search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாம்பழம்
    X
    மாம்பழம்

    மாம்பழம்: ருசிகரமான ‘பத்து’

    மாம்பழங்கள் சியானவை என்பது எல்லோருக்கும் தெரியும். மாம்பழங்களை பற்றிய ருசிகரமான தகவல்களும் ஏராளமாக இருக்கின்றன. அவைகளில் முதன்மையான பத்து விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
    மாம்பழங்கள் சியானவை என்பது எல்லோருக்கும் தெரியும். மாம்பழங்களை பற்றிய ருசிகரமான தகவல்களும் ஏராளமாக இருக்கின்றன. அவைகளில் முதன்மையான பத்து விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

    1. தித்திப்புச் சுவையுடன் கூடவே சத்துகளையும் தனக்குள் அள்ளி அடக்கி வைத்துள்ளது மாம்பழம். ஒவ்வொரு மாம்பழத்திலும் 81 சதவீதம் தண்ணீர், 0.4 சதவீதம் கொழுப்பு, 0.6 சதவீதம் புரதம், 0.8 சதவீதம் நார்ச்சத்து, 17 சதவீதம் கார்போஹைட்ரேட் உள்ளன. நமக்குத் தேவையான முக்கிய தாதுப்பொருட்களான பொட்டாசியம், மக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், கந்தகம் ஆகியவை மாம்பழத்தில் நிறைந்துள்ளன.

    2. மாம்பழம் என்றால், மல்கோவா, அல்போன்சா, பங்கனப்பள்ளி, நீலம், சிந்தூரா என்று நமக்குச் சில வகைகள்தான் தெரியும். ஆனால் மாம் பழத்தில் சுமார் 1000 ரகங்கள் இருக்கின்றன. மாம்பழத்தில் பல்வேறு ரகங்களை உருவாக்கும் விவசாய முறைகளை அறிமுகப்படுத்தியவர்கள், போர்த்துக்கீசியர்கள்.

    3. உலக மாம்பழ உற்பத்தியில் 42.06 சதவீதப் பங்கு இந்தியாவுக்குத்தான். உலகில் மாம்பழம் விளையும் பரப்பளவில் சுமார் 50 சதவீதம் இந்தியாவில்தான் இருக்கிறது. நம் நாட்டிலேயே அதிகளவில் மாம்பழத்தை விளைவிப்பது, ஆந்திரப் பிரதேசம். உலகில் உற்பத்தி செய்யப்படும் வெப்பமண்டலப் பழங்களில் 50 சதவீத அளவைப் பிடித்திருப்பது மாம்பழம்தான்.

    4. மாம்பழத்தின் தாயகம் இந்தியாதான். ஆனால் இன்று உலகில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் மாம் பழம் விளைவிக்கப்படுகிறது. இந்தியா தவிர பிரேசில், சீனா, எகிப்து, இந்தோனேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் அதிகளவில் மாம்பழம் விளைகிறது.

    5. நமது தேசியப் பழம், மாம்பழம்தான். பாகிஸ்தான், பிலிப்பைன்சின் தேசியப் பழமும் மாம்பழம்தான். வங்காளதேசத்தின் தேசிய மரம், மாமரமாகும்.

    6. மாம்பழத்தை முதன் முதலில் இந்தியாவுக்கு வெளியே கொண்டு சென்று அறிமுகப்படுத்தியவர், சீன யாத்ரீகர் யுவான் சுவாங். 16-ம் நூற்றாண்டில் பாரசீக வியா பாரிகள் இந்தியாவில் இருந்து மாம்பழத்தை கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்காவுக்குக் கொண்டு சென்றனர். 19-ம் நூற்றாண்டில் மெக்சிகோவுக்கும், அமெரிக்காவுக்கும் மாம்பழம் சென்றது.

    7. முகலாயப் பேரரசர் அக்பர், மாம்பழப் பிரியர். இவர் கி.பி. 1590-ல் தனது ‘அயினி அக்பரி’ நூலில் மாம்பழங்களின் தரம், சுவை குறித்து விரிவாக எழுதியுள்ளார். அக்பருக்குச் சொந்தமாக, ஒரு லட்சம் மாமரங்கள் கொண்ட ஒரு பெருந்தோப்பு இருந் ததாம்.

    8. உத்தரபிரதேச மாநிலத் தலை நகர் லக்னோவில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள, மாலிகாபாத் கிராமம்தான் இந்தியாவின் மாம்பழத் தலைநகர் எனப்படுகிறது. இங்கு சுமார் 20 கிலோமீட்டர் சுற்றளவில் 700 வகை மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு சீசனிலும் நடக்கும் மாம்பழ வியாபாரம், பல நூறுகோடி.

    9. வட இந்தியாவில், மாம்பழ ரகங்களிலேயே சிறந்தது என்று யாரைக் கேட்டாலும், அவர்கள் கூறுவது ‘வதசேரி’யைத்தான். இதன் பூர் வீகம், லக்னோவில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள தசேரி கிராமம். இங்குள்ள ஒரு தசேரி மாமரம் 300 வயதானது என்கிறார்கள். மனிதர் யாரும் நட்டு வளர்க்காமல், தானாக முளைத்தது என்றும் இதனைச் சொல்கிறார்கள்.

    10. மாலிகாபாத் வீதிகளில் நடந்தாலே மாம்பழ வாசம்தான் வீசும். இங்கு பிறக்கும் ஒவ்வொருவரும் இயற்கையாகவே மாம்பழ விவசாயி ஆகிவிடுகிறார்கள். ஆனாலும் அங்கு வசிக்கும் பெரியவர் கலீமுல்லா கானைத்தான் ‘மாம்பழ மகாராஜா’ என்கிறார்கள். மாம்பழம் தொடர்பான அத்தனை விஷயங்களையும், நுணுக்கங்களையும் அறிந்தவர். கலீமுல்லா கானின் அப்துல்லா தோட்டம், ஒரு பெரிய மாம்பழ சாம்ராஜ்ஜியம். குறிப்பாக இங்குள்ள ஒரு 90 வயதான மாமஇரத்தில் 300 வெவ்வேறு வகை மாம்பழங்களை காய்க்கச் செய்துள்ளார் கலீமுல்லா கான். இதற்காக, லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இம்மாமரம் இடம்பெற்றுள்ளது. மாலிகாபாத்தில் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு மாம்பழ விவசாயியும், 15 ஆயிரம் பெட்டி மாம்பழங்களை உற்பத்தி செய்கிறார். மாலிகாபாத்தில் இருந்து இந்தியா முழுமைக்கும், வெளிநாடுகளுக்கும் மாம்பழம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. டெல்லிக்கு மட்டும் 100 லாரி லோடு செல்கிறதாம்.
    Next Story
    ×