என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
அழகுக் குறிப்புகள்
![மணமக்கள் உருவம் பொறித்த சிறுமுகை பட்டு புடவைகள் மணமக்கள் உருவம் பொறித்த சிறுமுகை பட்டு புடவைகள்](https://img.maalaimalar.com/Articles/2022/May/202205231302473661_Tamil_News_sirumugai-silk-sarees-for-Wedding-silk-sarees_SECVPF.gif)
X
மணமக்கள் உருவம் பொறித்த சிறுமுகை பட்டு புடவைகள்
கவர்ந்திழுக்கும் மணமக்கள் உருவம் பொறித்த சிறுமுகை பட்டு புடவைகள்
By
மாலை மலர்23 May 2022 1:02 PM IST (Updated: 23 May 2022 1:02 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
சிறப்பு வாய்ந்த சிறுமுகை பட்டில் புதிதாக திருமணம் ஆகும் மணமக்களை கவரும் வகையில், மணமக்களின் புகைப்படங்கள் பொறித்த சேலைகளை நெசவு செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
பெண்களுக்கு மிகவும் பிடித்தமானது என்றால் அது புடவை தான். அப்படிப்பட்ட புடவைக்கு பெயர் போன ஊர் தான் கோவை மாவட்டம் அருகே உள்ள சிறுமுகை. இந்த சிறுமுகை நகரத்தில் நெசவு செய்யும் புடவைகளான காட்டன் பட்டு, மென்பட்டு, பட்டு உள்ளிட்டவை தமிழகத்தின் பிற பகுதிகள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. உலக மக்களையும் சிறுமுகை பட்டானது கவர்ந்திழுத்து வருகிறது.
அப்படிப்பட்ட இந்த சிறப்பு வாய்ந்த சிறுமுகை பட்டில் புதிதாக திருமணம் ஆகும் மணமக்களை கவரும் வகையில், சிறுமுகையை சேர்ந்த டிசைனர் தர்மராஜ், நெசவு தொழிலாளி ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து மணமக்களின் புகைப்படங்கள் பொறித்த சேலைகளை நெசவு செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த புடவைகள் மக்கள் மத்தியில் மிகவும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் ஆர்டர் கொடுத்து இந்த புடவைகளை வாங்கி செல்கிறார்கள்.
இதுகுறித்து தர்மராஜ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:-
எல்லோரும் திருமண புடவைகள் வாங்கும் போது அதனை பார்த்து பார்த்து வாங்குவார்கள். அதனை தங்கள் நினைவாக வைத்து கொள்வார்கள். எல்லோரும் புடவைகள் நெசவு செய்தாலும், நாங்கள் செய்வதில் சற்று வித்தியாசம் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.
அதற்காக புதிதாக திருமணம் செய்யும் தம்பதிகளின் புகைப்படங்கள் பொறித்த புடவைகளை நெசவு செய்ய ஆரம்பித்தோம். இது தற்போது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஆர்டர்களும் கணிசமாக வருகிறது. புடவையின் முந்தானை பகுதியில் தான் மணமக்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். ஒரு புடவையை நெசவு செய்வதற்கு 30 நாட்கள் ஆகும். ஒரு புடவை ரூ.45 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகிறோம்.
நாங்கள் இதுதவிர அனைத்து திருக்குறள்கள் பொறித்த புடவைகள், காந்தியடிகளின் தண்டி யாத்திரை சென்ற படங்கள் பொறித்த புடவைகள் என மக்கள் எந்த மாதிரி கேட்கிறார்களோ அந்த வகையில் வடிவமைத்து கொடுத்து வருகிறோம். இதுதவிர சீன அதிபர் ஜின்பிங் இந்தியா வந்த போது அவரது உருவம் பொறித்த சால்வையும் நெசவு செய்து வழங்கியுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அப்படிப்பட்ட இந்த சிறப்பு வாய்ந்த சிறுமுகை பட்டில் புதிதாக திருமணம் ஆகும் மணமக்களை கவரும் வகையில், சிறுமுகையை சேர்ந்த டிசைனர் தர்மராஜ், நெசவு தொழிலாளி ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து மணமக்களின் புகைப்படங்கள் பொறித்த சேலைகளை நெசவு செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த புடவைகள் மக்கள் மத்தியில் மிகவும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் ஆர்டர் கொடுத்து இந்த புடவைகளை வாங்கி செல்கிறார்கள்.
இதுகுறித்து தர்மராஜ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:-
எல்லோரும் திருமண புடவைகள் வாங்கும் போது அதனை பார்த்து பார்த்து வாங்குவார்கள். அதனை தங்கள் நினைவாக வைத்து கொள்வார்கள். எல்லோரும் புடவைகள் நெசவு செய்தாலும், நாங்கள் செய்வதில் சற்று வித்தியாசம் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.
அதற்காக புதிதாக திருமணம் செய்யும் தம்பதிகளின் புகைப்படங்கள் பொறித்த புடவைகளை நெசவு செய்ய ஆரம்பித்தோம். இது தற்போது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஆர்டர்களும் கணிசமாக வருகிறது. புடவையின் முந்தானை பகுதியில் தான் மணமக்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். ஒரு புடவையை நெசவு செய்வதற்கு 30 நாட்கள் ஆகும். ஒரு புடவை ரூ.45 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகிறோம்.
நாங்கள் இதுதவிர அனைத்து திருக்குறள்கள் பொறித்த புடவைகள், காந்தியடிகளின் தண்டி யாத்திரை சென்ற படங்கள் பொறித்த புடவைகள் என மக்கள் எந்த மாதிரி கேட்கிறார்களோ அந்த வகையில் வடிவமைத்து கொடுத்து வருகிறோம். இதுதவிர சீன அதிபர் ஜின்பிங் இந்தியா வந்த போது அவரது உருவம் பொறித்த சால்வையும் நெசவு செய்து வழங்கியுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story
×
X