என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அழகுக் குறிப்புகள்
X
சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க என்ன செய்யலாம்....
Byமாலை மலர்1 Jan 2022 8:39 AM GMT (Updated: 1 Jan 2022 8:39 AM GMT)
பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ளாததே சரும வறட்சிக்கு காரணமாகும். சருமம் எப்போதும்போல் பொலிவுடன் காட்சியளிப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
சரும வறட்சி பிரச்சினையால் நிறைய பேர் அவதிக்குள்ளாவார்கள். சிலரோ எண்ணெய் பசை தன்மை கொண்ட சருமத்தால் சிரமப்படுவார்கள். பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ளாததே அதற்கு காரணமாகும். சருமம் எப்போதும்போல் பொலிவுடன் காட்சியளிப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
வறண்ட சரும பிரச்சினை கொண்டவர்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்வது அவசியம். அதற்கு மாய்ச்சுரேஸர்களை பயன்படுத்தலாம். அப்படி பயன்படுத்தியும் சருமத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்றால் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம். போதுமான அளவு தண்ணீர் பருகி வர வேண்டும். அது சரும ஆரோக்கியத்திற்கு அவசியம். பகல் வேளையில் சருமம் எண்ணெய் பசை தன்மையோ, ஈரப்பதமான தன்மையோ கொண்டிருந்தால் மாய்ச்சுரேஸர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
குறைந்த ஈரப்பதம் காரணமாக சருமம் வறண்டு பொலிவின்றி காணப்படும். ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கு ஏற்ற கிரீம்களை பயன்படுத்தலாம். எண்ணெய்யை பயன்படுத்துவதும் சருமத்திற்கு நல்லது. சருமத்திற்கு நறுமணம் சேர்க்கும் எண்ணெய் வகைகளை உபயோகப்படுத்தலாம். முதலில் சருமத்திற்கு உகந்த தேங்காய் எண்ணெய், ஆலிவ் போன்றவைகளை தடவிவிட்டு அதன்பிறகு நறுமண எண்ணெய்யை பயன்படுத்தலாம்.
வெயிலின் தாக்கம் குறைய தொடங்கியதுமே நிறைய பேர் சன்ஸ்கிரீனை தவிர்த்துவிடுகிறார்கள். கோடை காலங்களில் மட்டும்தான் சன்ஸ்கிரீனை உபயோகப்படுத்த வேண்டும் என்றில்லை. சருமத்தின் ஆரோக்கியம் காக்க எல்லா பருவ காலத்திலும் போதுமான அளவு சன்ஸ்கிரீனை உபயோகித்து வர வேண்டும்.
பருவ காலத்தில் உணவு விஷயத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆன்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்த சத்தான உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். அவை சருமம் பாதிப்புக்குள்ளாமல் காக்க உதவும். சருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும் ஏற்படுத்திக்கொடுக்கும். மழைக் காலத்தில் பழங்களையும் அதிகம் சாப்பிட வேண்டும். அவை சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும்.
வறண்ட சரும பிரச்சினை கொண்டவர்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்வது அவசியம். அதற்கு மாய்ச்சுரேஸர்களை பயன்படுத்தலாம். அப்படி பயன்படுத்தியும் சருமத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்றால் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம். போதுமான அளவு தண்ணீர் பருகி வர வேண்டும். அது சரும ஆரோக்கியத்திற்கு அவசியம். பகல் வேளையில் சருமம் எண்ணெய் பசை தன்மையோ, ஈரப்பதமான தன்மையோ கொண்டிருந்தால் மாய்ச்சுரேஸர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
குறைந்த ஈரப்பதம் காரணமாக சருமம் வறண்டு பொலிவின்றி காணப்படும். ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கு ஏற்ற கிரீம்களை பயன்படுத்தலாம். எண்ணெய்யை பயன்படுத்துவதும் சருமத்திற்கு நல்லது. சருமத்திற்கு நறுமணம் சேர்க்கும் எண்ணெய் வகைகளை உபயோகப்படுத்தலாம். முதலில் சருமத்திற்கு உகந்த தேங்காய் எண்ணெய், ஆலிவ் போன்றவைகளை தடவிவிட்டு அதன்பிறகு நறுமண எண்ணெய்யை பயன்படுத்தலாம்.
வெயிலின் தாக்கம் குறைய தொடங்கியதுமே நிறைய பேர் சன்ஸ்கிரீனை தவிர்த்துவிடுகிறார்கள். கோடை காலங்களில் மட்டும்தான் சன்ஸ்கிரீனை உபயோகப்படுத்த வேண்டும் என்றில்லை. சருமத்தின் ஆரோக்கியம் காக்க எல்லா பருவ காலத்திலும் போதுமான அளவு சன்ஸ்கிரீனை உபயோகித்து வர வேண்டும்.
பருவ காலத்தில் உணவு விஷயத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆன்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்த சத்தான உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். அவை சருமம் பாதிப்புக்குள்ளாமல் காக்க உதவும். சருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும் ஏற்படுத்திக்கொடுக்கும். மழைக் காலத்தில் பழங்களையும் அதிகம் சாப்பிட வேண்டும். அவை சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X