search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வட இந்திய ஸ்பெஷல் மலாய் பன்னீர்
    X

    வட இந்திய ஸ்பெஷல் மலாய் பன்னீர்

    வட இந்திய உணவான மலாய் பன்னீர் நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இந்த மலாய் பன்னீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 250 கிராம்
    சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    இஞ்சி பூண்டு விழுது - தலா 1 டீஸ்பூன்
    கிரீம் - 1/4 கப்
    வெண்ணெய் - 1/2 கப்
    மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
    லவங்கம் - 1/4 டீஸ்பூன்
    தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்
    சீரகம் வறுத்துப் பொடித்தது - 1/2 டீஸ்பூன்
    பொடித்த பட்டை - சிறிய துண்டு
    பச்சை மிளகாய் - 3
    முந்திரி - 15 (விழுதாக அரைக்கவும்).



    செய்முறை :

    வெங்காயத்தையும், தக்காளியையும் தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.

    பன்னீரை துண்டுகளாக வெட்டி, கொதிக்கும் நீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து

    கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு சூடானதும் அதில் சீரகம், பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின்னர் அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பச்சை வாசனை போன பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் தனியாத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சர்க்கரை, உப்பு சேர்த்து வதக்கவும்.

    எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும், முந்திரி விழுதையும் சேர்த்து கிரேவியாக வரும்போது பன்னீரை கிரேவியில் சேர்த்து ஒரே கொதி வந்ததும் இறக்கி கிரீம் சேர்த்து பரிமாறவும்..

    சூப்பரான மலாய் பன்னீர் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    Next Story
    ×