என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பரிசோதனையில் அக்கறை இல்லாத ஆண்கள்
Byமாலை மலர்4 Aug 2020 7:49 AM GMT (Updated: 4 Aug 2020 7:49 AM GMT)
உடல் நலம் குறித்து பரிசோதனை செய்வதில் ஆண்களிடம் ஆர்வமின்மை நிலவுகிறது. வறுமை, அலட்சியம், நேரமின்மை போன்ற காரணங்களால் பலர் அதற்கான பரிசோதனையை செய்து கொள்வதில்லை.
இலவச பரிசோதனை மையங்கள் இருந்தும் அவற்றை பயன்படுத்த ஆண்கள் போதிய ஆர்வம் காட்டுவதில்லை என மருத்துவத் துறை புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. சுகாதார சீர்கேடு, சுற்றுச்சூழல் பாதிப்பு, பருவநிலை மாற்றம், உடல்நலத்தில் அக்கறையின்மை போன்ற பல காரணங்களால் மனிதர்களுக்கு தொற்றும், தொற்றாத நோய்கள் ஏற்படுகின்றன. ஆரம்ப கட்டத்திலேயே இவற்றை கண்டறிந்தால் நோய்களை குணப்படுத்திவிட முடியும். ஆனால் வறுமை, அலட்சியம், நேரமின்மை போன்ற காரணங்களால் பலர் அதற்கான பரிசோதனையை செய்து கொள்வதில்லை.
இவற்றை தவிர்ப்பதற்காக தமிழக அரசு சார்பில் தேர்வு செய்யப்பட்ட சில மருத்துவமனைகளில் தொற்றா நோய்களுக்கான இலவச பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் ஆண், பெண் என இருபாலருக்கும் ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி, கொழுப்பு அளவு, இ.சி.ஜி., சிறுநீரகம் தொடர்பான பரிசோதனைகள் போன்றவை இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல் பெண்களுக்கு மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய்க்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த இலவச பரிசோதனைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக பெண்களைக்காட்டிலும் ஆண்கள் இந்த விஷயத்தில் மிகவும் மெத்தனமாக இருப்பதாக மருத்துவத்துறை புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது. உடல் நலம் குறித்து பரிசோதனை செய்வதில் ஆண்களிடம் ஆர்வமின்மை நிலவுகிறது. பெண்களை அழைத்துவரும் ஆண்கள், பெண்களை பரிசோதனை மையத்துக்குள் அனுப்பி வைத்துவிட்டு வீணாக வெளியே காத்திருக்கின்றனர். அந்த நேரத்தில் அவர்களும்கூட, தங்களுக்கான பரிசோதனைகளை செய்து கொள்ளலாம். அதில் ஏதேனும் நோய் இருப்பது கண்டறியப்பட்டால் மருந்து, மாத்திரைகள் மற்றும் சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது.
இவற்றை தவிர்ப்பதற்காக தமிழக அரசு சார்பில் தேர்வு செய்யப்பட்ட சில மருத்துவமனைகளில் தொற்றா நோய்களுக்கான இலவச பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் ஆண், பெண் என இருபாலருக்கும் ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி, கொழுப்பு அளவு, இ.சி.ஜி., சிறுநீரகம் தொடர்பான பரிசோதனைகள் போன்றவை இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல் பெண்களுக்கு மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய்க்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த இலவச பரிசோதனைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக பெண்களைக்காட்டிலும் ஆண்கள் இந்த விஷயத்தில் மிகவும் மெத்தனமாக இருப்பதாக மருத்துவத்துறை புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது. உடல் நலம் குறித்து பரிசோதனை செய்வதில் ஆண்களிடம் ஆர்வமின்மை நிலவுகிறது. பெண்களை அழைத்துவரும் ஆண்கள், பெண்களை பரிசோதனை மையத்துக்குள் அனுப்பி வைத்துவிட்டு வீணாக வெளியே காத்திருக்கின்றனர். அந்த நேரத்தில் அவர்களும்கூட, தங்களுக்கான பரிசோதனைகளை செய்து கொள்ளலாம். அதில் ஏதேனும் நோய் இருப்பது கண்டறியப்பட்டால் மருந்து, மாத்திரைகள் மற்றும் சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X