என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    இந்த மாங்காய் தொக்கை செய்வது மிகவும் சுலபம். தயிர்சாதம், பொங்கலுக்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கும். இப்போது இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய மாங்காய் - 1
    நல்லெண்ணெய் - கால் கப்
    கடுகு - 1 டீஸ்பூன்
    வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * மாங்காயின் தோலை எடுத்து விட்டு துருவிக் கொள்ளவும்.

    * வெந்தயத்தை வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின் துருவிய மாங்காயை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வதக்கவும்.

    * அடுத்து அதில் உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

    * மாங்காயை பச்சை வாசனை போக வதக்கவும்.

    * அடுத்து அதில் பொடித்த வெந்தயத்தைச் சேர்க்கவும்.

    * மாங்காய் நன்கு தொக்கி வரும் போது தனியே ஒரு வாணலியில் 4 டீஸ்பூன் நல்லெண்ணையைக் கொதிக்க வைத்துத் தொக்குடன் சேர்க்கவும்.

    * சூப்பரான மாங்காய் தொக்கு ரெடி.

    * .மிகவும் ருசியான இந்த ஊறுகாய் தயிர்சாதம், பொங்கல் போன்ற உணவுகளுக்கு அருமையான இணை.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு முட்டை உப்புமா செய்து கொடுக்கலாம். இப்போது பிரட் முட்டை உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரட் - 5 துண்டுகள்
    முட்டை - 3
    பெரிய வெங்காயம் - 1
    மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    தாளிப்பதற்கு…

    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
    சீரகம் - 1/4 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1
    பெருங்காயத் தூள் - சிட்டிகை
    கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பிரட்டை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி, அத்துடன் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

    * முட்டை உதிரியாக வந்ததும் அதில் பிரட் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் நன்கு கிளறவும்.

    * நன்றாக உதிரியாக வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * சுவையான பிரட் முட்டை உப்புமா ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கன் குழம்பு வகைகளில் தனியா சிக்கன் வகை கொஞ்சம் புதுமையானது. அதிக சுவையானது. இந்த தனியா சிக்கனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 1 கிலோ
    கொத்தமல்லி இலை - 2 கட்டு
    புதினா இலை - 1 கட்டு
    வெங்காயம் - 3
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4
    தயிர் - 250 மில்லி லிட்டர்
    தனியா தூள் - 3 டீஸ்பூன்
    சீரகத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

    செய்முறை :

    * ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சிக்கனை நன்றாக சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தயிரில் பாதி அளவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, இஞ்சி விழுதை போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில் வெங்காயம், பச்சைமிளகாயை போட்டு நன்றாக வதக்கிய பின்னம் சீரகம், தனியா தூள் சேர்த்து கிளறவும்.

    * அடுத்து சிக்கன் துண்டுகளை வடித்து கடாயில் சேர்த்து அதிக பட்ச தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.

    * பின்னர் மீதமுள்ள தயிர், கொத்தமல்லி இலை, புதினாவை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் மூடி போட்டு வேகும் வரை வைக்கவும்.

    * வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

    * இப்போது சூடான தனியா சிக்கன் ரெடி.

    * இந்த தனியா சிக்கன் சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கத்தரிக்காய் பிடிக்காதவர்களுக்கு கூட செட்டிநாடு கத்தரிக்காய் வறுவலை விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த வறுவலை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    கத்தரிக்காய் - 6
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    கடலை மாவு - 2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    வறுத்து பொடிக்க :

    தனியா - 2 ஸ்பூன்
    கடலை பருப்பு - 1 ஸ்பூன்
    உளுந்தம் பருப்பு - 1ஸ்பூன்
    மிளகு - அரை ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை :

    * கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தனித்தனியாக போட்டு வறுத்து ஆறவைத்து சற்று கொரகொப்பாக பொடித்து கொள்ளவும்.

    * கத்தரிக்காயை வட்டவட்டமாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

    * அடுத்து தண்ணீரை வடித்து விட்டு அதன் மேல் மிளகாய் தூள், கடலைமாவு, மஞ்சள் தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கத்தரிக்காயின் மேல் எல்லா இடங்களிலும் படும் படி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    * அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெயை ஊற்றவும்.

    * தோசை கல் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கத்தரிக்காய் துண்டுகளை பொடித்து வைத்த மசாலாவில் பிரட்டி தோசை கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விடவும். 2 நிமிடம் ஆனதும் திருப்பி போடவும்.

    * இருபுறமும் பொன்னிறமானதும் எடுத்து விடவும். மீதமுள்ள எல்லா கத்தரிக்காய் துண்டுகளையும் இதே முறையில் வறுத்து எடுக்கவும்.

    * சுவையான செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல் ரெடி.

    * சாம்பார் சாதம், தயிர் சாதம் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நெத்திலிக் குழம்பு வைத்தால் வாசனை ஊரைத் தூக்கும். இந்த நெத்திலியோடு மொச்சையையும் பக்குவமாக சேர்த்துக் கொண்டால் குழம்பு ருசி ஊரைக் கூட்டும்.
    தேவையான பொருட்கள் :

    மொச்சைப்பயறு - 100 கிராம்
    நெத்திலி மீன் - 1/2 கிலோ
    எண்ணெய் - 1 குழிக்கரண்டி
    சிறிய வெங்காயம் - 1/4 கிலோ
    தக்காளி - 1/4 கிலோ
    பூண்டு - 10 பல்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப
    புளி - எலுமிச்சம்பழ அளவு

    தாளிக்க :

    கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
    காய்ந்த மிளகாய் - 5 (கிள்ளியது)

    செய்முறை :

    * மொச்சைப் பயறை வறுத்து ஊற வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.

    * மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.

    * புளியை கரைத்து கொள்ளவும்.

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பூண்டை சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் புளிக்கரைசலை ஊற்றவும்.

    * குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் மொச்சைப்பயிறு, நெத்திலி மீனை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

    * இப்போது மொச்சை நெத்திலி மீன் குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மட்டன் வகை உணவுகளில் தனி ருசி இந்த மட்டன் கீமா புலாவ். மட்டன் கீமா புலாவை எப்படி வீட்டில் எளிய முறையில் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 2 கப்
    மட்டன் கொத்துக்கறி - 400 கிராம்
    தயிர் - 2 கப்
    வெங்காயம் - 1
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
    லவங்கம் - 6
    ஏலக்காய் - 5
    மிளகு - 1/2 டீஸ்பூன்
    பாதாம் - 1/4 கப்
    பிஸ்தா - 1/4 கப்
    காய்ந்த திராட்சை - 1/2 கப்
    குங்குமப்பூ - 1/2 டீஸ்பூன்
    நெய் - 5 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை :

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மட்டன் கொத்துகறியை சுத்தம் செய்து வைக்கவும்.

    * அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

    * குக்கரில் நெய் விட்டு சூடானதும் மிளகு, ஏலக்காய், லவங்கம், பாதாம், பிஸ்தா, கிஸ்மிஸ் போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    * அடுத்து அதனுடன் தயிர், இஞ்சி பூண்டு விழுது, குங்குமப்பூ சேர்த்து சுத்தம் செய்த கொத்துக்கறியை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    * தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 5 விசில் விட்டு கறியை வேக விடவும்.

    * பிரஷர் போனதும் குக்கரை திறந்து பாசுமதி அரிசியை சேர்த்து 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும்.

    * மட்டனும் அரிசியும் வெந்ததும் மூடியைத் திறந்து ஒரு கிளறு கிளறி மட்டன் கீமா புலாவை பரிமாறவும்.

    * இதே முறைப்படி கொத்துக்கறிக்கு பதிலாக மட்டன் அல்லது சிக்கன் சேர்த்தும் மட்டன் புலாவ், சிக்கன் புலாவ் செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இரவில் செய்த இட்லி மீதம் உள்ளதா? அப்படியானால், காலையில் அதை வைத்து சூப்பரான கைமா இட்லி செய்யலாம். இந்த கைமா இட்லியை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி - 10
    வெங்காயம் - 1
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
    தக்காளி - 2
    பச்சை பட்டாணி - 1/4 கப்
    குடமிளகாய் - 1
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    மல்லித் (தனியா) தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - 2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது
    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    சோம்பு பொடி - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    பச்சை மிளகாய் - 1

    செய்முறை:

    * வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, குடமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    * பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    * இட்லிகளை துண்டுகளாக்கிக் கொண்டு, வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த எண்ணெயில் இட்லிகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் சற்று வதங்கிய பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின், அரைத்த தக்காளியை ஊற்றி, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, பச்சை வாசனை போக நன்கு கிளறி விட வேண்டும்.

    * அடுத்து  அதில் வேக வைத்த பட்டாணி மற்றும் குடைமிளகாயை போட்டு 5 நிமிடம் கிளறி, பின் 1/2 கப் தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

    * இறுதியில் பொரித்து வைத்துள்ள இட்லியை போட்டு நன்கு கிளறி இறக்கி, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.

    * சூப்பரான கைமா இட்லி ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தை மாதம் முதல் நாளான (நாளை) பொங்கல் பண்டிகைக்கு தித்திப்பான சர்க்கரை பொங்கல் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி  -  1 கப்
    பாசிப்பருப்பு  -  2 டேபுள் ஸ்பூன்
    பால் - 1 கப்
    வெல்லம் - 3/4 கப்
    நெய் - 100 கிராம்
    முந்திரிப்பருப்பு -  தேவையான அளவு
    காய்ந்த திராட்சை -  தேவையான அளவு
    ஏலக்காய்  - 3 பொடி செய்தது

    செய்முறை :

    * வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.

    * அரிசியையும், பருப்பையும் நன்றாக கழுவி 4 கப் நீர் ஊற்றி குழைய வேக விட வேண்டும்.

    * ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.

    * பால் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் அந்த பாலை அரிசி, பருப்பு கலவையில் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறி விடவும்.

    * அடுத்து அதில் பொடித்த வெல்லம், ஏலக்காய் போட்டு அதனுடன் சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

    * ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் முந்திரிப்பருப்புயும், காய்ந்த திராட்சையும் பொன் நிறத்தில் வறுத்து பொங்கலில் கொட்டி கிளறவும்.

    * திக்கான பதம் வந்தவுடன் இறக்கி வைத்து சூடாக பரிமாறவும்.

    * சூப்பரான சர்க்கரை பொங்கல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொங்கல் பண்டிகைக்கு செய்யும் ஸ்பெஷல் உணவுகளில் கதம்ப சாம்பாரும் ஒன்று. இந்த கதம்ப சாம்பரின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் பலவிதமான காய்கறிகளைப் போட்டு செய்வது தான்.
    தேவையான பொருட்கள்:

    முருங்கைக்காய் - 1  
    கத்திரிக்காய் - 3
    மாங்காய் - 1
    கேரட் - 1
    உருளைக்கிழங்கு - 1
    அவரைக்காய் - 3
    பீன்ஸ் - 2  
    வெங்காயம் - 2
    தக்காளி - 3
    பச்சை மிளகாய் - 3
    துவரம் பருப்பு - 200 கிராம்
    புளி சாறு - 2 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
    குழம்பு மிளகாய் தூள்/சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
    தேங்காய் அரைத்த விழுது - கால் கப்
    கடுகு - 1 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    வரமிளகாய் - 2
    பெருங்காயத் தூள் - சிறிது
    கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிது

    செய்முறை :

    * காய்கறிகள், வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை சமமான அளவில் வெட்டிக்கொள்ளவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, தேவையான தண்ணீர், மஞ்சள் தூள், பெருங்காய தூள் மற்றும் உப்பு சேர்த்து, 5 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனவுடன் பருப்பை கடைந்து கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    * அடுத்து அதில் தக்காளியை போட்டு சிறிது நேரம் வதக்கி, குழம்பு மிளகாய் தூள், உப்பு மற்றும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி, காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும்.

    * காய்கறிகள் வெந்ததும், அதில் தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

    * குழம்பானது நன்கு கொதிக்கும் போது, அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, நன்கு 10 நிமிடம் கொதிக்க விடவும்.

    * பிறகு அதில் புளியை ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு, கொத்தமல்லியை தூவி இறக்கி விட வேண்டும்.

    * இப்போது சுவையான பொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் இந்த கோதுமை ரவை பொங்கலை சாப்பிடலாம். பொங்கலுக்கு சூப்பரான கோதுமை ரவை இனிப்பு பொங்கலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - 1 கப்
    பயத்தம் பருப்பு - 1/4 கப்
    வெல்லம் பொடித்தது - ஒன்றரை கப்
    நெய் - கால் கப்
    முந்திரி பருப்பு - சிறிது
    காய்ந்த திராட்சை - சிறிது
    ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்  

    செய்முறை :

    * வாணலியில் கோதுமை ரவை, பயத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும்.

    * வறுத்த ரவை, பருப்பு இரண்டையும் குக்கரில் போட்டு, 3 கப் தண்ணீரைச் சேர்த்து, 4 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பிலிருந்து எடுத்து, வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

    * குக்கரை திறந்து, வெந்த ரவை மற்றும் பருப்பை சற்று மசித்து விட்டு, அதில் வடிகட்டிய வெல்ல பாகையும் விட்டு, மீண்டும் அடுப்பிலேற்றி, கிளறி விடவும். இடை இடையே சிறிது சிறிதாக நெய்யை சேர்த்து கொண்டே வரவும்.

    * அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொங்கல் சற்று கெட்டியாக வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

    * கடைசியில் முந்திரி, திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து போடவும்.

    * ஏலக்காய் தூளையும் தூவி, மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

    * சூப்பரான கோதுமை ரவா இனிப்பு பொங்கல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு வித்தியாசமான சுவையுடன் சூப்பராக இருக்கும். இந்த குழம்பபை எப்படி செய்வது என்று விரிவாக கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தக்காளி - 4
    வெங்காயம் - 2  
    பச்சை மிளகாய் - 2
    துருவிய தேங்காய் - 1/2 கப்
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மிக்ஸியில் தேங்காய், வெங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் அதில் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    * தக்காளி நன்கு வெந்ததும், அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

    * அடுத்து அரைத்த தேங்காய், வெங்காய கலவையை தக்காளி கிரேவியுடன் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    * அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, 10 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு ரெடி!!!

    * இந்த தக்காளி குழம்பானது சாதம் மற்றும் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த பொங்கலுக்கு கல்கண்டு பொங்கலை செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். இப்போது கல்கண்டு பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கல்கண்டு - 400 கிராம்
    பச்சரிசி - 500 கிராம்
    பால் - 1 லிட்டர்
    முந்திரி - 10௦
    திராட்சை - 10௦
    நெய் - 200 கிராம்
    ஏலக்காய் தூள் - சிறிதளவு

    செய்முறை :


    * கல்கண்டை பொடித்து கொள்ளவும்.

    * பச்சரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து ரவை போல் உடைத்து கொள்ளவும்.

    * அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்.

    * பால் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உடைத்த பச்சரிசியை சேர்த்து நன்றாக குழைய வேகவைக்கவும்.

    * இடையிடையே நெய்யை சேர்க்கவும்.

    * பிறகு அதில் பொடித்த கல்கண்டை சேர்க்கவும்.

    * கல்கண்டு கரைந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நெய் ஊற்றி நன்கு கலந்து இறக்கி 10 நிமிடம் கழித்து பரிமாறவும்.

    * சூப்பரான கல்கண்டு பொங்கல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×