search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    எந்த காய்கறியை எப்படி பார்த்து வாங்க வேண்டும்
    X
    எந்த காய்கறியை எப்படி பார்த்து வாங்க வேண்டும்

    எந்த காய்கறியை எப்படி பார்த்து வாங்க வேண்டும்

    முருங்கைக்காய் பச்சை நிறமாக இருக்கவேண்டும். அதிக கனமாகவும், கெட்டியாகவும் இருக்கக்கூடாது. வளையவேண்டும். முற்றிய முருங்கைக்காயை வளைத்தால் முறிந்துவிடும்.
    தேங்காயை கையில் எடுத்து குலுக்கிப்பாருங்கள். உள்ளே தண்ணீர் இருக்கவேண்டும். தேங்காயின் கண்கள் இருக்கும் பகுதியை லேசாக அழுத்திப்பாருங்கள். அமுங்காமல் இருந்தால் நல்ல தேங்காய்.

    முட்டைக்கோஸ் கெட்டியாக, பளிச்சென்று புதிதாக இருக்கவேண்டும்.

    உருளைக்கிழங்கு பழையது என்றால் அமுங்கும். புதியது கெட்டியாக இருக்கும். அமுக்கிப்பார்த்து வாங்குங்கள்.

    கீரைத்தண்டுவை ஒடித்துப்பாருங்கள். வளையாமல் ஒடிந்துவிடவேண்டும்.

    முள்ளங்கியில் வேர்கள் தோன்றாமல் இருப்பது நல்லது. நிறமும் நம்மை கவரும்படி அமைந்திருக்கவேண்டும்.

    பூண்டுவை கையில் எடுத்து அழுத்திப்பாருங்கள். கனமாக, கெட்டியாக இருப்பதே சிறந்தது.

    கருணைக்கிழங்கு நல்லதாக பார்த்து தேர்ந்தெடுத்து வாங்கிவந்து, இரண்டு நாட்கள் வீட்டில் வைத்துவிட்டு சமைக்க பயன்படுத்துங்கள்.

    கோவக்காய் சீராக, பளிச்சென்று இருக்கவேண்டும். அமுங்கினால் வாடிவிட்டதாக அர்த்தம். வாடிப்போனதை வாங்கக்கூடாது.

    வெண்டைக்காய் இளசாக இருக்கவேண்டும். நுனியை லேசாக அழுத்தினாலே ஒடிந்துவிடும்.

    பீன்ஸ், அவரையை கையில் எடுத்து பார்த்தாலே நாரை எளிதாக உரித்தெடுக்க முடியுமா என்பது தெரிந்துவிடும். எளிதாக உரிக்கும் விதத்தில் இருக்கவேண்டும்.

    கொத்தவரை, வெண்டைக்காய் மாதிரிதான் வளையாமல் முறியவேண்டும்.

    வாழைத்தண்டு அதிக தண்ணீர்தன்மையோடு வாடாமல் வெள்ளை நிறத்தில் பளிச்சென்று இருப்பது அவசியம்.

    சேனைக்கிழங்கு அதிக சிவப்பாக இல்லாமல் மஞ்சள் நிறம் கலந்திருப்பதை பார்த்துவாங்குங்கள். அதிக சிவப்பை குழந்தைகள் சாப்பிட்டால் நாக்கு அரிப்பதாக சொல்வார்கள்.

    வெங்காயம் சிவப்பு நிறத்தில் இருப்பது நல்லது. வாடலாக, அழுகலாக இருந்தால் நிறம் மாறும். பொதுவாக கருநீலநிறத்தில் இருப்பது அழுகலின் அடையாளம்.

    முருங்கைக்காய் பச்சை நிறமாக இருக்கவேண்டும். அதிக கனமாகவும், கெட்டியாகவும் இருக்கக்கூடாது. வளையவேண்டும். முற்றிய முருங்கைக்காயை வளைத்தால் முறிந்துவிடும்.

    புடலையில் நார் இருக்கக்கூடாது. எளிதாக உடையும் விதத்தில் இருந்தால் நல்லது.

    கேரட் இப்போதே பச்சையாக கடித்துவிடலாமா? என்று தோன்றும் விதத்தில் பளிச்சென்ற நிறத்துடன் மீடியமான சைசில் இருக்கவேண்டும்.

    பாகற்காய் சிறியதுமில்லாமல், பெரியதுமில்லாமல் நடுத்தரமாக, நல்ல நிறமாக, அமுங்காமல் இருக்கவேண்டும்.

    வாழைப்பூ இதழை தூக்கிப்பார்த்தால், கறுப்பாக பீலிகள் இருந்தால் நல்லதல்ல. கெட்டியாக, இளசாக இருக்கவேண்டும். முற்றல் அதிக துவர்ப்பாகிவிடும்.
    Next Story
    ×