என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    சப்பாத்தி, பூரிக்கு சூப்பரான சைடு டிஷ் கொண்டைக்கடலை குருமா. இன்று இந்த கொண்டைக்கடலை குருமாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்
    தேவையான பொருள்கள் :

    கொண்டைக்கடலை - ஒரு கப்
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    தக்காளி - 1
    இஞ்சி - சிறிது
    பூண்டு - 3 பற்கள்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    கொத்துமல்லி இலை - ஒரு கொத்து
    எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்

    அரைக்க :

    தேங்காய் - 3 துண்டுகள்
    கசகசா - 1/2 டீஸ்பூன்
    பொட்டுக்கடலை - 1/4 டீஸ்பூன்

    தாளிக்க :

    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
    கிராம்பு - 1
    பிரிஞ்சி இலை - 1
    சீரகம் - கொஞ்சம்
    பெருஞ்சீரகம் - கொஞ்சம்
    முந்திரி - 5



    செய்முறை :

    * கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

    * ஊறவைத்த கொண்டைக்கடலையை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, சிறிது உப்பு சேர்த்து, வேக வைத்து, நீரை வடித்து வைக்கவும்.

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    * இஞ்சி, பூண்டை தட்டி வைக்கவும்.

    * வெறும் வாணலியில் கசகசாவை லேசாக வறுத்து சிறிது சுடு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். ஊறியதும் தேங்காய், பொட்டுக்கடலையுடன் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

    * ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் கடலையை சேர்த்துக் கிளறிவிட்டு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு, கடலை மூழ்கும் அளவு திட்டமாகத் தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.

    * எல்லாம் நன்றாகக் கலந்து, சிறிது நேரம் கொதித்து, வாசனை வந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையைக் குருமாவில் ஊற்றி கொதி வரும் வரை மூடி வைக்கவும்.

    * கொதி வந்து பிறகு எலுமிச்சை சாறு, கொத்துமல்லி தூவிக் இறக்கி பரிமாறவும்.

    * இப்போது அருமையான, கொண்டைக்கடலை குருமா தயார்.

    * இது பூரி, சப்பாத்தி, நாண், சாதம் இவற்றிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.


    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தேங்காய் சட்னி சாப்பிடு இருப்பீங்க. தேங்காயை எண்ணெயில் நன்றாக வறுத்து அதில் சட்னி செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த சட்னியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தேங்காய் துருவல் - ஒரு கப்,
    காய்ந்த மிளகாய் - 4,
    உளுந்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு - 3 டீஸ்பூன்,
    புளி, கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு,
    உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :  

    * கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையை வறுக்கவும்.

    * இவை சற்று சிவந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும்.

    * நன்றாக ஆறியதும் அதனுடன் உப்பு, சிறிதளவு புளி சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக, நைசாக அரைத்து கொள்ளவும்.

    * சூப்பரான வறுத்து அரைத்த தேங்காய் சட்னி ரெடி.

    குறிப்பு: இது ரசம் சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது. தண்ணீர் விடாமல் அரைத்தால், வெளியூர் பயணத்துக்கு புளி சாதம், இட்லி, தோசைக்கு சைட் டிஷ் ஆக உபயோகிக்கலாம். தேங்காய் துருவலை, பொன்னிறமாக, வாசனை வரும் வரை வறுக்க வேண்டியது அவசியம்.
    மட்டன் பிரியர்களுக்கான எளிய முறையில் செய்யக்கூடிய மிகவும் சுவையான ஆத்தூர் மட்டன் மிளகு கறி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - அரை கிலோ
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    இஞ்சி - பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    புதினா, கொத்தமல்லி, சிறிதளவு

    மசாலாவுக்கு :

    மிளகு - 1 ஸ்பூன்
    சீரகம் - 1 ஸ்பூன்
    சோம்பு - 1/2 ஸ்பூன்
    வரமிளகாய் - 4
    மல்லித்தூள்(அ)முழு மல்லி - 1 ஸ்பூன்
    பட்டை - 1
    கிராம்பு - 2
    முந்திரி - ஐந்து
    ஏலக்காய் - 3
    தேங்காய் - அரை மூடி
    இஞ்சி - நெல்லிக்காய் அளவு
    பூண்டு - 10 பல்



    செய்முறை :

    * வெங்காயம், புதினா, கொத்தமல்லி, சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மட்டனை சுத்தம் சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    * முதலில் மசாலாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள மிளகு, சீரகம், சோம்பு, வரமிளகாய், மல்லித்தூள்(அ)முழு மல்லி, பட்டை, கிராம்பு, முந்திரி, ஏலக்காய், தேங்காய், இஞ்சி, பூண்டு என அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு நைசாக அரைத்து கெள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மட்டன், மஞ்சள் தூள், உப்பு, வெங்காயம், தக்காளி, அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் ஊற வைத்த மட்டன் கலவையையும் சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்கவும்.

    * சிறிது தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 5 விசில் போட்டு வேக விடவும்.

    * விசில் போனவுடன் குக்கரை திறந்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் புதினா கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * ஆத்தூர் மட்டன் மிளகு கறி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வயிற்று கோளாறு, உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் இந்த குழம்பை வாரம் இருமுறை செய்வது சாப்பிடலாம். இப்போது இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெந்தயம் - ஒரு கைப்பிடி அளவு,
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    பூண்டு - 20 பற்கள்,
    புளி - நெல்லிக்காய் அளவு,
    காய்ந்த மிளகாய் - ஒன்று,  
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    குழம்பு மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய் -  2 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :  

    * புளியை கரைத்து கொள்ளவும்.

    * சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

    * வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெந்தயம், கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின் சின்ன வெங்காயம், பூண்டை போட்டு வதக்கவும்.
    * வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் கரைத்த புளியை ஊற்றி கொதிக்க விடவும்.

    * பிறகு உப்பு, மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

    * கொதித்து, நன்கு மணம் வந்ததும் இறக்கி கறிவேப்பிலை சேர்க்கவும். (குழம்பு ரொம்ப நீர்க்க இருந்தால் ஒரு டீஸ்பூன் அரிசி மாவை நீரில் கரைத்து சேர்த்து, 5 நிமிடம் கழித்து இறக்கவும்).

    * சூப்பரான வெந்தயக்குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மீன் மிகவும் பிடிக்கும். சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு சூப்பரான சைடு டிஷ் லெமன் ஃபிஷ் பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீன் துண்டுகள் - அரை கிலோ (துண்டு மீன்)
    சின்னவெங்காயம் - 50 கிராம்
    இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன்
    பச்சைமிளகாய் - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு

    மீனை ஊற வைப்பதற்கு:

    எலுமிச்சைச் சாறு - அரை டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்



    செய்முறை :

    * சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மீனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து அதிலிருக்கும் நீரை வடித்து வைத்துக்கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கழுவிய மீனை போட்டு அதனுடன் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடங்கள் ஊறவிடவும்.
    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சைமிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கவும்.

    * அடுத்து அதில் மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கிவிட்டு, கலவையை பேனில் சமமாக பரப்பி அதன் மேல் மீன் துண்டுகளை வைத்து அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.

    * மீன் ஒரு புறம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு மறுபுறமும் வேக விட்டு இறக்கவும்.

    * மீனுடன் மசாலாக் கலவையும் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

    * லெமன் ஃபிஷ் பிரை, சாதத்துடன் சாப்பிட சுவையான சைடு டிஷ்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வீட்டிற்கு திடீரென விருந்தாளி வந்து விட்டால் இந்த பொரிச்ச குழம்பை விரைவில் செய்து அசத்தலாம். இப்போது இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காய்கறிகள் (கேரட், பீன்ஸ், புடலங்காய், உருளைக்கிழங்கு) - 1/4 கிலோ,
    பாசிப்பருப்பு - 1 கப்,
    புளி - சிறிது,
    மஞ்சள் தூள், பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்,
    தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன்,
    எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, உப்பு - தேவைக்கு.

    அரைக்க...

    உளுந்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
    துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்,
    மிளகு - 1/2 டீஸ்பூன்,
    காய்ந்தமிளகாய் - 3



    செய்முறை :

    * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வாசனை வரும் வரை நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    * புளியை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

    * பாசிப்பருப்பை வேகவைத்து கடைந்து கொள்ளவும்.

    * கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அனைத்து காய்கறிகளையும் போட்டு நன்கு வதக்கவும்.

    * காய்கறிகள் நன்றாக வெந்ததும் அதில் கடைந்த பருப்பை ஊற்றவும்.

    * அடுத்து அதில் மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து, உப்பு, புளிக்கரைசல் ஊற்றவும்.

    * எல்லாம் சேர்ந்து வரும் போது அரைத்த பொடியை 2 அல்லது 3 டீஸ்பூன் போடவும்.

    * மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, தேங்காய்த் துருவல் சேர்த்து சிவக்க வறுத்து காய்கறிகள் கலவையில் கொட்டி கலக்கவும்.

    * கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு கேழ்வரகு அல்வா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று கேழ்வரகு அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்
    வெல்லம் பொடித்தது - 1 1/2 கப்
    பால் கோவா அல்லது பால் பவுடர் - 1 கப்
    தண்ணீர் - 2 கப்
    நெய் - தேவையான அளவு
    ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
    முந்திரிப்பருப்பு - தேவைக்கு



    செய்முறை :

    * வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் 2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்தவுடன், கீழே இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

    * வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை விட்டு சூடானதும் அதில் கேழ்வரகு மாவைப் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வாசனை வரும் வரை வறுக்கவும்.

    * பின்னர் அதில் வெல்லப்பாகை விட்டு நன்றாக கைவிடாமல் கிளறவும். இடைஇடையே சிறிது சிறிதாக நெய்யை ஊற்ற வேண்டும்.

    * அல்வா சற்று கெட்டியாக ஆரம்பித்து ஓரங்களில் நெய் பிரிய ஆரம்பித்தவுடன் பால் கோவாவைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    * பின்னர் அதில் மீதமுள்ள நெய்யைச் சேர்த்துக் கலந்து, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரிப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.

    * விருப்பப்பட்டால் நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டுகள் போட்டும் பரிமாறலாம்.

    * சூப்பரான கேழ்வரகு அல்வா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெண்டைக்காய் பெப்பர் பிரை சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு சூப்பராக இருக்கும். இப்போது வெண்டைக்காய் பெப்பர் பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெண்டைக்காய் - 1/4 கிலோ,
    மிளகு - 2 டீஸ்பூன்,
    பெரிய வெங்காயம் - 1,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
    பூண்டு - 3 பல்,
    கடுகு - தாளிக்க.

    செய்முறை :

    * வெண்டைக்காயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்

    * பெரிய வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மிக்சியில் வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்.  

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின் வெண்டைக்காயை போட்டு நன்றாக வதக்கவும்.

    * பிறகு வதங்கிய வெண்டைக்காயில் அரைத்த மிளகு கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு போட்டு வேக விடவும்.

    * நன்கு சுருள வந்தபின் இறக்கவும்.

    * சூப்பரான வெண்டைக்காய் பெப்பர் பிரை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாழைக்காய் வறுவல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். வாழைக்காயில் பொடிமாஸ் செய்தால் சூப்பராக இருக்கும். இப்போது வாழைக்காய் பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாழைக்காய் - 1,
    தேங்காய் - 3 பல்,
    சீரகம் - 1/2 டீஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 2,
    எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன்,
    வெங்காயம் - 1,
    உப்பு - தேவைக்கு,
    கடுகு - சிறிது,
    கறிவேப்பிலை - 1 ஆர்க்கு,
    எண்ணெய் - தேவைக்கு.

    செய்முறை :

    * குக்கரில் வாழைக்காயை தோல் உரிக்காமல் போட்டு வேகவைத்து, தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும்.

    * தேங்காயை சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    * வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் உதிர்த்த வாழைக்காயை சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம், வாழைக்காய் நன்றாக சேர்ந்து வரும் போது அரைத்த தேங்காய் கலவை, உப்பு சேர்த்து 5 நிமிடம் பிரட்டவும்.

    * கடைசியாக கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.

    * இந்த வாழைக்காய் பொடிமாஸ் சாம்பார் சாதத்திற்கு சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கத்திரிக்காய் புளிக்குழம்பு மிகவும் அருமையாக இருக்கும். இப்போது கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நீளமான கத்திரிக்காய் - 5 (நறுக்கியது)
    தேங்காய் - 1/2 கப் (துருவியது)
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
    உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
    கறிவேப்பிலை - சிறிது
    வெங்காயம் - 1
    மிளகாய் தூய் - 1 ஸ்பூன்
    தனியா தூள் - அரை ஸ்பூன்
    பூண்டு - 10 பற்கள்
    மிளகாய் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
    தண்ணீர் - தேவையான அளவு
    புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கத்தரிக்காயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    * முதலில் தேங்காயை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கிய பின் கத்திரிக்காய் சேர்த்து வதக்க வேண்டும்.

    * பிறகு அதில் மிளகாய் தூய், தனியா தூள் சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர், புளிச்சாறு, உப்பு சேர்த்து, குறைவான தீயில் 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

    * இறுதியில் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து கிளறி, 10 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பு ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மிகவும் எளிதில் செய்யகூடிய சிம்பிளான சிக்கன் பிரை இது. இந்த ஆந்திரா மசாலா சிக்கன் பிரையை நாளை (ஞாயிற்றுகிழமை) செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - அரை கிலோ
    வெங்காயம் - 1 (1/2 + 1/2)
    ப.மிளகாய் - 4
    எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    கரம்மசாலாதூள் - அரை தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கு
    மிளகு தூள் - 1 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    அரைக்க :

    தனியா - 1 ஸ்பூன்
    பட்டை - 1 துண்டு
    கிராம்பு - 2
    பூண்டு - 5 பல் பெரியது
    இஞ்சி - 1 துண்டு
    வெங்காயம் - 1/2 (பாதி)

    செய்முறை :

    * ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.

    * சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவி வைக்கவும்.

    * கொத்தமல்லி, பாதி வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து அரை மணிநேரம் ஊற விடவும்.

    * அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மீதிஉள்ள பாதி வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் சிறிது வதங்கியதும் அரைத்த விழுதினை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.

    * அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கிய பிறகு, ஊறவைத்துள்ள சிக்கனை போட்டு வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

    * சிக்கன் நன்றாக வெந்தவுடன் மிளகு தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    * கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

    * சுவையான எளிதில் செய்யக்கூடிய ஆந்திரா மசாலா சிக்கன் பிரை ரெடி.

    * இதை சாதம், பிரியாணி போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சோயா மிகவும் பிடிக்கும். மாலையில் காபியுடன் சாப்பிட சூப்பரான சோயா 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சோயா உருண்டைகள் - 100 கிராம்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 - 2 டீஸ்பூன்
    சிக்கன் 65 மசாலா -  3 டீஸ்பூன்
    கெட்டித் தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
    சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
    மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
    எண்ணெய் - பொரிக்க தேவைக்கு.
    உப்பு - தேவைக்கு.

    செய்முறை :

    * சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் 30 நிமிடம் போட்டு நன்றாக ஊறி பெரிதாக வந்ததும் நன்கு பிழிந்து எடுக்கவும்.


    * ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த சோளாயை போட்டு அத்துடன் தயிர், சிக்கன் 65 மசாலா, சோளமாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து நன்கு பிரட்டி 15 நிமிடம் ஊறவைக்கவும்..

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்துள்ள சோயா உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

    * சூப்பரான சோயா 65 ரெடி.

    * சூடாகப் பரிமாறவும். ஸ்நாக்ஸ் போலும் சாப்பிடலாம்,

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×