என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மழையும்.. அழகும்..
Byமாலை மலர்29 July 2019 6:33 AM GMT (Updated: 29 July 2019 6:33 AM GMT)
கோடை காலம் மட்டுமின்றி மற்ற பருவ காலங்களிலும் சீரான இடைவெளியில் தண்ணீர் பருகி வந்தால் உடல் ஆரோக்கியமாகவும், சருமம் பொலிவோடும் இருக்கும்.
மழைக்காலம் தொடங்கிவிட்டால் நிறைய பேர் பருகும் தண்ணீர் அளவை குறைத்துவிடுகிறார்கள். எல்லா சீதோஷண நிலைகளிலும் போதுமான அளவு தண்ணீர் அதிகம் பருக வேண்டியது அவசியமானது. நாள் முழுவதும் சீரான இடைவெளியில் தண்ணீர் பருகி வந்தால் உடல் ஆரோக்கியமாகவும், சருமம் பொலிவோடும் இருக்கும்.
கோடை காலம் மட்டுமின்றி மற்ற பருவ காலங்களிலும் நீர்ச்சத்து கொண்ட காய்கறிகள், பழங்களை உட்கொள்ள வேண்டும். அதிலும் மழைக்காலத்தில் சாப்பிடுவது தலைவலி, தொற்றுநோய் பாதிப்புகளை தடுக்க உதவும். சருமத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவும் பயன்படும். மழைக்காலத்தில் முகத்தில் அழுக்கு படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தூங்க செல்வதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். முகத்தில் அதிகபடியான எண்ணெய் படிவதும் கூடாது. பாலை கொண்டு முகத்தை சுத்தப்படுத்தலாம். அது சருமத்தை சுத்தமாக பராமரிக்க உதவும்.
மழைக்காலங்களில் ‘சன்ஸ்கிரீன்’ பூசுவதை நிறைய பேர் தவிர்த்துவிடுகிறார்கள். புறஊதாக் கதிர்களின் ஆதிக்கம் கோடை காலம் மட்டுமின்றி மழைக்காலத்திலும் பரவலாக இருக்கும். அதில் இருந்து சருமத்தை தற்காத்துக்கொள்ள சன்ஸ்கிரீன் பூசுவது நல்லது.
மழைக்காலத்தில் கூந்தல் பராமரிப்பில் அசட்டையாக இருந்துவிடக்கூடாது. வாரத்திற்கு மூன்று முறையாவது கூந்தலை தண்ணீரில் அலசுவதோடு கண்டிஷனரையும் பயன்படுத்த வேண்டும். வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை கூந்தலுக்கு மசாஜ் செய்து வருவதும் நல்லது. அது தலைமுடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். உச்சந்தலையில் எண்ணெய் மசாஜ் செய்து வருவதும் சிறப்பானது. அது தலைப்பகுதி உலர்வடைவதை தவிர்க்க உதவும். ஈரப்பதத்தை தக்க வைக்கவும் வழிவகை செய்யும். அதேவேளையில் எண்ணெய்யை அதிகம் பயன்படுத்த கூடாது. மழைக்காலத்தில் நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
மழைக்காலத்துக்கு ஏற்ற ஆடைகளை உடுத்த வேண்டும். எளிதில் வியர்வையை உறிஞ்சும் ஆடைகள்தான் மழைக்காலத்திற்கு ஏற்றது. அதுபோல் வெளியே செல்வதற்கு சவுகரியமான காலணிகளையும் பயன்படுத்த வேண்டும்.
பழங்கள் மற்றும் காய்கறிகளை நறுக்கினால் உடனே பயன்படுத்த வேண்டும். வெட்டி வைத்துவிட்டு வெகுநேரம் கழித்து சாப்பிடக்கூடாது. அதில் பாக்டீரியாக்கள் எளிதில் ஊடுருவிவிடும். அதுபோல் திறந்தவெளியில் பரிமாறப்படும் உணவு வகைகளை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
மழைக்காலத்தில் நீரிழப்பு பிரச்சினையும் உருவாகும். அதனை தவிர்க்க நிறைய திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். இளநீர், எலுமிச்சை ஜூஸ், பழ சாறுகள், காய்கறி சூப் போன்றவைகளை பருகலாம். அதேவேளையில் சோடா வகைகள், கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களை பருகக்கூடாது.
கர்ப்பிணி பெண்கள் தவறாமல் நீர்ச்சத்து கொண்ட உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அது சருமத்திற்கு புது பொலிவு தரும்.
உடல் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் முன்கூட்டியே தூங்க செல்ல வேண்டும். அது உடல், மன ஆரோக்கியத்திற்கு உதவும்.
கோடை காலம் மட்டுமின்றி மற்ற பருவ காலங்களிலும் நீர்ச்சத்து கொண்ட காய்கறிகள், பழங்களை உட்கொள்ள வேண்டும். அதிலும் மழைக்காலத்தில் சாப்பிடுவது தலைவலி, தொற்றுநோய் பாதிப்புகளை தடுக்க உதவும். சருமத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவும் பயன்படும். மழைக்காலத்தில் முகத்தில் அழுக்கு படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தூங்க செல்வதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். முகத்தில் அதிகபடியான எண்ணெய் படிவதும் கூடாது. பாலை கொண்டு முகத்தை சுத்தப்படுத்தலாம். அது சருமத்தை சுத்தமாக பராமரிக்க உதவும்.
மழைக்காலங்களில் ‘சன்ஸ்கிரீன்’ பூசுவதை நிறைய பேர் தவிர்த்துவிடுகிறார்கள். புறஊதாக் கதிர்களின் ஆதிக்கம் கோடை காலம் மட்டுமின்றி மழைக்காலத்திலும் பரவலாக இருக்கும். அதில் இருந்து சருமத்தை தற்காத்துக்கொள்ள சன்ஸ்கிரீன் பூசுவது நல்லது.
மழைக்காலத்தில் கூந்தல் பராமரிப்பில் அசட்டையாக இருந்துவிடக்கூடாது. வாரத்திற்கு மூன்று முறையாவது கூந்தலை தண்ணீரில் அலசுவதோடு கண்டிஷனரையும் பயன்படுத்த வேண்டும். வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை கூந்தலுக்கு மசாஜ் செய்து வருவதும் நல்லது. அது தலைமுடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். உச்சந்தலையில் எண்ணெய் மசாஜ் செய்து வருவதும் சிறப்பானது. அது தலைப்பகுதி உலர்வடைவதை தவிர்க்க உதவும். ஈரப்பதத்தை தக்க வைக்கவும் வழிவகை செய்யும். அதேவேளையில் எண்ணெய்யை அதிகம் பயன்படுத்த கூடாது. மழைக்காலத்தில் நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
மழைக்காலத்துக்கு ஏற்ற ஆடைகளை உடுத்த வேண்டும். எளிதில் வியர்வையை உறிஞ்சும் ஆடைகள்தான் மழைக்காலத்திற்கு ஏற்றது. அதுபோல் வெளியே செல்வதற்கு சவுகரியமான காலணிகளையும் பயன்படுத்த வேண்டும்.
பழங்கள் மற்றும் காய்கறிகளை நறுக்கினால் உடனே பயன்படுத்த வேண்டும். வெட்டி வைத்துவிட்டு வெகுநேரம் கழித்து சாப்பிடக்கூடாது. அதில் பாக்டீரியாக்கள் எளிதில் ஊடுருவிவிடும். அதுபோல் திறந்தவெளியில் பரிமாறப்படும் உணவு வகைகளை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
மழைக்காலத்தில் நீரிழப்பு பிரச்சினையும் உருவாகும். அதனை தவிர்க்க நிறைய திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். இளநீர், எலுமிச்சை ஜூஸ், பழ சாறுகள், காய்கறி சூப் போன்றவைகளை பருகலாம். அதேவேளையில் சோடா வகைகள், கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களை பருகக்கூடாது.
கர்ப்பிணி பெண்கள் தவறாமல் நீர்ச்சத்து கொண்ட உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அது சருமத்திற்கு புது பொலிவு தரும்.
உடல் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் முன்கூட்டியே தூங்க செல்ல வேண்டும். அது உடல், மன ஆரோக்கியத்திற்கு உதவும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X