடல் நலக்கோளாறுகளும் அற்ற ‘லோ ரிஸ்க்’ கர்ப்பிணிகளுக்கு தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே சிசேரியன் செய்யப்படுகிறது. மகப்பேறு மருத்துவர் குறித்துக் கொடுத்த தேதியில் 4 சதவிகித குழந்தைகள்தான் பிறக்கின்றன. அந்தக் கணக்கு முன்னரோ, பின்னரோ மாறுபட வாய்ப்பிருப்பதால், குழந்தை பிறக்கும் வரையிலும் காத்திருக்க வேண்டும்.

நமது முந்தைய தலைமுறைகளைப் போல இந்தத் தலைமுறைப் பெண்கள் இருக்கின்றனரா? வலியில்லாமல், காத்திருக்கத் தயாரில்லாமல் மருத்துவமனைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பதால் சிசேரியன் செய்ய அவர்களே முன் வருகிறார்கள். விஞ்ஞான யுகம் என்று நாம் சொல்லிக் கொண்டாலும், இன்னமும் ஜோதிட நம்பிக்கையில் தேதி, நேரம் குறித்து கொண்டு அந்நேரத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர்.
சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப இரண்டு மாதங்கள் ஆகும். சுகப்பிரசவத்தின் போது பிரசவ அறைக்குள் கணவரும் அனுமதிக்கப்படுகிறார். சிசேரியன் செய்கையில் கணவருக்கு அனுமதி இல்லை. சுகப்பிரசவம் அடைய கர்ப்பிணிகளும் பல வழிகளைப் பின்பற்ற வேண்டும். ‘சுகப்பிரசவம் ஆக வேண்டும்’ என்பதற்கு மனதளவிலும் தயாராக வேண்டும். உடல் இயக்கம் தேவை என்பதால் கர்ப்பம் தரித்த நாளிலிருந்தே வீட்டு வேலை செய்தல் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கர்ப்ப காலம் தொட்டு பிரசவம் வரையிலும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கர்ப்பிணிகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதில் பயிற்சி பெறுவது கூட நல்லது.
வலிக்கு பயந்தும் நல்ல நேரத்துக்காகவும் பல சிசேரியன்கள் நடைபெறுகின்றன. தனியார் மருத்துவமனைகள், சுகப்பிரசவத்தைக் காட்டிலும் சிசேரியனில்தான் அதிக வருவாய் கிடைக்கிறது என்கிற நோக்கோடு செய்வதும் உண்டு. நோய்த்தொற்று ஏற்பட்டிருத்தல், அதீத ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளவர்கள், குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னரே பனிக்குடம் உடைந்து போதல், குழந்தையின் தலை திரும்பாதிருத்தல், கொடி சுற்றிக்கொள்ளுதல் போன்ற சூழ்நிலைகளில்தான் சிசேரியன் செய்யப்பட வேண்டும். இந்த அடிப்படையில் அணுகும்போது 90 சதவிகிதம் பேருக்கு சுகப்பிரசவத்துக்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. தேவையற்ற சிசேரியன் மூலம் பெண்ணின் உடல், மனம் இரண்டுமே பாதிப்புக்குள்ளாகின்றன. பருமன், இடுப்புவலி, மாதவிடாய் கோளாறுகள் வருவதோடு அறுவை சிகிச்சையில் பக்கவிளைவுகளும் ஏற்படும்.
‘‘35 வயது கடந்தவர்கள், சோதனைக்குழாய் மூலம் கர்ப்பம் தரித்தவர்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளவர்கள் போன்ற ‘ஹை ரிஸ்க்’ கர்ப்பிணிகளுக்கு குழந்தை பெறுவதில் சிக்கல் நேரும்போது சிசேரியன் அவசியம்...’’
‘‘90 சதவிகிதம் பேருக்கு சுகப்பிரசவத்துக்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன!’’
குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கை மற்றும் கருத்தடைச்சாதனங்கள் இல்லாத அக்காலத்தில், 10 குழந்தைகளுக்கும் மேல் பெற்ற போதிலும், 80 வயது தாண்டி ஆரோக்கியமாக வாழும் பலர் இன்னமும் இருக்கிறார்கள். இதற்கு அடுத்த தலைமுறையினர்தான் பிரசவத்துக்கு மருத்துவமனைகளை நாடிச் சென்றனர். அவற்றில் பெரும்பான்மை சுகப்பிரசவம்தான். இந்தத் தலைமுறையில்தான் சுகப்பிரசவம் என்பதே அரிதாகி, சிசேரியன் நம் வாழ்வோடு இரண்டறக் கலந்து விட்டது.
‘வலியின்றி குழந்தை பெற உகந்த வழி சிசேரியன்தான்’ எனும் கருத்து பல கர்ப்பிணிகள் மனதில் பரப்பப்படுகிறது. ‘இயற்கைக்கு மாறான எதுவுமே நல்லதல்ல’ என்கிற விதியின் அடிப்படையில் பார்க்கும்போது சிசேரியன் என்பது தேவையைப் பொறுத்து மட்டுமே அமைய வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் பெரும்பாலும் சிசேரியனே என்றும், இதற்குப் பின் காசு பிடுங்கும் நோக்கம் இருப்பதாகவும் காலம் காலமாக குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.
சிசேரியனுக்கு மருத்துவர்கள் மட்டும் காரணமல்ல... பல கர்ப்பிணிகளின் விருப்பத்தின் அடிப்படையிலேயேதான் சிசேரியன் மேற்கொள்ளப்படுகிறது. மற்றபடி சிக்கலான சூழ்நிலையின் போது மட்டுமே சிசேரியன் செய்யப்படுகிறது என்பது மருத்துவத் தரப்பு வாதம். பிரசவத்தின் போது நிகழும் மரணத்தைத் தவிர்ப்பதற்காகவே சிசேரியன் எனும் மருத்துவ முறை கண்டறியப்பட்டது. இன்றோ ‘பிரசவமே சிசேரியன்தான்’ என்கிற நிலை இருப்பது ஏன்?
“சிசேரியனை இங்கு எந்த மருத்துவரும் திணிப்பதில்லை. 35 வயது கடந்தவர்கள், சோதனைக்குழாய் மூலம் கர்ப்பம் தரித்தவர்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளவர்கள் போன்ற ‘ஹை ரிஸ்க்’ கர்ப்பிணிகளுக்கு குழந்தை பெறுவதில் சிக்கல் நேரும்போது சிசேரியன் அவசியம். குறைந்த வயதுடைய, எவ்வித உடல் நலக்கோளாறுகளும் அற்ற ‘லோ ரிஸ்க்’ கர்ப்பிணிகளுக்கு தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே சிசேரியன் செய்யப்படுகிறது. மகப்பேறு மருத்துவர் குறித்துக் கொடுத்த தேதியில் 4 சதவிகித குழந்தைகள்தான் பிறக்கின்றன. அந்தக் கணக்கு முன்னரோ, பின்னரோ மாறுபட வாய்ப்பிருப்பதால், குழந்தை பிறக்கும் வரையிலும் காத்திருக்க வேண்டும்.

நமது முந்தைய தலைமுறைகளைப் போல இந்தத் தலைமுறைப் பெண்கள் இருக்கின்றனரா? வலியில்லாமல், காத்திருக்கத் தயாரில்லாமல் மருத்துவமனைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பதால் சிசேரியன் செய்ய அவர்களே முன் வருகிறார்கள். விஞ்ஞான யுகம் என்று நாம் சொல்லிக் கொண்டாலும், இன்னமும் ஜோதிட நம்பிக்கையில் தேதி, நேரம் குறித்து கொண்டு அந்நேரத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர்.
சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப இரண்டு மாதங்கள் ஆகும். சுகப்பிரசவத்தின் போது பிரசவ அறைக்குள் கணவரும் அனுமதிக்கப்படுகிறார். சிசேரியன் செய்கையில் கணவருக்கு அனுமதி இல்லை. சுகப்பிரசவம் அடைய கர்ப்பிணிகளும் பல வழிகளைப் பின்பற்ற வேண்டும். ‘சுகப்பிரசவம் ஆக வேண்டும்’ என்பதற்கு மனதளவிலும் தயாராக வேண்டும். உடல் இயக்கம் தேவை என்பதால் கர்ப்பம் தரித்த நாளிலிருந்தே வீட்டு வேலை செய்தல் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கர்ப்ப காலம் தொட்டு பிரசவம் வரையிலும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கர்ப்பிணிகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதில் பயிற்சி பெறுவது கூட நல்லது.
வலிக்கு பயந்தும் நல்ல நேரத்துக்காகவும் பல சிசேரியன்கள் நடைபெறுகின்றன. தனியார் மருத்துவமனைகள், சுகப்பிரசவத்தைக் காட்டிலும் சிசேரியனில்தான் அதிக வருவாய் கிடைக்கிறது என்கிற நோக்கோடு செய்வதும் உண்டு. நோய்த்தொற்று ஏற்பட்டிருத்தல், அதீத ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளவர்கள், குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னரே பனிக்குடம் உடைந்து போதல், குழந்தையின் தலை திரும்பாதிருத்தல், கொடி சுற்றிக்கொள்ளுதல் போன்ற சூழ்நிலைகளில்தான் சிசேரியன் செய்யப்பட வேண்டும். இந்த அடிப்படையில் அணுகும்போது 90 சதவிகிதம் பேருக்கு சுகப்பிரசவத்துக்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. தேவையற்ற சிசேரியன் மூலம் பெண்ணின் உடல், மனம் இரண்டுமே பாதிப்புக்குள்ளாகின்றன. பருமன், இடுப்புவலி, மாதவிடாய் கோளாறுகள் வருவதோடு அறுவை சிகிச்சையில் பக்கவிளைவுகளும் ஏற்படும்.
‘‘35 வயது கடந்தவர்கள், சோதனைக்குழாய் மூலம் கர்ப்பம் தரித்தவர்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளவர்கள் போன்ற ‘ஹை ரிஸ்க்’ கர்ப்பிணிகளுக்கு குழந்தை பெறுவதில் சிக்கல் நேரும்போது சிசேரியன் அவசியம்...’’
‘‘90 சதவிகிதம் பேருக்கு சுகப்பிரசவத்துக்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன!’’






