என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    மதியம் செய்த சாதம் மீந்து விட்டால் மாலையில் அதில் சூப்பரான கட்லெட் செய்யலாம். இன்று சூப்பரான ஸ்நாக்ஸ் ரைஸ் கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வேகவைத்த சாதம் - 1 கப்,
    சோள மாவு - 2 டீஸ்பூன்,
    சீரகம் - 1/2 டீஸ்பூன்,
    பெருங்காய தூள் - 1/2 டீஸ்பூன்,
    வெங்காயம் - 1
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
    தனியா தூள் - 1/2 டீஸ்பூன்,
    மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்,
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்,
    சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்,
    இஞ்சி - ஒரு துண்டு,
    கொத்தமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன்,
    புதினா இலை - 2 டேபிள்ஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :

    * கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் சாதத்தை போட்டு, நன்கு பிசைந்து கொள்ளவும்.

    * அடுத்து அதில் சோள மாவு, சீரகம், பெருங்காயத்தூள், வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், கரம்மசாலா, சாட் மசாலா, இஞ்சி, கொத்தமல்லி, புதினா, உப்பு  சேர்த்து நன்கு கொட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவில் ஒரு எலுமிச்சை அளவு எடுத்து கட்லெட் போல் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    * சூப்பரான ரைஸ் கட்லெட் ரெடி.

    * தக்காளி சாஸ் மற்றும் கிரீன் சட்னியுடன் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, சாதம், புலாவ், பூரிக்கு தொட்டு கொள்ள இந்த புதினா இறால் மசாலா சூப்பராக இருக்கும். இன்று இந்த மசாலாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 200 கிராம்
    புதினா - 1 சிறிய கட்டு
    கொத்தமல்லி - 1/2 கட்டு
    இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
    வெங்காயம் - 2
    பூண்டு - 5 பற்கள்
    பச்சை மிளகாய் - 1-2
    சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
    மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
    தேங்காய் பால் - 100 மி.லி
    எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    தண்ணீர் - 1 1/2 கப்



    செய்முறை :

    * இறாலை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி நன்கு ஊற வைக்க வேண்டும்.

    * புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி பொடி, இஞ்சி, பூண்டு மற்றும் 1 வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * இன்னொரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும்.

    * அடுத்து அதில் தேங்காய் பாலை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

    * இப்போது ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 10 நிமிடம் வேக வைக்கவும்.

    * அடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, இறால் வெந்ததும், தீயை அணைத்து இறக்கி விட வேண்டும்.

    * இப்போது சுவையான புதினா இறால் மசாலா தயார்!

    * இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தக்காளி சாதம் செய்யும் போது இந்த முறையில் தேங்காய் பால் சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பாசுமதி அரிசி - 2 கப்
    நன்கு பழுத்த தக்காளி பழம் - 4
    பெரிய வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - காரத்திற்கேற்ப
    பச்சை பட்டாணி - 1/2 கப்
    தேங்காய் பால் - 1 கப்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    தனி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் ( விருப்பபட்டால்)
    உப்பு தேவையான அளவு.
    புதினா இலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு.

    தாளிக்க :

    எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்
    பட்டை - சிறிய துண்டு
    கிராம்பு - 5
    பிரிஞ்சி இலை - 3
    இஞ்சி, பூண்டு விழுது -1 டீஸ்பூன்
    முந்திரி பருப்பு சிறிதளவு.



    செய்முறை :

    * தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

    * 1 கப் அரிசிக்கு 2 கப் நீர் என்ற அளவில் சேர்த்து செய்ய வேண்டும்.

    * ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய், நெய் இரண்டையும் விட்டு நன்றாக காய்த்தும் தாளிக்க கொடுத்துள்ள மசாலா பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்த பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * அடுத்து அதில் பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி நன்றாக வதங்கியதும் பச்சை பட்டாணி, பொடியாக நறுக்கி வைத்ததில் பாதி அளவு புதினா, கொத்தமல்லி தழை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக தக்காளி பழம் குழையும் வரை வதக்கவும்.

    * அனைத்தும் சேர்ந்து நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் 1 கப் தேங்காய் பால் சேர்த்து மீதி அளவிற்கு நீரை சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.

    * இந்த நேரத்தில் அரிசியை கழுவி நீர் விட்டு ஊற வைக்கவும்.

    * நீர் நன்றாக கொதி வந்ததும் கழுவி வைத்துள்ள அரிசியை போட்டு நிதானமாக கலந்து விட்டு மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும்.

    * அரிசி பாதி வெந்து ஊற்றி இருக்கும் நீர் எல்லாம் சிறிது வற்றியதும் மீண்டும் ஒரு முறை நிதானமாக கலந்து விட்டு மேலே முன்பே நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு, மீதமுள்ள புதினா, கொத்தமல்லி தழை தூவி மறுபடியும் மூடி போட்டு அடுப்பை முழுவதும் குறைந்த தீயில் வைத்து 15 நிமிடம் வேக விட்டு அடுப்பை அணைத்து விடவும்.

    * 10 நிமிடம் கழித்து மூடியை திறந்து சாதம் உடையாமல் மெதுவாக கலந்து பரிமாறவும்.

    * சூப்பரான தக்காளி தேங்காய்பால் சாதம் ரெடி.

    * இந்த சுவையான தக்காளி தேங்காய்பால் சாதத்தை தயிர் பச்சடி (அ) சைவ, அசைவ குருமா வகைகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

    குறிப்பு:- அடுப்பை அணைத்ததும் உடனே சாதத்தை கலந்தால் உடைந்து போய் விடும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த தயிர் சேமியாவை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேமியா - அரை கப்,
    தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
    பால் - அரை கப்,
    உப்பு - தேவைக்கேற்ப,
    எண்ணெய் - 4 டீஸ்பூன்,
    கடுகு - கால் டீஸ்பூன்,
    பெருங்காயம் - 1 சிட்டிகை,
    பச்சை மிளகாய் - 1,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    கேரட் - 1,
    முந்திரிப்பருப்பு - 5,
    உலர் திராட்சை - 10,
    இஞ்சி - சிறிய துண்டு.



    செய்முறை :

    * கேரட், இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

    * கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் தயிர், பால், உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

    * சேமியாவை தண்ணீர் சேர்த்து முக்கால் பதமாக வேகவைத்தெடுக்கவும். பின் நீரை வடித்துவிட்டு, குளிர்ந்த நீரில் 2 அல்லது 3 முறை அலசி நீரை நன்றாக வடித்து விடவும்.

    * வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முந்திரி, உலர் திராட்சை இரண்டையும் சிவக்க வறுத்து தனியாக வைக்கவும்.

    * அடுத்து அதே வாணலியில் கடுகு, பெருங்காயம் தாளித்த பின் துருவிய இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    *  அடுத்து அதில் சேமியாவில் சேர்க்கவும்.

    * சேமியாவை நன்றாக கிளறிய பின்னர் அதில் கடைந்து வைத்துள்ள தயிரை சேர்த்த பின் அடுப்பை அணைக்கவும்

    * கடைசியாக கொத்தமல்லித்தழை, துருவிய கேரட், முந்திரி, உலர்திராட்சை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

    * சூப்பரான தயிர் சேமியா ரெடி.

    * இதை குளிரவைத்து வைத்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். (சற்று கெட்டியாக இருந்தால் மேலும் சற்று புளிப்பில்லாத தயிரைக் கடைந்துவிட்டு அதில் சேர்த்து பரிமாறலாம்).

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான சைடு டிஷ் ஆலு மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 3,
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய் - தேவையான அளவு,
    தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்,
    வெங்காயத்தாள் - சிறிதளவு
    சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
    கார்ன்ஃப்ளார் - 2 டீஸ்பூன்,
    பச்சரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    மஞ்சூரியன் கிரேவிக்கு:

    கறிவேப்பிலை - சிறிது,
    சின்ன வெங்காயம்  - 50 கிராம்,
    இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு.



    செய்முறை:

    * சின்ன வெங்காயம், வெங்காயத்தாள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக்கி அரைவேக்காடு பதத்துக்கு வேகவைக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார், பச்சரிசி மாவுடன் மிளகுத்தூள், உப்பு, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மாவாகக் கரைக்கவும்.

    * இந்த மாவில் உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்து நன்கு புரட்டி சூடான எண்ணெயில் பொரிக்கவும்.

    * மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், சிறிது உப்பு சேர்த்துப் புரட்டவும்.

    * அடுத்து வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு புரட்டி வதக்கவும்.

    * கடைசியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கிளறி இறக்கவும்.

    * சூப்பரான ஆலு மஞ்சூரியன் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு எலுமிச்சை சாதம் மிகவும் பிடிக்கும். இந்த சாதத்துடன் முந்திரி, வேர்க்கடலை சேர்த்து செய்யும் போது சூப்பராக இருக்கும். இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உதிராக வடித்த சாதம்- 1 கப்
    எலுமிச்சை- 3

    தாளிக்க :

    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
    உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    மிளகாய்வற்றல் - 3
    பச்சைமிளகாய் - 3
    துருவின இஞ்சி - 1 தேக்கரண்டி
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    உப்பு - சிறிதளவு
    கறிவேப்பிலை - 1 இணுக்கு
    கொத்தமல்லி - அலங்கரிக்க
    நிலக்கடலை அல்லது உடைத்த முந்திரிப்பருப்பு - ஒரு கைப்பிடி



    செய்முறை :

    * சாதத்தை விறைப்பாக வடித்துக் கொள்ளவும் (குழைய விடக் கூடாது, தண்ணீரின் அளவைக் குறைத்தாலும் நல்லெண்ணெய் விட்டாலும் ஒட்டாமல் பொல பொலவென உதிராக வரும்) வாயகன்ற பாத்திரத்தில் சாதத்தை ஆற விடவும்.

    * கொத்தமல்லி, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து வைக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வெடித்தவுடன் துருவிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.

    * மற்றொரு கடாயில் நிலக்கடலை அல்லது முந்திரியை வறுத்து இதனுடன் சேர்க்கவும்.

    * தாளித்த பொருட்களுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

    * அடுத்து ஆறின சாதத்துடன் தாளிசக்கலவையைக் கொட்டிக் கிளறவும்.

    * சாதத்தை நன்றாக கலந்து பின் கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

    * சூப்பரான எலுமிச்சை சாதம் ரெடி.

    * தொட்டுக் கொள்ள கத்திரிக்காய் துவையல், பருப்புத்துவையல், சிப்ஸ் போன்றவை அருமையான இணைகள்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஊறுகாய் பிடிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். இன்று உடனே செய்யக்கூடிய நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நெல்லிக்காய் - 10
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
    நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்றவாறு



    செய்முறை :

    * ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் முழு நெல்லிக்காயையும், மஞ்சள் தூள், சிறிது உப்பு ஆகியவற்றையும் போட்டு, 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும்.

    * சற்று நேரம் கழித்து, நெல்லிக்காயை நீரிலிருந்து எடுத்து வைக்கவும். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து அழுத்தினாலே, நெல்லிக்காய் சிறு துண்டுகளாக வந்து விடும். இல்லையென்றால், கத்தியால் நீள துண்டுகளாக்கி, நடுவிலிருக்கும் கொட்டையை நீக்கி விடவும்.

    * நெல்லிக்காய் துண்டுகளின் மீது, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றைத்தூவி நன்றாக பிசறி விடவும்.

    * வெறும் கடாயில் வெந்தயத்தைப் போட்டு இலேசாக வறுத்து எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

    * அதே வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு போட்டு தாளித்த பின் பிசறி வைத்துள்ள நெல்லிக்காயைப் போட்டு வதக்கவும். ஒரிரு நிமிடங்கள் வதக்கிய பின்னர், வெந்தயப் பொடியை தூவி நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

    * சூப்பரான உடனடி நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.

    * இது 2 அல்லது 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இன்று சிக்கனைக் கொண்டு ஃப்ரைடு ரைஸ் செய்கிறோமோ, அதேப் போன்று இறாலைக் கொண்டு எப்படி ஃப்ரைடு ரைஸ் செய்வதென்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    உதிரியாக வடித்த சாதம் - 2 கப்
    இறால் - 250 கிராம் (சிறியது)
    கேரட் - 3
    பீன்ஸ் - 10
    குடமிளகாய் - 1
    வெங்காயத்தாள் - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகு தூள் - சிறிது



    செய்முறை:

    * கேரட், பீன்ஸ், குடமிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள இறாலை போட்டு, 7-8 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பிறகு அதே வாணலியில் வெங்காயத் தாள் சேர்த்து சிறிது நேரம் வதக்கிய, பின் நறுக்கி வைத்துள்ள மீதமுள்ள காய்கறிகளைப் போட்டு நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும்.

    * பின் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கி, வறுத்து வைத்துள்ள இறாலை சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.

    * கடைசியாக அதில் சாதத்தைப் போட்டு நன்கு கிளறி இறக்கினால், சுவையான இறால் ஃப்ரைடு ரைஸ் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உகாதி பண்டிகையின் போது செய்யப்படும் ஒரு பிரபலமான ரெசிபி தான் போளி. இது மிகவும் ஈஸியான ரெசிபி என்பதால், நாளை தவறாமல் செய்த சாப்பிடுங்கள்.
    தேவையான பொருட்கள் :

    மைதா - 2 கப்
    ரவை - 2 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    வெல்லம் - 1 1/2 கப்
    தேங்காய் - 2 கப் (துருவியது)
    ஏலக்காய் - 2-3
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்
    தண்ணீர் - 1 கப்



    செய்முறை :

    * ஏலக்காயை பொடி செய்து கொள்ளவும்.

    * ஒரு பௌலில் மைதா, ரவை, மஞ்சள் தூள், பொடி செய்த ஏலக்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    * கடாயை அடுப்பில் வைத்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு, நன்கு கரைய வைக்க வேண்டும். வெல்லமானது நன்கு கரைந்ததும், அதில் துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு, பாகு சற்று கெட்டியாக வரும் போது அதனை இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    * பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக பிடித்து, ஒவ்வொரு உருண்டையின் நடுவிலும் விரலால் ஓட்டை போட்டு, அதன் நடுவே தேங்காய் வெல்ல கலவையை வைத்து, முனைகளை மூடி மீண்டும் உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

    * பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். கல்லானது சூடாவதற்குள், ஒரு பிளாஸ்டிக் கவரில் நெய் தடவி, அதில் ஒரு உருண்டையை வைத்து, கைகளால் தட்டையாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு நெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், தேங்காய் போளி ரெடி!!!

    * யுகாதி ஸ்பெஷல் தேங்காய் போளி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    யுகாதி தினத்தன்று, யுகாதி பச்சடி என்ற சிறப்பு உணவு செய்யப்படும். இதில் ஆறு வகை சுவை அடங்கியிருக்கும். இந்த பச்சடியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    மாங்காய் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
    வேப்பம்பூ - 1 டேபிள் ஸ்பூன்
    வெல்லம் - 1 கப் (தட்டியது)
    தேங்காய் துண்டுகள் - 1 டேபிள் ஸ்பூன்
    புளி சாறு - 4 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் தூள் - கால் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    தண்ணீர் - 3 கப்


     
    செய்முறை :
     
    * முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, புளி சாறு ஊற்றி, அத்துடன் மாங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.

    * மாங்காயானது நன்கு வெந்ததும், அதில் வெல்லம், மிளகாய் தூள், உப்பு, வேப்பம்பூ, தேங்காய் துண்டுகள் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

    * சூப்பரான யுகாதி ஸ்பெஷல் பச்சடி ரெடி.
     
    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    புலாவ், நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும் இந்த மட்டன் கிரீன் மசாலா. இன்று இந்த மட்டன் கிரீன் மசாலாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - 1/2 கிலோ
    புதினா - 1 கப்
    இஞ்சி  - 1 இஞ்ச்
    சீரகம் -  1 டீஸ்பூன்
    இலவங்கப்பட்டை - 2 இஞ்ச்
    வெங்காயம் - 3
    உப்பு - சுவைக்கேற்ப
    கொத்தமல்லி இலை - 2 கப்
    பச்சை மிளகாய் - காரத்திற்கு தேவையான அளவு
    பூண்டு - 6
    கிராம்பு - 7
    கசாகசா - 2 டீஸ்பூன்
    துருவிய தேங்காய் - அரை கப்
    தக்காளி - 1
    எண்ணெய் - தேவையான அளவு
    மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்



    செய்முறை :

    * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * துருவிய தேங்காய், கொத்தமல்லி இலை, புதினா சீரகம், இலவங்கப்பட்டை, கிராம்பு, சீரகம், பூண்டு, மஞ்சள்தூள். பச்சை மிளகாய், இஞ்சி, கசகசா, சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்.

    * அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்.

    * இரண்டும் நன்றாக வதங்கியதும் அரைத்த பச்சை மசாலா, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * அடுத்து அதில் மட்டன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 விசில் விடவும்.

    * விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொத்தமல்லி இலையைத் தூவி விட்டு அடுப்பை அணைக்கவும்.

    * சூப்பரான சைடு டிஷ் மட்டன் கிரீன் மசாலா ரெடி!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு, அவல் சேர்த்து போண்டா செய்து கொடுக்கலாம். இந்த அவல் போண்டாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தட்டை அவல் - ஒரு கப்
    உருளைக்கிழங்கு - ஒன்று,
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 3,
    கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு,
    கரம்மசாலா தூள் - அரை ஸ்பூன்
    தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - 200 கிராம்,
    உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தேவையான அளவு.



    செய்முறை:

    * உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    * அவலை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்த பின் தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும்.

    * வெங்காயம்,  ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவல், மசித்த உருளைக்கிழங்கு, கரம்மசாலா தூள், வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், தயிர், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.

    * கடாயை அடுப்பில் வைத்து பொரிக்க தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை போண்டா சைஸில் உருட்டி, சூடான எண்ணெயில், போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அதிகம் சிவந்து விடாமல் பொரித்தெடுக்கவும்.

    * சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் அவல் போண்டா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×