search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    ஆவாரம் பூ பேஸ் பேக்
    X
    ஆவாரம் பூ பேஸ் பேக்

    ஆவாரம் பூ பேஸ் பேக்

    மலர்களைக் கொண்டு போடும் ‘பேஸ் பேக்’ முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை அகற்றும் என்பதால் தயக்கமில்லாமல் இதை பயன்படுத்த முடியும்.
    பூக்கள் பல்வேறு மருத்துவ தன்மைகளைக் கொண்டவை. எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல், இயற்கையான அழகைக் கொடுக்கக்கூடியவை. பால், பழங்கள், பூக்கள் கலந்து பயன்படுத்துவதால் இந்த ‘பேஸ் பேக்’, சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும், ‘பளிச்’ என்ற தோற்றத்தோடும் வைக்க உதவும்.

    தேவையான பொருட்கள் :

    ஆவாரம் பூ - 15
    அரிசி மாவு - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
    ரோஜா பன்னீர் - தேவையான அளவு

    வெயிலில் செல்வதால் கருத்துப்போகும் சருமத்தை பழைய நிலைமைக்கு கொண்டுவருவதற்கு ஆவாரம் பூ உதவும். மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசை போல அரைக்கவும். இதை முகத்திலும், கழுத்திலும் தடவி, 15 நிமிடங்கள் கழித்து மென்மையாக மசாஜ் செய்தால் சரும நிற மாற்றத்தை உணர்வீர்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்யலாம்.
    Next Story
    ×