மலச்சிக்கல் பிரச்சனையா? - பாட்டி வைத்தியம்

சூடான பால் மூலநோயுடன் தொடர்புடைய அசவுரியத்தை குறைக்கக்கூடும். நார்ச்சத்து மற்றும் திரவங்கள் நிறைந்த சீரான உணவுப்பழக்கத்தை பின்பற்றுவதும் முக்கியமானது.
மலச்சிக்கல் பிரச்சனையா? - பாட்டி வைத்தியம்
Published on

தினமும் இரவில் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு பால் அருந்தும் வழக்கத்தை தொடருவதன் மூலம் மலச்சிக்கல் வராமல் தடுக்கலாம். வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், மலச்சிக்கலை தடுப்பதற்கும் உதவும்.

சூடான பால் மூலநோயுடன் தொடர்புடைய அசவுரியத்தை குறைக்கக்கூடும். இருப்பினும் நார்ச்சத்து மற்றும் திரவங்கள் நிறைந்த சீரான உணவுப்பழக்கத்தை பின்பற்றுவதும் முக்கியமானது.

மலச்சிக்கலுடன் வயிற்றுவலி இருந்தால், கடுக்காய்த் தூளுடன் சிறிது இஞ்சியை கலந்து உட்கொள்ள வயிற்று வலி குணமடையும். மாமரத்தின் பட்டையை இடித்துச் சாறு எடுத்துத் தேன் கலந்து குடித்து வர ரத்த பேதி நிற்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com