என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பொது மருத்துவம்
`சயாட்டிகா' பிரச்சினைக்கான சித்தமருத்துவ தீர்வு
- சித்தமருத்துவத்தில் பேராசன நரம்பு தாபிதம்' என்று அழைக்கப்படுகிறது.
- சயாட்டிக் நரம்பு என்பது நம் உடலிலேயே நீளமான நரம்பாகும்.
சயாட்டிகா' என்பது சித்தமருத்துவத்தில் பேராசன நரம்பு தாபிதம்' என்று அழைக்கப்படுகிறது. சயாட்டிக் நரம்பு என்பது நம் உடலிலேயே நீளமான நரம்பாகும். இது இடுப்பு தண்டுவடத்தில் எல் 4 பகுதியில் ஆரம்பித்து பிட்டம், தொடையின் பின்புறம், முழங்காலுக்கு பின்புறம் தசைநார்களுக்கு இடையே செல்கின்ற நரம்பு ஆகும். இது வலது பக்கம் மற்றும் இடது பக்கம் என இரண்டு நரம்புகளாகும்.
சயாட்டிகா நோய்க்கான காரணங்கள்
ஹெர்னியேட்டட் இன் டர்வெர்டெபிரல் டிஸ்க்:
முதுகெலும்புகள் ஒன்றோ டொன்று உராய்வதை தடுப்பதற்கு எலும்புகளுக்கு இடையில் ஒரு தட்டையான மெத்தை போன்ற வட்டு இருக்கும். அதன் இடத்திலிருந்து இந்த வட்டு விலகி வெளியே வரும் போது, அருகிலுள்ள பகுதிகளில் அழுத்தத்தை கொடுக்கிறது. குறிப்பாக முதுகெலும்பின் நெடுவரிசையில் இருந்து உருவாகும் நரம்புகள் அழுத்தப்படுகிறது.
ஸ்பைனல் ஸ்டெனோசிஸ்:
முதுகெலும்பு பாதையில் ஏற்படும் சுருக்கம், இடுப்பில் ஏற்படும் விபத்துகள், காயங்கள், எலும்புமுறிவு அல்லது கட்டிகள், கர்ப்ப காலத்தில் ஏற்படும் எலும்புகளின் அசைவால் கூட இது ஏற்படும். மேற்கூறிய காரணங்களால் சயாட்டிக் நரம்பு அழற்சி அடைந்து வலி ஏற்படுகிறது.
சயாட்டிகாவின் அறிகுறிகள்
பிட்டம் பகுதியில் ஏற்படுகின்ற வலி தொடையின் பின்புறம், முழங்கால் மற்றும் காலின் பின்புறம் வரை நீடிக்கும். பாதிக்கப்பட்ட காலில் பலவீனம், கூச்ச உணர்வு, உணர்வின்மை மற்றும் எரியும் உணர்வு காணப்படும். இரவில் வலி அதிகமாக இருக்கும்.
சித்த மருத்துவம்
இந்த நோய்க்கு கீழ்கண்ட மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுக்கலாம்.
* அமுக்கரா சூரணம் 1 கிராம், சண்டமாருதம் 100 மி.கி. முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி., குங்குலிய பற்பம் 200 மி.கி. ஆகியவைகளை மூன்று வேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
* ரச கந்தி மெழுகு மாத்திரையை காலை ஒன்று, இரவு ஒன்று வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.
* சிவப்பு குங்குலியத்தைலம், விடமுட்டி தைலம், வாத கேசரி தைலம், வாத நாராயணன் தைலம் இவைகளில் ஒன்றை வலியுள்ள இடங்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.
உடற்பயிற்சி
கால்களை நன்றாக நீட்டி தரையில் படுத்துக்கொண்டு கால்களை நெஞ்சை நோக்கி உயர்த்த வேண்டும். இவ்வாறு சிறிது நேரம் செய்து வர வேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்