search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தோசைக்கு அருமையான வாழைப்பூ சாம்பார்
    X

    தோசைக்கு அருமையான வாழைப்பூ சாம்பார்

    வாழைப்பூவில் பொரியல், கூட்டு, வடை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வாழைப்பூவை வைத்து சூப்பரான சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துவரம்பருப்பு - 1 கப்,
    வாழைப்பூ - 1 கப்,
    நறுக்கிய தக்காளி - 1,
    புளி - நெல்லிக்காய் அளவு,
    சின்ன வெங்காயம் - 8,
    காய்ந்தமிளகாய் - 4,
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
    குழம்பு மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்,
    உப்பு, தாளிக்க கடலை எண்ணெய் - தேவைக்கு,
    கடுகு, கறிவேப்பிலை - சிறிது.



    செய்முறை :

    வாழைப்பூவை சுத்தம் செய்து நறுக்கி மோரில் போட்டு வைக்கவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    துவரம் பருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு 2 கப் தண்ணீர், மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி 3 விசில் விடவும்.

    விசில் அடங்கியதும் திறந்து தக்காளி, புளிக்கரைசல், மிளகாய் பொடி, வாழைப்பூ, உப்பு போட்டு கலந்து மீண்டும் 1 விசில் விட்டு இறக்கவும்.

    பின்பு கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்த பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, குக்கரிலிருந்து சாம்பாரை ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கவும்.

    சூப்பரான வாழைப்பூ சாம்பார் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×