என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    சைனீஸ் உணவுகளிலேயே மஞ்சூரியன் மிகவும் சுவையாக இருக்கும். இப்போது காளானை வைத்து மஞ்சூரியனை எப்படி சுவையான ருசியில் செய்வதென்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பட்டன் காளான் - 250 கிராம்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    சோள மாவு - 4-5 டேபிள் ஸ்பூன்
    மைதா - 2 டேபிள் ஸ்பூன்
    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    தண்ணீர் - 2 கப்
    எண்ணெய் - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
    வெங்காயம் - 1
    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
    சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
    தக்காளி கெட்சப் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:

    * வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

    * காளானை நன்கு கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு துணியில் மேல் நீர் உறிஞ்சுமாறு வைக்க வேண்டும்.

    * ஒரு பௌலில் சோள மாவு, மைதா, இஞ்சி பூண்டு பேஸ்ட், சோயா சாஸ், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஓரளவு கெட்டியான பதத்தில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    * கழுவி தனியாக வைத்துள்ள காளானை, அந்த கலவையில் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த காளானைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * மற்றொரு அடுப்பில் வேறு வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.

    * பின்னர் அதில் சோயா சாஸ், தக்காளி கெட்சப், சில்லி சாஸ், உப்பு போட்டு சிறிது வதக்கிய பின்னர் பொரித்து வைத்துள்ள காளான் துண்டுகளை போட்டு நன்கு மற்றொரு 2 நிமிடம் கிளறி, இறக்கி விட வேண்டும்.

    * இப்போது சுவையான காளான மஞ்சூரியன் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆந்திராவில் இந்த வெந்தய மசாலா சாதம் மிகவும் பிரபலம். ஸ்பைசியாக சூப்பராக இருக்கும். இந்த சாதத்தை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 300 கிராம்
    வெந்தயம் - 2 டீஸ்பூன்
    கீறிய பச்சை மிளகாய் - 2
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 3
    பூண்டு - 10 பல்
    சின்ன வெங்காயம் - 15
    சோம்பு - ஒரு டீஸ்பூன்
    தேங்காய் - ஒரு மூடி
    சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - சிறிதளவு
    மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
    கடுகு - அரை டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்



    செய்முறை :

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

    * தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.

    * சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாகத் தட்டி வைக்கவும்.

    * அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும்.

    * பிறகு சோம்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வெந்ததும் சின்ன வெங்காயம் சேர்த்து சுருள வரும் வரை வதக்கவும்.

    * இத்துடன் சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.

    * இத்துடன் தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீரை சமஅளவில் சேர்த்து ஊற்றவும்.

    * கொதி வந்தவுடன் ஊறவைத்த அரிசியைச் சேர்த்து வேக விடவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

    * சூப்பரான வெந்தய மசாலா சாதம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் இட்லி சாப்பிட மறுப்பார்கள். அவர்களுக்கு இந்த வகையில் இட்லி வைத்து டிக்கா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மினி இட்லி - பத்து
    வெங்காயம் - ஒன்று
    தயிர் - இரண்டு டேபிள் ஸ்பூன்
    மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
    தனியா தூள் - கால் டீஸ்பூன்
    கரம் மசாலா - கால் டீஸ்பூன்
    சர்க்கரை - கால் டீஸ்பூன்
    உப்பு - ஒரு சிட்டிகை
    இடித்த பூண்டு - இரண்டு பல்
    எண்ணெய் - தேவையான அளவு
    குடமிளகாய் - ஒன்று
    கபாப் ஸ்டிக் - இரண்டு.



    செய்முறை :

    * வெங்காயம், குடமிளகாயை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    * ஒரு கிண்ணத்தில் தயிர், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, இடித்த பூண்டு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். பிறகு, அதில் இட்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    * தவாவில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி காய்ந்ததும் கபாப் ஸ்டிக் எடுத்து அதில் குடமிளகாய் ஒரு துண்டு, இட்லி இரண்டு, வெங்காயம் ஒன்று, இட்லி இரண்டு, குடமிளகாய் ஒன்று ஆகியவற்றை ஒவ்வொன்றாக அடுத்தடுத்து குத்தி தவாவில் வைத்து சிறு தீயில் வைத்து திருப்பி போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்து பரிமாறவும்.

    * சூப்பரான இட்லி டிக்கா ரெடி.

    * மினி இட்லிக்கு பதிலாக இட்லியை துண்டுகளாகவும் வெட்டி கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாம்பார் சாதம், புலாவ், சப்பாத்திக்கு தொட்டு கொள்ள இஞ்சி பெப்பர் சிக்கன் சூப்பராக இருக்கும். இன்று இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 1/2 கிலோ
    வெங்காயம் - 1
    கொத்தமல்லி - சிறிது
    இஞ்சி பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
    மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    சோம்பு - 1 டீஸ்பூன்
    பட்டை - 2 இன்ச்
    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
    வினிகர் - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்



    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சோம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின்னர் அதில் இஞ்சி பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

    * அடுத்து அதில் சிக்கனைப் போட்டு, உப்பு சிறிது தூசி பிரட்டி 20 நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

    * பிறகு மூடியைத் திறந்து, சிக்கனை பிரட்டி, அத்துடன் சோயா சாஸ் மற்றும் வினிகர் சேர்த்து நன்கு கிளறி, தீயை அதிகரித்து, தண்ணீர் முற்றிலும் வற்றும் வரை வதக்கவும்.

    * தண்ணீர் வற்றி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கவும்.

    * காரசாரமான இஞ்சி பெப்பர் சிக்கன் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அசைவ உணவுகளைப் போன்றே சுவையைக் கொடுக்கும் காளானுக்கும் நிறைய பிரியர்கள் உள்ளனர். இன்று காளான், உருளைக்கிழங்கை பயன்படுத்தி பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    காளான் - 2 கப்
    உருளைக்கிழங்கு - 2
    வெங்காயம் - 1 கப்
    கிராம்பு - 2
    பூண்டு - 2
    எண்ணெய் - தேவைக்கு
    மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:

    * காளானை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி நன்றாக கழுவி வைக்கவும்.

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பூண்டை தண்டி வைக்கவும்.

    * ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, கிராம்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிளகு தூள் சேர்த்து கிளறி, நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து வதக்க வேண்டும்.

    * உருளைக்கிழங்கு வேகும் அளவு சிறிது தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

    * 10 நிமிடம் ஆன பின்பு அத்துடன் காளானை போட்டு கிளறி, மூடி வைத்து 8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

    * காளான் மற்றும் உருளைக்கிழங்கானது நன்கு வெந்ததும், அதில் உப்பு, கொத்தமல்லி தழை தூவி நன்கு கிளறி இறக்கவும்.

    * சுவையான காளான் உருளைக்கிழங்கு ஃபிரை ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சைவ உணவாளர்களுக்கு காளான் ஒரு அருமையான உணவுப் பொருள். அத்தகைய காளானைக் கொண்டு மதியம் உணவு செய்ய நினைத்தால், காளான சாதம் செய்யுங்கள்.
    தேவையான பொருட்கள்:

    சாதம் - 2 கப்
    வெங்காயம் - 2
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 1
    மிளகு தூள் - 1 ஸ்பூன்
    காளான் - 200 கிராம்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை:

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * காளானை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

    * பின் தீயை குறைவில் வைத்து, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் காளானை போட்டு கிளறி, மிளகு தூள், சிறிது தண்ணீர் ஊற்றி, காளானை வேக வைக்க வேண்டும்.

    * காளான் நன்கு வெந்து, தண்ணீர் சுண்டியதும், அதில் சாதத்தைப் போட்டு கிளறி, அடுப்பை மிதமான தீயில் 5 நிமிடம் மூடி வைக்கவும்.

    * அடுத்து கொத்தமல்லி தழை தூவி நன்றாக கிளறி பரிமாறவும்.

    * சுவையான காளான் சாதம் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினம் குழந்தைகளை சாப்பிட வைக்க என்ன டிபன் செய்வது என்று கவலைபடும் தாய்மார்களுக்கும் இதோ ஈசியான புட்டு பால்ஸ் தயாரித்து கொடுங்கள்.
    தேவையான பொருட்கள் :

    சிகப்பரிசி அல்லது பச்சரிசி புட்டு மாவு -  ஒரு கப்
    தேங்காய் துருவல்  - அரை கப்
    சர்க்கரை - அரை கப்
    நெய் - இரண்டு தேக்கரண்டி
    வாழைப்பழம் - 1



    செய்முறை :

    * ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரில் சிட்டிக்கை உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தெளித்து உதிரியாக மாவை விறவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    * பிறகு இட்லி பானையில் ஈர துணியை விரித்து மாவை கட்டியில்லாமல் உதிரியாக வைத்து 15 நிமிட அவித்து வேக வைத்து எடுக்கவும்.

    * வாயகன்ற பாத்திரத்தில் வெந்த புட்டு மாவை கொட்டி அதில் சர்க்கரை, தேங்காய்ப்பூ உருக்கிய நெய், வாழை பழம் சேர்த்து நன்றாக விரவி உருண்டைகளாக பிடித்து தேவைக்கு மேலே தேங்காய் பூ தூவவும்.

    * குழந்தைகளுக்கு இப்படி ஈசியாக உருண்டை பிடித்து வைத்தால் சாப்பிட இலகுவாக இருக்கும்.

    * சூப்பரான புட்டு பால்ஸ்/லட்டு ரெடி.



    குறிப்பு :

    * பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு, ஆபிஸ்க்கு டிபனுக்கு இப்படி செய்து எடுத்து செல்லலாம். ஆனால் இந்த புட்டு கை கொண்டு விரவி வைப்பதால் காலையில் சீக்கிரமாக சாப்பிட்டு விட வேண்டும்.

    * இதை அரிசி, ராகி (கேழ்வரகு), ரவை, சிறுதானியங்களிலும் தயாரிக்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ராம நவமியான இன்று ராமருக்கு நைவேத்தியமாக ரவை - தேங்காய் பாயாசம் செய்து படைக்கலாம். இந்த பாயாசத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    ரவை - 1 கப்
    வெல்லம் - 1 1/2 கப் (தட்டியது)
    தேங்காய் - 1 கப் (துருவியது)
    பாதாம் - 10
    தண்ணீர் - 3 கப்
    முந்திரி - தேவைக்கு (நெய்யில் வறுத்தது)



    செய்முறை:

    * முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும்.

    * வெல்லத்தை நன்றாக பொடித்து வைக்கவும்.

    * தேங்காய் மற்றும் பாதாமை மிக்ஸியில் போட்டு, ஓரளவு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கோதுமை ரவையை போட்டு லேசான பொன்னிறத்தில் வறுத்து, தனியாக தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.

    * வறுத்த ரவையை ஒரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    * ரவை நன்கு கொதித்ததும், அதில் வெல்லத்தைப் போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.

    * வெல்லமானது கரைந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் பாதாமை போட்டு கிளறி, ஒரு கொதி விட்டு இறக்கி, அதன் மேல் முந்திரியை தூவி இறக்கவும்.

    * சூப்பரான ரவை - தேங்காய் பாயாசம் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் சாப்பிட இந்த மீன் மிளகு மசாலா சூப்பராக இருக்கும். இன்று இந்த மீன் மிளகு மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துண்டு மீன் - அரை கிலோ
    வெங்காயம் - 2௦௦ கிராம்
    பச்சை மிளகாய் - நான்கு
    இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    மிளகு தூள் - நான்கு டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - ஐந்து
    கொத்தமல்லி இலை - ஒரு கப்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    உப்பு - தேவைகேற்ப
    எண்ணெய் - தேவைகேற்ப
    கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், போதுமான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

    * அனைத்தும் ஒரளவு வதங்கியதும் மீன் சேர்த்து, உடையாமல் வேகும் வரை அவ்வப்போது கிளறி, புரட்டி விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வைத்து வேக விடவும்.

    * மீன் வெந்ததும், மிளகு துளை சேர்த்து கிளறவும்.

    * கடைசியாக கொத்தமல்லி இலையை சேர்த்து கிளறி இறக்கவும்.

    * மீன் மிளகு மசாலா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெயில் காலத்தில் மோர் குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இன்று உருளைக்கிழங்கை சேர்த்து மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தனியா - 2 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
    அரிசி - 1 தேக்கரண்டி
    தண்ணீர் - ¼ கப்
    உருளைக்கிழங்கு - 4
    தயிர் - 1½ கோப்பை
    கொத்தமல்லை தழை - சிறிதளவு
    நீர் - ½ கப்
    துருவிய தேங்காய் - ¼ கப்
    உப்பு - சுவைக்கு

    தாளிக்க :

    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    வெந்தயம் - ½ தேக்கரண்டி
    கறிவேப்பிலை சிறிதளவு
    ஓமம் - ½ தேக்கரண்டி



    செய்முறை :

    * உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்.

    * கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    * தயிரில் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கடைந்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் தனியா, சீரகம், மிளகு, ப.மிளகாய், இஞ்சி, கடலைப்பருப்பு, அரிசிபோட்டு அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து தேங்காய் சோர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை போட்டு நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * அடுத்து அதில் கடைந்த மோர் ஊற்றி அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பிக்கும் போது உப்பை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

    * மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், ஓமம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதை மோர் கலவையில் கொட்டவும்.

    * கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இன்று இரவு ஸ்பெஷலாக வித்தியாசமாக ஏதாவது செய்து சாப்பிட வேண்டும் போல் உள்ளதா? சரி அப்படியானால் உருளைக்கிழங்கு மசாலா பூரி செய்து சாப்பிடுங்கள்.
    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - ஒரு கப்
    கோதுமை மாவு - ஒரு கப்
    உருளைக்கிழங்கு - 2
    தயிர் - அரை கப்
    மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
    மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
    ஓமம் - அரை தேக்கரண்டி
    சீரகம் - ஒரு தேக்கரண்டி
    கொத்தமல்லி - சிறிதளவு
    கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு


     
    செய்முறை  :

    * உருளைக்கிழங்கை வேகவைத்து மிக்சியில் போட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.

    * கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, கோதுமை மாவு, உப்பு, உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, தயிர், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், ஓமம், சீரகம், கரம்மசாலா தூள் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.

    * இந்த மாவுடன் சிறிது எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பூரி மாவாக பிசைந்து அரை மணிநேரம் ஊற விடவும்.

    * பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து சிறு உருண்டையளவு மாவை எடுத்து தேய்த்து பூரியாக திரட்டவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்த மாவை போட்டு பூரியை பொரித்து எடுக்கவும்.

    * சுவையான உருளைக்கிழங்கு மசாலா பூரி தயார்.

    * இதற்கு தொட்டு கொள்ள எதுவும் தேவையில்லை.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு காய்கறிகள் சேர்த்து சத்தான வடை செய்து கொடுக்கலாம். இன்று இந்த வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உளுந்தம்பருப்பு - 200 கிராம்
    கடலைப்பருப்பு - 100 கிராம்
    கேரட் துருவல் - ஒரு கப்
    கோஸ் பொடியாக நறுக்கியது - ஒரு கப்
    பச்சைப் பட்டாணி - ஒரு கப்
    புதினா - சிறிதளவு
    சோம்பு - 1/2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    எண்ணெய் - 250 மில்லி
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    * உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு இரண்டையும் 2 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து, பச்சை மிளகாய் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு, கேரட் துருவல், கோஸ், சோம்பு, புதினா, பட்டாணி சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறுசிறு உருண்டைகளாக செய்து வடைகளாக தட்டிப் போட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

    * சூப்பரான காய்கறி வடை ரெடி.

    குறிப்பு:

    நாம் விரும்பும் காய்களை பொடியாக நறுக்கி சேர்த்து வடை செய்யலாம். இந்த வடைக்கு தக்காளி சாஸ் சேர்த்து சாப்பிட சுவை அருமையாக இருக்கும். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×