search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பருப்பு வகை
    X
    பருப்பு வகை

    இரவில் பருப்பு வகை உணவை சாப்பிடலாமா?

    பருப்பு வகைகளில் அதிகமான கலோரிகள் இருப்பதால் இரவில் பருப்பு வகைகளை சாப்பிடலாமா என்று பலருக்கும் குழப்பங்கள் நீண்டுகொண்டே இருக்கிறது. அதற்கான விடையை இங்கே பார்க்கலாம்.
    உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பலவிதமான உணவு கட்டுப்பாட்டில் இருந்து வருவார்கள். அவர்களுக்கு சரியான நேரங்களில் சரியான உணவை சாப்பிட்டு வர வேண்டிய என்ற ஒரு கட்டாயம் இருந்துகொண்டே இருக்கும். அந்த சூழலில் உள்ளவர்கள் இரவு நேரங்களில் எந்த வகையான உணவை சாப்பிடலாம் என்று குழப்பத்துடன் இருக்கிறார்கள். பலரும் இரவு நேர உணவுகளை தவிர்த்து வருகிறார்கள். இரவு நேரங்களில் உணவு சாப்பிட்டால் சில பேருக்கு சரியான செரிமானம் ஆவதில்லை. அதனால் இரவு நேர உணவு வகைகளை பலரும் தவிர்த்து வருகிறார்கள். பருப்பு வகைகள் நல்ல சத்துக்கள் கொண்டதாக இருக்கிறது.

    அனைத்து உணவு நிபுணர்களும் பருப்பு வகை உணவு உண்பதற்கு எந்த கட்டுப்பாடும் பெரிய அளவில் விதிப்பதில்லை. ஆனால் பருப்பு வகைகளில் அதிகமான கலோரிகள் இருப்பதால் இரவில் பருப்பு வகைகளை சாப்பிடலாமா என்று பலருக்கும் குழப்பங்கள் நீண்டுகொண்டே இருக்கிறது. ஒரு கப் எத்தனை கலோரிகள் இருக்கிறது அதை சாப்பிடலாமா என்று பலருக்கும் சந்தேகங்கள் இருந்துகொண்டே இருக்கிறது. வட இந்தியாவில் பலரும் பருப்பு ஒரு உணவாகவே சாப்பிட்டு வருவார்கள். தென்னிந்தியாவில் பருப்பை சாம்பார் வகைகள் வடிவில் சாப்பிடுகிறோம்.

    இட்லி, தோசை, மதிய உணவு போன்ற அனைத்திற்கும் சாம்பார் உபயோகம் செய்கிறோம். அதிலும் பருப்பு இருக்கின்றது எனவே அனைத்து இந்தியர்கள் உணவிலும் பருப்பு இருந்து கொண்டே இருக்கிறது. ஆந்திராவில் சாப்பாட்டில் பருப்பு பொடி கலந்து சாப்பிடுவார்கள். இப்படி பருப்பு பலவகைகளில் நன்மை செய்தாலும் அதில் அதிகமான கலோரி உள்ளது. உடல் எடை குறைப்பவர்களுக்கு அது தடையாக இருக்குமா என்று சந்தேகம் இருக்கிறது.

    இரவில் பருப்பு சாப்பிடலாம் ஆனால் சிறிய அளவில் சாப்பிட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள் நிபுணர்கள். அதிலும் முக்கியமாக பாசிப்பருப்பை சேர்த்துக் கொள்ளலாம் என்று குறிப்பிடுவார். பாசிப்பருப்பு ஓரளவுக்கு எளிதாக ஜீரணம் ஆகக் கூடியது. இரவு நேரங்களில் அனைத்து விதமான உணவு வகைகளையும் சாப்பிடலாம். இரவு தூங்குவதற்கு மூன்று மணி நேரங்களுக்கு முன்பு சாப்பிட்டுவிட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

    இரவு நேர உணவை மிகவும் லேசான உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். பருப்புடன் சேர்த்து மிகவும் அதிகமான உணவை உட்கொள்வதே குறைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்ற உணவுகளை இரவு குறைத்துக் கொள்ள வேண்டும். இரவில் குறைவாக சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.

    ஆயுர்வேதம் என்பது மூன்று தூண்களை கொண்டது. வாதம், பித்தம், கபம் எனப்படும். சில பருப்பு வகைகள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். எளிதில் ஜீரணம் ஆவதில் சிக்கலாக இருக்கும் ஒருசில பருப்பு வகைகள் லேசானதாக இருக்கும். இரவில் எளிதாக ஜீரணம் ஆகிவிடும். அதிகமாக இரவில் பருப்பு எடுத்துக் கொள்வது நம் இரவு நேரங்களை இடைஞ்சல் செய்யும். சரியான ஜீரணம் ஆகாமல் அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.. மேலும் தோசை போன்ற உணவிற்கு பருப்பை இலேசாக எடுத்துக் கொள்வதில் எந்தவித தவறும் இல்லை.

    இரவில் பருப்பு சாப்பிடுவது தவறு இல்லை, ஆனால் மிகவும் குறைந்த அளவில் சாப்பிட வேண்டும். பின்பு பொரித்த உணவுகள், பாதாம், சீஸ் பனீர், பட்டர், நெய் போன்ற உணவுகளை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படியே சாப்பிட்டாலும் மிகவும் குறைந்த அளவில் சாப்பிட வேண்டும் தூங்குவதற்கு சரியாக மூன்று மணி நேரங்களுக்கு முன்பு சாப்பிட வேண்டும்.

    இரவு பருப்பு சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் பாசிப்பருப்பு உபயோகம் செய்யலாம். பாசிபருப்பு சாம்பார் போன்றவையை நாம் எடுத்துக் கொள்ளலாம். பாசிப்பருப்பு எளிதாக ஜீரணம் ஆகக் கூடியதாக இருக்கிறது.

    Next Story
    ×