என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பழங்களை நீரில் ஊறவைத்த பின் சாப்பிடுவது நல்லது
Byமாலை மலர்16 July 2019 7:27 AM GMT (Updated: 16 July 2019 7:27 AM GMT)
பழங்களின் மேல் தெளிக்கப்பட்டு இருக்கும் பூச்சி கொல்லிகள், உரங்கள் ஆகியவற்றை நீக்க பழங்களை நீரில் ஊற வைப்பது சிறந்த வழியாகும்.
உணவின் தன்மையை பொருத்து தான் நாம் அவற்றை வகைப்படுத்த வேண்டும். சில உணவுகள் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். சில உணவுகள் நமது முழு உடல் அமைப்பையும் மாற்றம் பெறச் செய்யும். பெரும்பாலும் இந்த வகையை சேர்ந்தது தான் பழங்களும்.
நமக்கு பிடித்த பழங்களை எந்நேரமும் சாப்பிட்டு கொண்டே இருப்போம். பழங்களினால் கிடைக்கும் ஆரோக்கிய நலன்கள் ஏராளம். காய்கறிகளில் இருக்கும் சத்துக்கள் தான் பழங்களிலும் உள்ளன. சாப்பிடும் காய்கறி மற்றும் பழங்களை நீரில் அலசி சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டாகும். குறிப்பாக பழங்களை சாப்பிடுவதற்குமுன் நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் உடலுக்கு நிறைய நலன்கள் கிடைக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன.
பழங்களின் மேல் தெளிக்கப்பட்டு இருக்கும் பூச்சி கொல்லிகள், உரங்கள் ஆகியவற்றை நீக்க பழங்களை நீரில் ஊற வைப்பது சிறந்த வழியாகும். அவ்வாறு செய்தால் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.
கண் எரிச்சல், சரும பிரச்சினைகள், சுவாச கோளாறுகள் போன்ற பாதிப்புகள் உருவாவதற்கு முக்கிய காரணமே இந்த வகையான பூச்சி கொல்லிகள் தான். நீரில் அதிக நேரம் பழங்களை ஊற வைப்பதால் இந்த பிரச்சினைகளை தவிர்த்து விடலாம். பொதுவாகவே பழங்களை வெறும் நீரினால் அலசுவது சிறந்த முறையல்ல. அதற்கு மாறாக 3 முதல் 4 மணி நேரம் நீரில் ஊற வைப்பது சிறந்தது. இவ்வாறு செய்வது உடல் ஆரோக்கியத்தை நலமாக வைத்து கொள்ளும்.
இதுபோன்று நீரில் ஊற வைப்பதால் பழங்களின் தட்பவெப்பம் சீராக இருக்கும். குறிப்பாக இவை வெப்ப நிலையை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம். பப்பாளி, மாம்பழம், தர்பூசணி போன்ற பழங்கள் அதிக அளவில் வெப்பத்தை உற்பத்தி செய்யும். இவ்வாறு நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் நமது உடலில் இவை வெப்பத்தை உருவாக்காமல் பார்த்து கொள்ளலாம். இது போன்று பழங்களை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் செரிமான கோளாறுகளை தடுக்க முடியும். மேலும், வயிற்று போக்கு, நோய் தொற்றுகள் ஏற்படாமல் இருப்பதையும் இதனால் தடுக்க இயலும்.
நமக்கு பிடித்த பழங்களை எந்நேரமும் சாப்பிட்டு கொண்டே இருப்போம். பழங்களினால் கிடைக்கும் ஆரோக்கிய நலன்கள் ஏராளம். காய்கறிகளில் இருக்கும் சத்துக்கள் தான் பழங்களிலும் உள்ளன. சாப்பிடும் காய்கறி மற்றும் பழங்களை நீரில் அலசி சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டாகும். குறிப்பாக பழங்களை சாப்பிடுவதற்குமுன் நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் உடலுக்கு நிறைய நலன்கள் கிடைக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன.
பழங்களின் மேல் தெளிக்கப்பட்டு இருக்கும் பூச்சி கொல்லிகள், உரங்கள் ஆகியவற்றை நீக்க பழங்களை நீரில் ஊற வைப்பது சிறந்த வழியாகும். அவ்வாறு செய்தால் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.
கண் எரிச்சல், சரும பிரச்சினைகள், சுவாச கோளாறுகள் போன்ற பாதிப்புகள் உருவாவதற்கு முக்கிய காரணமே இந்த வகையான பூச்சி கொல்லிகள் தான். நீரில் அதிக நேரம் பழங்களை ஊற வைப்பதால் இந்த பிரச்சினைகளை தவிர்த்து விடலாம். பொதுவாகவே பழங்களை வெறும் நீரினால் அலசுவது சிறந்த முறையல்ல. அதற்கு மாறாக 3 முதல் 4 மணி நேரம் நீரில் ஊற வைப்பது சிறந்தது. இவ்வாறு செய்வது உடல் ஆரோக்கியத்தை நலமாக வைத்து கொள்ளும்.
இதுபோன்று நீரில் ஊற வைப்பதால் பழங்களின் தட்பவெப்பம் சீராக இருக்கும். குறிப்பாக இவை வெப்ப நிலையை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம். பப்பாளி, மாம்பழம், தர்பூசணி போன்ற பழங்கள் அதிக அளவில் வெப்பத்தை உற்பத்தி செய்யும். இவ்வாறு நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் நமது உடலில் இவை வெப்பத்தை உருவாக்காமல் பார்த்து கொள்ளலாம். இது போன்று பழங்களை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் செரிமான கோளாறுகளை தடுக்க முடியும். மேலும், வயிற்று போக்கு, நோய் தொற்றுகள் ஏற்படாமல் இருப்பதையும் இதனால் தடுக்க இயலும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X