என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பனிக்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் பார்த்துக்கொள்வது எப்படி?
Byமாலை மலர்27 July 2020 4:14 AM GMT (Updated: 27 July 2020 4:14 AM GMT)
பனிக்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் பார்த்துக்கொள்வது எப்படி, பொதுவாக தோல் நலன் சார்ந்து பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்ற கேள்வி பெரும்பாலோனோர் மனதில் எழலாம்.
பனிக்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் பார்த்துக்கொள்வது எப்படி, பொதுவாக தோல் நலன் சார்ந்து பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்ற கேள்வி பெரும்பாலோனோர் மனதில் எழலாம்.
பொதுவாகப் பனிக் காலத்தில் யாரும் அதிகமாக தண்ணீர் குடிப்பதில்லை. பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றைக்கூட அதிகமாக சாப்பிட மாட்டார்கள். இதனால் பனிக்காலத்தில் சருமத்தில் வறட்சி ஏற்படும். பலர் குளிக்கப் பயன்படுத்தும் சோப்புகள் பெரும்பாலும் உடலில் வறட்சித் தன்மையை உருவாக்கக்கூடியவை. இதற்கு மாற்றாக எண்ணெய் பசை தரும் ரசாயனம் கலந்த சோப்புகளைப் பயன்படுத்துவது நல்லது. இதனால் உடலின் ஈரத்தன்மை வறண்டு போகாமல் பாதுகாக்கப்படும். அதேபோல் தினமும் 2 வேளை ஈரப்பதம் தரும் கிரீமை உடலிலும் முகத்திலும் பூசிக்கொள்ளலாம்.
சிலர் உதடு வறண்டு போகாமல் இருக்க நாக்கால் உதட்டை ஈரப்படுத்தியபடி இருப்பார்கள். இப்படிச் செய்வதால் உதட்டில் அழற்சி ஏற்பட்டு புண்ணாகிவிடும். இதைத் தவிர்க்க உதட்டுக்குப் பூசும் லிப் பாமை நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை பூசினால் உதடுகளில் வெடிப்பு ஏற்படாது. லிப் பாம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் வெண்ணெயை தடவலாம். குழந்தைகளுக்கும் தடவிவிடலாம்.
பனிக்காலத்தில் சருமம் வறட்சியாக இருக்கும்போது, கையிலும் காலிலும் கோடுகள்போல் பிளவு உண்டாகி சிலருக்கு அரிப்பு ஏற்படும். இந்தப் பிளவுப் பகுதியை அப்படியே விட்டால் அதன் மூலமாக நோய்த்தொற்று ஏற்படக்கூடும். இதைத் தவிர்க்க குளித்துவிட்டு வந்ததுமே சிறிதளவு தேங்காய் எண்ணெயை தேய்த்தால் வறட்சி நீங்கும்.
பனிக் காலத்தில் அதிக நேரம் தண்ணீரில் இருந்தால் சிலருக்குக் கை, கால் பகுதிகள் நீல நிறத்தில் மாறிவிடும். ரத்த நாளங்கள் பனிக் காலத்தில் சுருங்குவதால் இந்தப் பிரச்சினை உண்டாகிறது. இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் அதிக நேரம் தண்ணீரில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மிதமான வெந்நீரில் பாத்திரங்களைக் கழுவலாம். இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் கை, கால்களில் உறை அணிந்துகொள்ள வேண்டும். பனிக் காலத்தில் வெளியே செல்லும்போது, உடலை முழுவதுமாக மறைக்கும் அடர்த்தியான ஆடைகள் அணிய வேண்டும்.
பொதுவாகப் பனிக் காலத்தில் யாரும் அதிகமாக தண்ணீர் குடிப்பதில்லை. பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றைக்கூட அதிகமாக சாப்பிட மாட்டார்கள். இதனால் பனிக்காலத்தில் சருமத்தில் வறட்சி ஏற்படும். பலர் குளிக்கப் பயன்படுத்தும் சோப்புகள் பெரும்பாலும் உடலில் வறட்சித் தன்மையை உருவாக்கக்கூடியவை. இதற்கு மாற்றாக எண்ணெய் பசை தரும் ரசாயனம் கலந்த சோப்புகளைப் பயன்படுத்துவது நல்லது. இதனால் உடலின் ஈரத்தன்மை வறண்டு போகாமல் பாதுகாக்கப்படும். அதேபோல் தினமும் 2 வேளை ஈரப்பதம் தரும் கிரீமை உடலிலும் முகத்திலும் பூசிக்கொள்ளலாம்.
சிலர் உதடு வறண்டு போகாமல் இருக்க நாக்கால் உதட்டை ஈரப்படுத்தியபடி இருப்பார்கள். இப்படிச் செய்வதால் உதட்டில் அழற்சி ஏற்பட்டு புண்ணாகிவிடும். இதைத் தவிர்க்க உதட்டுக்குப் பூசும் லிப் பாமை நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை பூசினால் உதடுகளில் வெடிப்பு ஏற்படாது. லிப் பாம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் வெண்ணெயை தடவலாம். குழந்தைகளுக்கும் தடவிவிடலாம்.
பனிக்காலத்தில் சருமம் வறட்சியாக இருக்கும்போது, கையிலும் காலிலும் கோடுகள்போல் பிளவு உண்டாகி சிலருக்கு அரிப்பு ஏற்படும். இந்தப் பிளவுப் பகுதியை அப்படியே விட்டால் அதன் மூலமாக நோய்த்தொற்று ஏற்படக்கூடும். இதைத் தவிர்க்க குளித்துவிட்டு வந்ததுமே சிறிதளவு தேங்காய் எண்ணெயை தேய்த்தால் வறட்சி நீங்கும்.
பனிக் காலத்தில் அதிக நேரம் தண்ணீரில் இருந்தால் சிலருக்குக் கை, கால் பகுதிகள் நீல நிறத்தில் மாறிவிடும். ரத்த நாளங்கள் பனிக் காலத்தில் சுருங்குவதால் இந்தப் பிரச்சினை உண்டாகிறது. இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் அதிக நேரம் தண்ணீரில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மிதமான வெந்நீரில் பாத்திரங்களைக் கழுவலாம். இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் கை, கால்களில் உறை அணிந்துகொள்ள வேண்டும். பனிக் காலத்தில் வெளியே செல்லும்போது, உடலை முழுவதுமாக மறைக்கும் அடர்த்தியான ஆடைகள் அணிய வேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X